search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WTC final"

    • சமூக வலைதளத்தில் நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என சொல்லி இருந்தார்கள்.
    • இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன்.

    கோவை:

    அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது விவாதப் பொருளானது.

    இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான அஸ்வின் இது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    "நமது அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்களிப்பும் உள்ளது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன். இதற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். அப்போது சிறப்பாகவும் பந்து வீசி உள்ளேன்.

    கடந்த முறை எங்களது இங்கிலாந்து பயணத்தில் 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. அப்போது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என ஆடும் லெவனில் பவுலர்கள் இருந்தனர். அதுவே இந்த முறையும் அவர்களது எண்ணமாக இருந்திருக்கலாம். போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே நான் ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதினேன்.

    கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வெவ்வேறு விதமான அளவுகோலின் கீழ் நடத்துவது வழக்கம். சிலருக்கு 20 போட்டிகள், சிலருக்கு 10 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன். அதற்கு தயாராகவும் இருந்தேன். அது என் கையிலும் இல்லை. நான் யார்? என்னால் என்ன செய்ய முடியும் என்பது மட்டுமே என் கையில் உள்ளது.

    சமூக வலைதளத்தில் நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என சொல்லி இருந்தார்கள். ஆனால், அதில் நான் உறுதியாக இல்லை. நான் எனது சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருக்கலாம். இறுதிப் போட்டி முடிந்ததும் எனது கவனம் டிஎன்பிஎல் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    ஓவலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
    • சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார்.

    அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்ரீகர் பரத் 23 ரன்னில் வெளியேறினார். உமேஷ் யாதவ் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "அமைதியே மாபெரும் பலத்தின் தோற்றுவாய்" என்று லாவோட்சுவின் பொன்மொழியை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
    • 2வது இன்னிங்சில் இந்தியா 234 ரன்களில் ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்ரீகர் பரத் 23 ரன்னில் வெளியேறினார். உமேஷ் யாதவ் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், போலண்ட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 4ம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.
    • 5ம் நாள் தொடக்கத்தில் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.

    • இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அவுட் சர்ச்சை ஆனது.
    • ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த கடின இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிவருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 18 ரன்கள் இருந்த போது அவுட் ஆனார். அவரது அவுட் சர்ச்சை ஆனது. ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை கில் தடுத்து ஆட முயற்சித்தபோது, எட்ஜாஜி தாழ்வாக சென்ற பந்தை கேமரூன் கிரீன் இடது கையால் பிடித்தபடி தரையில் விழுந்தார். அப்போது பந்தை பிடித்து இருந்த அவரது கை தரையில் உரசியது. இதனால் கில் வெளியேறாமல் நின்றார். உடனடியாக கள நடுவர்கள் 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தனர். வீடியோ பதிவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த 3-வது நடுவர் கேட்ச் சரியானது என்று உறுதி செய்ததால் கில் வெளியேறினார்.

    அவரை அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்த புஜாரா சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே புஜாரா 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. அவ்வப்போது பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது.

    இதனால் இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.  இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

    விராட் கோலி 44 ரன்னிலும் ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த பார்ட்னர்ஷிப் நெருக்கடியை சமாளித்து இன்று நம்பிக்கை அளித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

    • கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
    • இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா களமிறங்கினர். கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். போலன்ட் பந்துவீச்சில் கெமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து கில் அவுட் ஆனார். ஆனால், கிரீன் பிடித்த கேட்ச் சர்ச்சைக்குள்ளானது. பந்து தரையில் பட்டது போல இருந்தது. அதேவேளை, பந்து தரையில் படுவதற்குள் கிரீனின் கைவிரல் பந்திற்கு மேல் இருந்தது போலும் காட்சியளித்தது. இதன் காரணமாக 3ம் நடுவர் அவுட் கொடுத்தார். இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கிரீன் நோக்கியும், ஆஸ்திரேலிய வீரர்கள் நோக்கியும் 'மோசடி... மோசடி... மோசடி' என கூச்சலிட்டனர். இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (5-ம் நாள்) ஆட்டத்தின் இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.
    • கைவசம் 7 விக்கெட்டுகள் இந்திய அணிக்கு உள்ளது.

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

    இதனையடுத்து நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். சுப்மன் கில் 18 ரன்கள் இருந்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே புஜாரா 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவ்வப்போது பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது.

    இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான நாளை இந்திய அணிக்கு 280 ரன்கள் தேவை. விராட் கோலி 44 ரன்னிலும் ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் இந்திய அணிக்கு உள்ளது.

    • இந்தியா வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
    • தேநீர் இடைவேளை வரை இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர். ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதையடுத்து, இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர்.

    தேநீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 18 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 276 ரன்கள் எடுத்தது.
    • 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர். ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார்.

    அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.
    • 2-வது இன்னிங்சில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது. ரகானே 89 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஜடேஜா 48 ரன்னில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

    லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கேமரூன் கிரீன் 7 ரன்னுடனும், லபுசேன் 41 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடினார்.

    நான்காம் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 201 ரன்களை எடுத்து 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 41 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலியா அணி 44 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
    • இந்தியா சார்பில் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

    சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய ஷர்துல் தாகூர் அரை சதமடித்த நிலையில் 51 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட்டாகினார். உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்தார். லபுசேனே 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆஸ்திரேலியா அணி தற்போது 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்துள்ளது.
    • ஆஸ்திரேலியா 275 ரன்களுக்கும் மேலாக முன்னிலை பெற்றுள்ளது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

    சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷர்துல் தாகூர் அரை சதமடித்த நிலையில் 51 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட்டாகினார். உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார்.

    ஆஸ்திரேலியா அணி தற்போது 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்து, 276 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ், உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×