என் மலர்
நீங்கள் தேடியது "ரபாடா"
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரபாடா விலகி உள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுதாத்தியில் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் காயம் காரணமாக ரபடா ஆடவில்லை. 2-வது டெஸ்டில் இருந்தும் அவர் விலகி உள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார்.
ரபாடாவை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர், மற்றும் யான்சன் ஆகிய இருவரும் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் தோள் பட்டை மற்றும் மூட்டுவலி காரணமாக பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
29 வயதான லுங்கி இங்கிடி, கடைசியாக ஜூன் 2025-ல் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடினார். அந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
2018-ல் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய இங்கிடி, இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது வருகை, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை.
- எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார். என்றாலும் யான்சன் வேகப்பந்து வீச்சில் அசத்தினார். ரபாடாவுக்கு பதிலா களம் இறங்கிய போஸ்ச் 2ஆவது இன்னிங்சில் பவுமா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய மண்ணில் 15 வருடங்களுக்கு மேல் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் யார் வெளியே இருக்கிறார்கள் என்பது முக்கியமான விசயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரபாடா கூறியதாவது:-
யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை. எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும். கேப்டன் பவுமா எங்களுக்கு முக்கியமானவர். ஆனால், அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவதில்லை. நான் கொல்கத்தா போட்டியில் விளையாடவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பவுமா விளையாடவில்லை. அதில் தென்ஆப்பிரிக்கா 1-1 என தொடரை சமன் செய்தது. யார் மைதானத்தில் இருந்து வெளியேறினால் அது பெரிய விசயம் அல்ல. உள்ளே உள்ள மற்ற வீரர்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு ரபாடா தெரிவித்தார்.
- கொல்கத்தா டெஸ்டில் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார்.
- காயம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால், 2ஆவது டெஸ்டில் களம் இறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தென்ஆப்பிரிக்கா வீரர்கள் முதல் பயிற்சி செசனை தொடங்கினர். அப்போது ரபாடாவிற்கு இடுப்பு பகுதியில் (விலா எலும்பு) காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று டெஸ்ட் தொடங்குவதற்கு சற்று முன், இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
ரபாடா காயம் குறித்து தென்ஆப்பிரிக்கா அணி மீடியா மானேஜர் கூறுகையில் "கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி செசன்போது ரபாடா காயம் அடைந்தார். அவருக்கு புதன்கிழமை காலை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், பிட்னஸ் டெஸ்டும் செய்யப்பட்டது. அவர் வலி இருப்பதாக உணர்ந்தார். இறுதியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இன்னும் மருத்துவக் குழுவுடன் கூடுதல் மதிப்பீடுகளுக்கு உட்பட்டு வருகிறார்" என்றார்.
ரபாடா இடம் பெறாததால், கார்பின் போஸ்ச் அணியில் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது.
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
- ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவாஜா 20 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
- ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். ரபாடா பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஜோடி திணறியது. 20 பந்துகளை சந்தித்து கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார்.
இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தபோதிலும் ரன்கள் குவிக்க இயவில்லை. லபுசேன் 17 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 56 பந்துகளை எதிர்கொண்டு, தென்ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்தார்.

4ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஹெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 23.2 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
முதல் செசனில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு களம் இறங்கிய உடனே ஸ்மித் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலியா 150 ரன்னுக்குள் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது.
ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். யான்சன் 7.2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக விளையாடி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
- ஆர்சிபிக்கு எதிராக நேற்று விளையாடவில்லை.
ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சொந்த நாடு திரும்பியுள்ளார். முக்கியமான தனிப்பட்ட காரணமாக ரபாடா சொந்த நாடு திரும்பியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் அணியில் இணைவார் என்பதை தெரிவிக்கவில்லை.
ரபாடா குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். பஞ்சாப் அணிக்கெதிராக 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மும்பைக்கு எதிராக 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சிபி-க்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பங்கேற்கவில்லை.
ரபாடாவுக்குப் பதிலாக அர்ஷத் கான் களம் இறங்கினார். இவர் விராட் கோலியை வீழ்த்தினார்.
குஜராத் அணியில் கோயட்சே, கிளென் பிளிப்ஸ் ஆகியோர் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் உள்ளனர். கோயட்சே இன்னும் முழுத்தகுதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
- இந்த சீசனில் 5 போட்டிகள் முடிந்த நிலையில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
- போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டி கடைசி ஓவர் வரை வாணவேடிக்கையாக இருந்தது.
முதலில் பேடிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப்பின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவானது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி வரை போராடி 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் தற்போது வரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதிலாக பேட்டிங் என்று சொல்லலாம் என தென் ஆப்பிரிக்கா அணியின் வீரரும் குஜராத் அணியின் வீரருமான ரபாடா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக உள்ளது. போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று சொல்லுங்கள் அது தான் சரியாக இருக்கும்.
சில சாதனைகள் முறியடிக்கப்படுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது பரவாயில்லை. அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் நல்லது. ஆனால் குறைந்த ஸ்கோரிங் ஆட்டங்களும் அப்படித்தான். பேட்டிங் மற்றும் பந்துக்கு இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று ரபாடா ஆதங்கத்துடன் கூறினார்.
- வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும்.
- தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்டில் 258, ஒருநாள் போட்டியில் 157, டி20-யில் 58 என ஆக மொத்தம் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் அதிகமான போட்டிகளில் விளையாடினால் ரபாடா பல சாதனைகளை படைப்பார் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதினி கூறியதாவது:-
ரபடா மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவரால் 400 விக்கெட்டை தாண்டி சாதனைகளை படைக்க முடியும். ஆனால் வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும். தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்க வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்தவர் ஸ்டெய்ன். அவர் 439 விக்கெட் எடுத்துள்ளார். பொல்லாக் 421 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், நிதினி 390 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார். ரபடா 285 விக்கெட்டுடன் 7-வது இடத்தில் உள்ளார். அவர் குறைவான டெஸ்ட்களில் விளையாடி உள்ளார்.
- 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடமாட்டார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் (கால் தசையில் தொற்று) காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த நாடு திரும்பிவிட்டார். இதனால் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும், 19-ந்தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ரபாடாவின் காயம் குறித்து மருத்து குழு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இடம் பெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், 15 பேர் கொண்ட அணியில் அவர் மட்டும்தான் கருப்பின வீரர் ஆவார். இது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் கொள்கைப்படி ஆறு வெள்ளை நிற வீரர்களும், இரண்டு கருப்பு நிற வீரர்களும் இடம்பெற வேண்டும். ஆறு வெள்ளை நிற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் கருப்பு நிற வீரர்களில் ரபாடா மட்டுமே இடம் பிடித்துள்ளதால் அவர் அனைத்து போட்டிகளிலும் களம் இறங்க வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
லுங்கி நிகிடி ரிசர்வ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அன்ரிச் நோர்ஜே, ஜெரால்டு கோயட்சி, மார்கோ யான்சன், ஓட்டினியல் பார்ட்மேன் ஆகி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஆவார்.
- வங்கதேசத்துக்கு எதிராக ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்ததுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார். அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா ந்தினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.
மேலும் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் ரபாடா படைத்துள்ளார். அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் முறையே ரபாடா (11817 பந்துகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் (12602),
தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டேல் ஸ்டெய்ன் (12605), ஆலன் டொனால்ட் (13672) ஆகியோர் உள்ளனர்.
- வங்கதேசத்தில் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- வங்கதேசம் - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
- இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா படைத்தார்.
இதற்கு முன்பு பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 12602 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்து 11817 பந்துகளிலேயே ரபாடா 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.






