என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rabada"
- ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
- முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்த தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2 இடங்கள் முன்னேறி உள்ளார். இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரபாடா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா-அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் அப்ரிடி-பும்ரா 828 புள்ளிகளுடன் 4,5-வது இடங்களிலும் உள்ளனர். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.
- ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- எம்.ஐ. கேப்டவுன் அணியில் ரஷித்கான், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், காகிசோ ரபடா, டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கேப்டவுன்:
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகளையும் இந்திய தொழிலதிபர்களே வாங்கியுள்ளனர்.
முதலாவது தென்ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கிறது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்.ஐ. கேப்டவுன் அணியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா, இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தங்கள் அணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்சுக்கு சொந்தமான ஜோகன்னஸ்பர்க் அணியில் தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் 4 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 156 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது. ஐதராபாத் அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 15 ரன்னில் சுருண்டதால் பாதிப்பு ஏற்பட்டது. #IPL2019
இந்த ஆண்டின் கடைசி டெஸ்டில் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், ரபாடா பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
விராட் கோலி 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் கடந்த 135 நாட்களாக இருந்து வருகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் முதல் இடத்தை இழந்த ரபாடா மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வருடத்தில் 52 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு ரபாடாவும், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு எய்டன் மார்கிராமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எங்களது மிகப்பெரிய பிரச்சனையே பந்து வீச்சு யுனிட்டுதான். இது மிகமிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், அனுபவம் மிகப்பெரிய பிரச்சனைதான்.
எங்களுடைய டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால், அனைத்து வீரர்களும் 800-க்கும் மேற்பட்ட போட்டியில் விளையாடியுள்ளனர். அதேவேளையில், பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால், கடைசி நான்கு வீரர்கள் 150 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர்.
35 வயதானாலும் இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன்.
ரபாடா, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், வில்லியம் முல்டர் அவர்களுடைய ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடருக்கு கற்றுக் கொண்டிருக்கும்போதே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வது தேவையானது’’ என்றார்.
டேல் ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்காக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். டிக்வெல்லா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தரங்கா 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
குசால் பேரேரா
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பேரேரா தாக்குப்பிடித்து விளையாட, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்னிலும், ஜெயசூர்யா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 36 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.
6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேராவுடன், ஆல்ரவுண்டர் திசார பெரேரா ஜோடி ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. குசால் பெரேரா 81 ரன்களும், திசாரா பெரேரா 49 ரன்களும் எடுக்க இலங்கை அணி 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.
ரபாடா 8 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஷம்சி 8.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி தென்ஆப்பிரிக்க தொடரில் 158, 60, 53, 85 ரன்கள் வீதம் மொத்தம் 356 ரன்கள் சேர்த்து தொடர்நாயகன் விருது பெற்ற இலங்கை வீரர் கருணாரத்னே, டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா 3 இடங்கள் குறைந்து 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் (929 புள்ளி), 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் (903 புள்ளி), 3-வது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் (855 புள்ளி) நீடிக்கிறார்கள்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (882 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2-வது இடத்துக்கு இறங்கினார். இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரபடா 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (892 புள்ளி) மீண்டும் முதலிட அரியணையில் ஏறினார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 4-வது இடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5-வது இடமும் வகிக்கிறார்கள்.
இலங்கை தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 இடங்கள் உயர்ந்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார். கொழும்பு டெஸ்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தாத தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 5 இடங்களை பறிகொடுத்து 24-வது இடத்துக்கு (635 புள்ளி) பின்தங்கினார். கடந்த 11 ஆண்டுகளில் ஸ்டெயின் பெற்ற குறைந்த தரவரிசை புள்ளி இதுவாகும். #ICCTestRankings #Rabada
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும் தென்ஆப்பிரிக்கா ஸ்டெயின், ரபாடா, பிலாண்டர் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இவர்களுடன் மகாராஜ், ஷாம்சி ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளரும் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்திருந்தனர்.
இலங்கை அணியின் குணதிலகே, கருணார்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக கறங்கினார்கள். குணதிலகே 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா 11 ரன்னிலும், மெண்டிஸ் 24 ரன்னிலும் வெளியேறினார். ரபாடாவின் அச்சுறுத்தலான பந்து வீச்சை எதிர்கொள்ள இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.
அதன்பின் வந்த மேத்யூஸ் 1 ரன்னிலும், ஏஆர்எஸ் சில்வா டக்அவுட்டிலும் வெளியேற, இலங்கை அணி திணறியது. ஆனால், மற்றொரு தொடக்க வீரரான கருணாரத்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் அடித்தார். அவர் சதம் அடித்தாலும் இலங்கை அணியின் ஸ்கோர் உயர்ந்தபாடில்லை.
4 விக்கெட் கைப்பற்றிய ரபாடா
கடைநிலை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு ரன்கள் குவிக்க முயற்சி செய்தார். கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய சண்டகன் 25 ரன்னில ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கருணாரத்னே 222 பந்துகள் சந்தித்து 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் சண்டகன் உடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக காலே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஷாம்சி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்திலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று டு பிளிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. எங்களுடைய மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சுதான். குறிப்பாக நாங்கள் டேல் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்கள் எப்போதுமே விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் ஆவார்கள்.
எந்தவொரு சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆசியக் கண்டத்தில் டேல் ஸ்டெயின் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ரபாடா தங்கம். இவரால் எதையும் செய்ய இயலும். மேலும் கேஷவ் என்ற சுழற்பந்து வீச்சாளரை வைத்துள்ளோம்.
ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர் குறித்து யோசிப்போம்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்