விராட் கோலி - ரோகித் சர்மா இடையே நெருடல்: கேப்டன்ஷிப்பை பகிர்ந்து அளிக்க பிசிசிஐ முடிவு?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் கேப்டன்ஷிப்பை பகிர்ந்து அளிக்க இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.
ரோகித் சர்மா விராட் கோலி
ரோகித் சர்மா விராட் கோலி
Published on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து உச்சநீதி மன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்க இருக்கிறது. அப்போது 2023 உலகக்கோப்பைக்கு எப்படி தயாராகுவது. அதற்கு செய்ய வேண்டியது என்னென்ன? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றோடு வெளியேறியது. அதன்பின் ஒருநாள் போட்டிக்கான அணியில் பல மாற்றங்கள் செய்து ஆட்டமுறையை மாற்றியது. அதன் பயனாகவே தற்போது அந்த அணி உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

அதுபோலவே 2023 உலகக்கோப்பைக்கான ஒருநாள் அணியை தற்போதில் இருந்து உருவாக்க பிசிசிஐ விரும்புகிறது. மேலும், அரையிறுதிக்குப் பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வீரர்கள் அறையில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் நெருடல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com