என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rabada"

    • யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை.
    • எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார். என்றாலும் யான்சன் வேகப்பந்து வீச்சில் அசத்தினார். ரபாடாவுக்கு பதிலா களம் இறங்கிய போஸ்ச் 2ஆவது இன்னிங்சில் பவுமா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய மண்ணில் 15 வருடங்களுக்கு மேல் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் யார் வெளியே இருக்கிறார்கள் என்பது முக்கியமான விசயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரபாடா கூறியதாவது:-

    யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை. எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும். கேப்டன் பவுமா எங்களுக்கு முக்கியமானவர். ஆனால், அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவதில்லை. நான் கொல்கத்தா போட்டியில் விளையாடவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பவுமா விளையாடவில்லை. அதில் தென்ஆப்பிரிக்கா 1-1 என தொடரை சமன் செய்தது. யார் மைதானத்தில் இருந்து வெளியேறினால் அது பெரிய விசயம் அல்ல. உள்ளே உள்ள மற்ற வீரர்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு ரபாடா தெரிவித்தார்.

    • கொல்கத்தா டெஸ்டில் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார்.
    • காயம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால், 2ஆவது டெஸ்டில் களம் இறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை தென்ஆப்பிரிக்கா வீரர்கள் முதல் பயிற்சி செசனை தொடங்கினர். அப்போது ரபாடாவிற்கு இடுப்பு பகுதியில் (விலா எலும்பு) காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று டெஸ்ட் தொடங்குவதற்கு சற்று முன், இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

    ரபாடா காயம் குறித்து தென்ஆப்பிரிக்கா அணி மீடியா மானேஜர் கூறுகையில் "கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி செசன்போது ரபாடா காயம் அடைந்தார். அவருக்கு புதன்கிழமை காலை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், பிட்னஸ் டெஸ்டும் செய்யப்பட்டது. அவர் வலி இருப்பதாக உணர்ந்தார். இறுதியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இன்னும் மருத்துவக் குழுவுடன் கூடுதல் மதிப்பீடுகளுக்கு உட்பட்டு வருகிறார்" என்றார்.

    ரபாடா இடம் பெறாததால், கார்பின் போஸ்ச் அணியில் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
    • ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்மித், வெப்ஸ்டர் அரைசதம் அடித்தனர்.
    • யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். ரபாடா பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஜோடி திணறியது. 20 பந்துகளை சந்தித்து கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார்.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தபோதிலும் ரன்கள் குவிக்க இயவில்லை. லபுசேன் 17 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 56 பந்துகளை எதிர்கொண்டு, தென்ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஹெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 23.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    ஸ்மித் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் உடன் பியூ வெப்ஸ்டர் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் 76 பந்தில் அரைசதம் அடித்தார். தொடரந்து விளையாடிய அவர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை மார்கிராம் வீழ்த்தினார்.

    6ஆவது விக்கெட்டுக்கு வெப்ஸ்டர் உடன் அலேக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. வெப்ஸ்டர் அரைசதம் அடித்தார். இதனால் தேனீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

    வெப்ஸ்டர் 55 ரன்களுடனும், அலேக்ஸ் கேரி 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிவடைந்த ஆட்டம் தொடங்கியதும் ரபாடாவின் பந்து வீச்சு அபாரமாக எடுபட்டது. வெப்ஸ்டர் (72), பேட் கம்மின்ஸ் (1), மிட்செல் ஸ்டார்க் (1) ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். அலேக்ஸ் கேரி 23 ரன்னில் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 56.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 212 ரன்னில் சுருண்டது. ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    • கவாஜா 20 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
    • ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். ரபாடா பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஜோடி திணறியது. 20 பந்துகளை சந்தித்து கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார்.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தபோதிலும் ரன்கள் குவிக்க இயவில்லை. லபுசேன் 17 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 56 பந்துகளை எதிர்கொண்டு, தென்ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஹெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 23.2 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    முதல் செசனில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு களம் இறங்கிய உடனே ஸ்மித் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலியா 150 ரன்னுக்குள் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது.

    ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். யான்சன் 7.2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
    • அவசரமாக சொந்த நாடு திரும்பினார். இந்த நிலையில் சஸ்பெண்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபடா. இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    இதுவரை குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடியள்ளது. மீண்டும் அணியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது.

    இந்த நிலையில் போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் தடை பெற்றுள்ளேன். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    எவ்வளவு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை.

    இது தொடர்பாக ரபடா வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் ஏமாற்றிய அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக விளையாடி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆர்சிபிக்கு எதிராக நேற்று விளையாடவில்லை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சொந்த நாடு திரும்பியுள்ளார். முக்கியமான தனிப்பட்ட காரணமாக ரபாடா சொந்த நாடு திரும்பியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் அணியில் இணைவார் என்பதை தெரிவிக்கவில்லை.

    ரபாடா குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். பஞ்சாப் அணிக்கெதிராக 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மும்பைக்கு எதிராக 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சிபி-க்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பங்கேற்கவில்லை.

    ரபாடாவுக்குப் பதிலாக அர்ஷத் கான் களம் இறங்கினார். இவர் விராட் கோலியை வீழ்த்தினார்.

    குஜராத் அணியில் கோயட்சே, கிளென் பிளிப்ஸ் ஆகியோர் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் உள்ளனர். கோயட்சே இன்னும் முழுத்தகுதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

    • 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடமாட்டார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் (கால் தசையில் தொற்று) காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த நாடு திரும்பிவிட்டார். இதனால் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும், 19-ந்தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ரபாடாவின் காயம் குறித்து மருத்து குழு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இடம் பெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், 15 பேர் கொண்ட அணியில் அவர் மட்டும்தான் கருப்பின வீரர் ஆவார். இது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கொள்கைப்படி ஆறு வெள்ளை நிற வீரர்களும், இரண்டு கருப்பு நிற வீரர்களும் இடம்பெற வேண்டும். ஆறு வெள்ளை நிற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் கருப்பு நிற வீரர்களில் ரபாடா மட்டுமே இடம் பிடித்துள்ளதால் அவர் அனைத்து போட்டிகளிலும் களம் இறங்க வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    லுங்கி நிகிடி ரிசர்வ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அன்ரிச் நோர்ஜே, ஜெரால்டு கோயட்சி, மார்கோ யான்சன், ஓட்டினியல் பார்ட்மேன் ஆகி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஆவார்.
    • வங்கதேசத்துக்கு எதிராக ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்ததுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார். அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா ந்தினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் ரபாடா படைத்துள்ளார். அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் முறையே ரபாடா (11817 பந்துகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் (12602),

    தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டேல் ஸ்டெய்ன் (12605), ஆலன் டொனால்ட் (13672) ஆகியோர் உள்ளனர்.

    • வங்கதேசத்தில் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.

    உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • வங்கதேசம் - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.

    உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா படைத்தார்.

    இதற்கு முன்பு பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 12602 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்து 11817 பந்துகளிலேயே ரபாடா 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    • 2-வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

    வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸட் வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் நடைபெற்றது.

    கடந்த 29-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டோனி டி ஜோர்ஜி 177 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களும், முல்டர் 105 ரன்களும் விளாச முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடாவின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 38 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 159 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் பேட்டர்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனதால் வங்கதேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு தென்ஆப்பிரிக்கா கேட்டுக்கொண்டது.

    2-வது இன்னிங்சில் மகாராஜ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 143 ரன்னில் சுருண்டது. மகாராஜ் 5 விக்கெட்டும், முத்துசாமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ×