search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 World Cup Cricket"

    நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இதற்குமுன் 10 அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதின.

    முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ரன்னில் சுருண்டது, பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இந்த அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து சில சந்தேகம் உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட கேப்டன் விராட் கோலி முடிவு செய்ததார்.

    இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது, இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1) மற்றும் ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் நேற்றைய வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.

    ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது தென்ஆப்பிரிக்கா போட்டியின்போதுதான் தெரியவரும்.
    10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதைத்தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

    இதுவரை 11 உலகக்கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5 முறையும், வெஸ்ட்இண்டீஸ், இந்தியா அணிகள் தலா 2 தடவையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.



    12-வது உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடர் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் நுழைந்தன.

    போட்டி அமைப்பில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1992 உலகக்கோப்பையில் பின்பற்றப்பட்ட முறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும்.

    ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.



    ‘லீக்’ ஆட்டம் ஜூலை 6-ந்தேதியுடன் முடிகிறது. முதல் அரையிறுதி (1-வது இடம் பிடிக்கும் அணி VS 4-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 9-ந்தேதியும், 2-வது அரைஇறுதி (2-வது இடம் பிடிக்கும் அணி - 3-வது இடம் பிடிக்கும் அணி) ஜூலை 11-ந்தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந்தேதியும் நடக்கிறது.

    லண்டன் ஓவல் மைதானத்தில் தொடக்க விழா நடக்கிறது. முதல் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து- டு பிளிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இரு அணியும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தரவரிசையில் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை ஜூன் 5-ந்தேதி சந்திக்கிறது.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் 3-வது தடவையாகவும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் 2-வது தடவையாகவும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளன.

    கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து இதுவரை உலகக்கோப்பையை வென்றது இல்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை நடத்துவதால் முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதேபோல தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்துக்கு காத்திருக்கின்றன.



    போட்டி அமைப்பு முறை சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் இருப்பதால் முன்னணி அணிகள் அரைஇறுதியில் நுழைவதில் சவால் இருக்கலாம். வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.

    ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகள்தான் மீண்டும் கோப்பையை வெல்லுமா? சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது.

    ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். இதனால் ரசிகர்களுக்கு இந்த கிரிக்கெட் திருவிழா நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
    வங்காளதேசத்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், டோனி சதம் அடித்து அசத்தினர்.
    கார்டிப்:

    10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இந்திய அணி, வங்காளதேசத்தை கார்டிப்பில் எதிர்கொண்டது. பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளிலும் தலா 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மோர்தசா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அங்கு நிலவிய மேகமூட்டமான சூழல் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு உதவியது. ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஆனால் போக போக ஆடுகளத்தன்மை பேட்டிங்குக்கு உகந்ததாக மாறியது. கேப்டன் விராட் கோலி தனது பங்குக்கு 47 ரன்கள் (46 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். விஜய் சங்கர் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.


    102 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (22 ஓவர்) பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிய நிலையில் 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், டோனியும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். அவ்வப்போது பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட இவர்கள் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். 4-வது பேட்டிங் வரிசையில் யார்? ஆடுவார் என்ற புதிருக்கு ராகுலின் பேட்டிங் விடை அளிப்பதாக அமைந்தது.

    அணியின் ஸ்கோர் 266 ரன்களாக உயர்ந்த போது லோகேஷ் ராகுல் 108 ரன்களில் (99 பந்து, 12 பந்து, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். மறுமுனையில் டோனி அதிரடியில் பின்னியெடுத்தார். அபு ஜெயத்தின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து மூன்று இலக்கத்தை கடந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்த டோனி 113 ரன்களில் (78 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), ஷகிப் அல்-ஹசனின் சுழலில் ‘கிளன் போல்டு’ ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 21 ரன்கள் எடுத்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 7 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வங்காளதேச அணி மொத்தம் 9 பவுலர்களை பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 90 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷாய் ஹோப் சதம் அடிக்க லிவிஸ் மற்றும் அந்த்ரே ரஸல் அரைசதம் அடிக்க வெஸ்ட் இணடீஸ் 421 ரன்கள் குவித்தது.
    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.


    அந்த்ரே ரஸல்

    கிறிஸ் கெய்ல் 22 பந்தில் 36 ரன்களும், லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 32 பந்தில் 47 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.


    ஹோல்டர்

    பின்னர் 422 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், எம்எஸ் டோனி சதம் அடித்த வங்காளதேசத்திற்கு 360 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
    உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை கார்டிபில் எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 1 ரன் எடுத்த நிலையிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 102 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



    லோகேஷ் ராகுல் 99 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எம்எஸ் டோனி 78 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 113 ரன்கள் குவித்து வெளியேறினார். இருவரின் சதத்தால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.

    பின்னர் 360 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    ஆப்கானிஸ்தானை 160 ரன்னில் சுருட்டியதுடன், 17.3 ஓவரில் சேஸிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    இங்கிலாந்து அணி உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்டது. லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜாப்ரா ஆர்சர் (3), ஜோ ரூட் (3) ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ரன்னில் சுருண்டது.

    ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. முகமது நபி 44 ரன்களும், தவ்லாட் ஜத்ரான் 20 ரன்களும் அடிக்க ஆப்கானிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    அதன்பின் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆட்டமிழக்காமல் 46 பந்தில் 89 ரன்கள் குவிக்க 17.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளதால் ஐசிசி மகிழ்ச்சியில் உள்ளது.
    ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற வியாழக்கிழமை (மே 30-ந்தேதி) தொடங்கி, ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    ‘ரவுண்ட் ராபின்’ முறை இந்த உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதால், 45 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரையிறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என 48 ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன.

    இதற்கான டிக்கெட்டை ஐசிசி விற்பனை செய்து வருகிறது. ரசிகர்கள் எளிமையான வகையில் டிக்கெட்டுக்களை வாங்குவதற்கான வழிவகைகளை ஐசிசி செய்து கொடுத்துள்ளது. அதன் விளைவாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான இயக்குனர் ஸ்டீவ் எல்வோர்த்தி தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகைகைள் டிக்கெட்டுக்கள் வாங்கியுள்ளனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு லட்சம் பேர் 16 வயதிற்குட்பட்டோர் என தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள மார்க் வுட்டுக்கு எந்த பிரச்சனையில் இல்லை என ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    இங்கிலாந்து அணி நேற்றுமுன்தினம் உலகக்கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அப்போது வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4-வது ஓவரை வீசும்போது அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் இங்கிலாந்து அணி நிர்வாகம் முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்து காயத்தின் வீரியம் குறித்து தெரிந்து கொள்ள முடிவு செய்தது.

    இதனால் அவரின் கணுக்கால் பகுதியில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் பயப்படக்கூடிய அளவிற்கு காயம் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி நிம்மதி அடைந்துள்ளது.
    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி வரும் பாபர் ஆசம், பாகிஸ்தான் அணியின் விராட் கோலி என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கூறியதாவது:-

    பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் ஆசம் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி ஆவார். பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இளம் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பாபர் ஆசம் ஏற்கனவே பல சாதனைகளை புரிந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிவேகத்தில் ஆயிரம் ரன்னை (21 போட்டி) கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வமற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா நாளை வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கி, ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 நாடுகளும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்-  வங்காளதேசம் அணிகள் மோதிய நேற்றைய பயிற்சி ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி கடந்த 25-ந்தேதி நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.

    நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மட்டுமே நேர்த்தியாக விளையாடினார்கள். இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.



    இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை (28-ந்தேதி) எதிர் கொள்கிறது. இதனால் வங்காள தேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அவசியமாகும். இதில் திறமையாக ஆடினால்தான் உலகக்கோப்பையில் நம்பிக்கையுடன் விளையாட முடியும். இதனால் இந்திய வீரர்கள் உத்வேகத்துடன் விளையாடுவார்கள்.

    நாளை நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- இலங்கை, இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    உலகக்கோப்பைக்கான இன்றைய இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் (Warm-Up) நடைபெற்று வருகின்றன. இன்று பாகிஸ்தான் - வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    கார்டிஃபில் பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான போட்டி நடைபெற இருந்தது. மழையால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டோலில் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தென்ஆப்பிரிக்கா 9.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் தடைபட்டது. பின்னர் மழை நின்றதும், ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது.

    12.4 ஓவரில் தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
    உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து, இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற வியாழக்கிழமை (30-ந்தேதி) இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தொடருக்கு முன் ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி இந்தியா நேற்று முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்தியா 179 ரன்னில் சுருண்டது. டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா (2), தவான் (2), விராட் கோலி (18), லோகேஷ் ராகுல் (6) சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 297 ரன்கள் குவித்தது. பின்னர் 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 285 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    பலமான பேட்டிங் ஆர்டரையும், தலைசிறந்த பந்து வீச்சு யூனிட்டையும் வைத்துள்ள இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்று எனக் கருதப்படுகிறது ஆனால் பயிற்சி ஆட்டத்திலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



    உலகக்கோப்பைக்குச் செல்லும் அணிகள் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களைத்தான் கொண்டு செல்லும். ஆனால் ரன் குவிப்புக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் 179 ரன்ளில் சுருண்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து அணி வீரர்கள் அதன் சொந்த மைதானத்தில் ரன்களை மலைபோல் குவித்து எதிரணியை ஆட்டம் காண வைத்து விடுகிறார்கள். ஆனால் நேற்று ஆஸ்திரேலியாவிடம் சிக்கிச் கொண்டதது. இதனால் முதன்முறையாக உலகக்கோப்பையை வெல்லும் கனவு நிறைவேறாமல் போய் விடுமோன? என்று ரசிகர்கள் மனதில் கவலை தொற்றிக் கொண்டது.
    ×