என் மலர்
நீங்கள் தேடியது "வியான் முல்டர்"
- ஜிம்பாப்வே அணிக்கெதிராக 367 ரன்கள் எடுத்திருக்கும்போது முல்டர் டிக்ளேர் அறிவித்தார்.
- லாரா சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தும், அதை தவறவிட்டார்.
டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனாக செயல்பட்ட வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் நினைத்திருந்தால் எளிதாக 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
இது தொடர்பாக முல்டர் கூறுகையில் "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததைதான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா அவர் தெரிவித்தார்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் "லாரா தன்னிடம் பேசினார். அப்போது 400-ஐ நோக்கி சென்றிருக்க வேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தால், அவருடைய ஸ்கோரை விட அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் அவர் விரும்புகிறார்" என முல்டர் தெரிவித்துள்ளார்.
- ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
புலவாயோ:
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் 367 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் தனகா சிவாங்கா, மடிகிமு தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே அணி 170 ரன்னில் சுருண்டது. 456 ரன்கள் பின்தங்கியதால் தென் ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுத்தது. சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் பிரேனெலன் சுப்ராயன் 4 விக்கெட்டும், முல்டர், கொடி யூசுப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைடனோ 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிக் வெல்ச் அரை சதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார்.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் கிரெய்க் எர்வின் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் பாஸ்ச் 4 விக்கெட்டும், செனூரன் முனுசாமி 3 விக்கெட்டும், கோடி யூசுப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.
- முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடித்திருக்கலாம்.
தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 626 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே முச்சதம் விளாசி அசத்தினார் முல்டர். 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.
முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் என்ற வரலாற்று சாதனையை முறியடித்திருக்கலாம். அவர்தான் கேப்டன். இதனால் டிக்ளேர் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும், அவர் டிக்ளேர் செய்தார்.
2 ஆம் நாள் ஆட்ட முடிவிற்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன், "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததை தான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா" என்று தெரிவித்தார்.
லாரா 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்து வருகிறது.
மேத்யூ ஹைடன் 2003-ல் 380 ரன்களும், லாரா 1994-ல் 375 ரன்களும், ஜெயவர்த்தனே 2006-ல் 374 ரன்களும், கேரி சோபர்ஸ் 1958-ல் ஆட்டமிழக்காமல் 365 ரன்களும் அடித்துள்ளனர்.
- 114 ஓவர்கள்தால் பேட்டிங் செய்திருந்தபோதிலும் டிக்ளேர் அறிவித்துள்ளார்.
- இன்னும் 10 ஓவர்கள் விளையாடியிருந்தால் 400 ரன்களை கடந்திருக்கலாம்.
தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது, தொடக்க வீரர் ஜோர்சி 10 ரன்னிலும், செனோக்வான் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 24 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வியான் முல்டர் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
116 பந்தில் சதம் விளாசிய முல்டர், 167 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். 214 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இந்த போட்டியில்தான் கேப்டன் பதவியை முதன்முறையை ஏற்றுக்கொண்டார். கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
அதோடு நிற்காமல் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் 264 ரன்கள் விளாசினார். தென்ஆப்பிரிக்கா 88 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்கள் குவித்திருந்தது. பிரேவிஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முல்டர் 287 பந்தில் முச்சதம் விளாசினார். கேப்டனாக முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்தவர் என்ற சிறப்பை பெற்றார். தொடர்ந்து 350 ரன்னையும் (324) கடந்தார். இதனால் லாராவின் 400 ரன் இன்ற இமாலய சாதனையை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் 367 ரன்கள் எடத்திருக்கும்போது, தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக முல்டர் அறிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். அவர்தான் கேப்டன். இதனால் டிக்ளேர் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும், அணியின் நலனுக்கான டிக்ளேர் செய்துள்ளார்.
லாரா 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.
மேத்யூ ஹைடன் 2003-ல் 380 ரன்களும், லாரா 1994-ல் 375 ரன்களும், ஜெயவர்த்தனே 2006-ல் 374 ரன்களும், கேரி சோபர்ஸ் 1958-ல் ஆட்டமிழக்காமல் 365 ரன்களும் அடித்துள்ளனர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களுக்கு சுருண்டது.
கயானா:
தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
டிரினிடாடில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேன் பிட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பெடிங்காம் 28 ரன்னும், ஸ்டப்ஸ் 26 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமாரி ஜோசப் 5 விக்கெட்டும், ஜேய்டன் சீலஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களுக்கு சுருண்டது. ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 16 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மார்க்ரம் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். சோர்சி 39 ரன் எடுத்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்துள்ளது. கைல் வெர்ரின்னே 50 ரன்னும், வியான் முல்டர் 34 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
- வங்கதேசத்தில் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளை வங்கதேசம் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






