search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temba bavuma"

    • கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது.
    • குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முன்னேற முடியாத, தென் ஆப்பிரிக்காவின் சோகம் தற்போதும் தொடருகிறது. தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது:-

    தோல்வியை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது. இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள். ஆட்டத்தின் பெரும் பகுதியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பான தொடக்கத்தை நாங்கள் பெறாததால் தோல்வியை சந்தித்தோம்.

    மில்லர் கிளாசன் சிறப்பாக விளையாடினார். ஆனல் கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது. வெற்றிக்காக நாங்கள் கடுமையாக போராடினோம். குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்கா அணியின் சகாப்தமாக இருந்து வெளியேறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
    • ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின் போது பவுமா விக்கெட்டை கொண்டாடியதற்காக சாம் கரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

    28-வது ஓவரில் தென்னாப்பிரிக்கா கேப்டனை போல்ட் முறையில் அவுட் செய்த பிறகு டெம்பா பவுமாவின் அருகில் சென்று சாம் கரண் ரொம்ப ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

    இதனால் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதற்காக சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. 24 மாத காலத்தில் கரணின் முதல் குற்றம் இதுவாகும்.

    கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், மூன்றாவது நடுவர் பொங்கனி ஜெலே மற்றும் நான்காவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    • மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது
    • கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நேற்று காலை நடந்த ஆட்டத்தில் (குரூப்2) தென்ஆப்பிரிக்கா, குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. 'வெற்றி பெற்றால் அரைஇறுதி, தோற்றால் வெளியேற்றம்' என்ற வாழ்வா-சாவா? சூழலில் 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீபன் மைபர்க் (37 ரன்), மேக்ஸ் டி டாவ்ட் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த டாம் கூப்பர் (35 ரன்), காலின் அகெர்மான் (41 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பு அளிக்க, அந்த அணி 150 ரன்களை கடந்து சவாலான நிலையை அடைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெதர்லாந்து 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. துல்லியமாக பந்து வீசி குடைச்சல் கொடுத்த நெதர்லாந்து பவுலர்கள், குயின்டான் டி காக் (13 ரன்). கேப்டன் பவுமா (20 ரன்), ரோசவ் (25 ரன்) ஆகியோரை சீக்கிரம் காலி செய்தனர். இதன் பின்னர் மார்க்ராமும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை கரைசேர்க்க சிறிது நேரம் போராடினர்.

    இவர்கள் நின்றது வரை தென்ஆப்பிரிக்கா பக்கம் சற்று உற்சாகம் தென்பட்டது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. ஸ்கோர் 90-ஐ (12.3 ஓவர்) எட்டிய போது மார்க்ராம் 17 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். தொடர்ந்து டேவிட் மில்லரும் (17 ரன்) நடையை கட்ட நெதர்லாந்தின் கை ஓங்கியது. அடுத்து வந்த வீரர்களால் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க இயலவில்லை.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அந்த ஓவரில் 12 ரன்களே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 145 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

    இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய 4 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோற்றிருந்தது.இந்த தோல்வியால் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    தோல்வியால் விரக்தி அடைந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியதாவது:-

    தோல்வியை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. நிச்சயம் அரைஇறுதிக்கு முன்னேறி விடுவோம் என்று நம்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போய் விட்டது. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாகிப் போனது.

    மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது' என்றார். உணர்ச்சிபூர்வமான இந்த நிலைமையில் இப்போது கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன், சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து பேசுவேன் என்றும் பவுமா குறிப்பிட்டார்.

    ×