search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvSL"

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் 21 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அம்லா 61 பந்தில் 65 ரன்களும், டு பிளிசிஸ் 69 பந்தில் 88 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    வான் டெர் டஸ்சன் 40 ரன்களும், டுமினி 22 ரன்களும், பெலுக்வாயோ 25 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 26 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தென்ஆப்பிரிக்கா அணியும் எங்களால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க இயலும் என்பதை நிரூபித்துள்ளது.

    இதனையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டகாரர் குசல் பெரேரா 0 என்ற முறையிலும் அடுத்து வந்த திருமன்னே 10 ரன்களிலும் குசல் மெண்டிஸ் 37 ரன்களிலும் வெளியேறினார்கள். இந்நிலையில் குனரத்தினேவுடன் மேத்யுஸ்  ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இலங்கை அணி 170 ரன்கள் எடுத்திருந்த போது குனரத்தினே அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து களமிறங்கிய வீரரகள் வந்த வேகத்தில் திரும்பினர். மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தனஜெய டி செல்வா 5, ஜீவன் மெண்டிஸ் 18, ஸ்ரீவர்த்தனா 5, வண்டார்சே 3, லக்மல் 1, என வெளியேற பேரேரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இலங்கை அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அண்ட்லி 4 விக்கெட்டுகளை அள்ளினார். லுங்கி 2 விக்கெட்டும் ரபாடா, தாஹிர், டவினி, டுமினி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென்ஆப்பிரிக்கா. #SAvSL
    இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5-0 என தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

    முதலில் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணி 11.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறிக்கிட்டது.

    அதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபெற்றது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது இலங்கை அணி 17 ஓவரில் 183 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 35 பந்தில் 72 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கோடு இலங்கை களம் இறங்கியது.

    இலங்கை அணி 15.4 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.
    இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இம்ரான் தாஹிரின் சிறப்பாக பந்து வீச்சால், சூப்பர் ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (0), பெர்னாண்டோ (16), குசால் மெண்டிஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    கமிந்து மெண்டிஸ் 41 ரன்களும், உடானா 6 பந்தில் 12 ரன்களும் அடிக்க இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக் (13), டு பிளிசிஸ் (21), வான் டெர் டஸ்சன் (34), டேவிட் மில்லர் (41) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் தென்ஆப்பிரிக்கா எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இலங்கை அணியின் துல்லியமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா இறுதிக் கட்டத்தில் திணறியது. இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இரு அணிகளின் ஸ்கோரும் சமமாக இருந்ததால், சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. மில்லர் மற்றும் டஸ்சன் ஆகியோர் பேட்டிங் செய்ய மலிங்கா பந்து வீசினார். மில்லர் 3-வது பந்தில் சிக்சரும், 5-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார். இதனால் இலங்கை அணிக்கு ஒரு ஓவரில் 15 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்து வீச இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ, திசாரா பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.

    இம்ரான் தாஹிரின் துல்லியமாக பந்து வீசினார். இதனால் இலங்கை வீரர்களால் பவுண்டரியோ, சிக்சரோ அடிக்க முடியவில்லை. ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி பெற்றது.
    இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன்களாக டு பிளிசிஸ், டுமினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி 22-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதியும் நடக்கிறது.

    முதல் போட்டிக்கு டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரண்டு டி20 போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டுமினி கடைசி போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கேப் டவுனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இலங்கை 0-5 என ஒயிட்வாஷ் ஆனது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. மெண்டிஸ் அதிக பட்சமாக 56 ரன்னும், பெரேரா 33 ரன்னும், உடானா 32 ரன்னும் எடுத்தனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், நார்ட்ஜி தலா 2 விக்கெட்டும் நிகிடி, பெலுக்வாயோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து இருந்தபோது மின் விளக்கில் கோளாறு ஏற்பட்டது. மின் விளக்கில் ஏற்பட்ட கோளாறு சரியாகாததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. இந்த விதிப்படி தென்ஆப்பிரிக்காவுக்கு 28 ஓவர்களில் 95 ரன் இலக்காக இருந்தது. ஆனால் அந்த அணி 135 ரன் எடுத்து இருந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கிராம் 67 ரன் எடுத்தார். மலிங்கா, பெரேரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.



    ஏற்கனவே 4 ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியுடன் ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    இலங்கை அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 19-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் சுரங்கா லக்மல், வாண்டர்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். #SAvSL
    இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இர்ணடு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி இலங்கை அணி வரலாற்று சாதனைப் படைத்தது.

    தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் முடிவடைந்த நான்கு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. கடைசி போட்டி 16-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.

    அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டியில் மோசமான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியதால், டி20 தொடருக்கான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் மற்றும் வாண்டர்சே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.

    இந்நிலையில் 4-வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் குயின்டான் டி காக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டு பிளிசிஸ் 43 ரன்கள் சேர்த்தார்.



    மில்லர், டுமினி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையாக 25 மற்றும் 31 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இலங்கையை 5-0 என ஒயிட்வாஷ் செய்யும்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 189 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையின் விக்கெட் மளமளவென சரிந்தது. அவிஷ்கா பெர்னாண்டே 29 ரன்களும், உபுல் தரங்கா 4 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிய இலங்கை அணி 97 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 9-வது வீரராக களம் இறங்கிய உடானா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் இலங்கை 150 ரன்னைத் தாண்டியது.

    உடானா 57 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை 189 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோர்ட்ஜெ 3 விக்கெட்டும் பெலுக்வாயோ 2 விக்கெட்டும் ஸ்டெயின், லுங்கி நிகிடி, ஷமிசி, டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இலங்கை தொடருக்கான கடைசி இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார். #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    கடைசி இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஹசிம் அம்லா இடம் பிடத்திருந்தார். தற்போது அவரது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் கடைசி இரண்டு போட்டிக்கான அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரீசா ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    4-வது போட்டி வருகிற 13-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனிலும் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் மார்கிராம், கடந்த நவம்பர் மாத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெறாமல் இருந்தார்.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



    காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜேபி டுமினியும், மூத்த வீரருமான அம்லாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. குயின்டான் டி காக் (விக்கெட்), 4. ஜேபி டுமினி, 5. இம்ரான் தாஹிர், 6. மார்கிராம், 7. டேவிட் மில்லர், 8. லுங்கி நிகிடி, 9. அன்ரிச் நோர்ட்ஜி, 10. பெலுக்வாயோ, 11. பிரிட்டோரியஸ், 12. ரபாடா, 13. ஷமிசி, 14. டேல் ஸ்டெயின், 15. வான் டெர் டஸ்சன்.
    குயின்டான் டி காக்கின் அபார சதத்தால 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #SAvSL
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14-வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 121 ரன்களும் (108 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வாண்டர் டஸ்சன் 50 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

    அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 24 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.



    இதை நோக்கி ஆடிய இலங்கை அணியால் 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் நாளை மறுதினம் போர்ட்எலிசபெத்தில் நடக்கிறது.
    இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். அம்லாவிற்கு இடமில்லை. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் 2. டி காக் 3. ரீசா ஹென்ரிக்ஸ் 4. இம்ரான் தாஹிர் 5. டேவிட் மில்லர் 6. வியான் முல்டர் 7. லுங்கி நிகிடி 8. அன்ரிச் நோர்ட்ஜே 9. பெலுக்வாயோ 10. பிரிட்டோரியஸ் 11. ரபாடா 12. ஷம்சி 13. ஸ்டெயின் 14. வான் டெர் டஸ்சன்.
    ×