என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temba bavuma"

    • விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன்.
    • இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இன்று (நேற்று) காலை எழுந்ததும், ஆஷஸ் போட்டியை டி.வி.யில் பார்த்தோம். இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

    விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன். தற்போது நாங்கள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இது 1-1 அல்லது 2-0 என்று முடியவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். சமனுக்கு பதிலாக தொடரை வெல்வதற்குரிய வாய்ப்பு உருவாகும்' என்றார்.

    • ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
    • மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சுழலுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் சமாளிக்க முடியால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிப்போனார்கள். அதே சமயம் இந்த கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.

    இது போன்ற ஆடுகளம் (பிட்ச்) தான் வேண்டும் என்று நாங்கள் கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். பிட்ச் விவகாரத்தில் கம்பீரின் நிலைப்பாட்டை முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, புஜாரா, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் குறை கூறினர்.

    இந்த நிலையில் ஆடுகள சர்ச்சையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விவாதத்தை முன் வைத்துள்ளார். அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவிடம் இருந்து இந்திய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடினார். பொறுமையாக மனஉறுதியுடன் போராடுவது எப்படி என்பதை களத்தில் காட்டினார். இது தான் முறையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய பேட்டிங். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது என்பதை நமது வீரர்கள் மறந்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்குரிய ஷாட்டுகளை ஆடும் போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.

    ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆடுகளத்தில் பந்து அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரின் பந்து வீச்சை பாருங்கள். நிறைய பந்துகள் பிட்ச் ஆனதும் நேராக ஸ்டம்புக்கு சென்றது. திடீரென ஒன்றிரண்டு பந்துகள் திரும்பின. எனவே 124 ரன் இலக்கை 'சேசிங்' செய்திருக்க வேண்டும்.

    மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம். நமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் உள்ளுர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நீங்கள் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடினால், இத்தகைய சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அனுபவம் சர்வதேச போட்டியில் கைகொடுக்கும்.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது எந்த அணியும் ஆடுகளங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. இதனால் பிட்ச் பராமரிப்பாளர்கள் எந்த நெருக்கடியும் இன்றி, தாங்கள் நினைத்த மாதிரி ஆடுகளத்தை உருவாக்குகிறார்கள். எத்தகைய ஆடுகளம் சிறந்ததாக இருக்கும் என்பது மற்றவர்களை காட்டிலும் பிட்ச் பராமரிப்பாளர்களுக்கே நன்கு தெரியும். அதனால் அவர்களின் செயல்பாடுகளில் யாரும் தலையிடக்கூடாது. நமக்கு ஏற்ற வகையிலான ஆடுகளத்தை தயார்செய்யும்படி கேட்டால், தோல்விக்கு தான் வித்திடும். அதனால் பிட்ச் பராமரிப்பாளர்களை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கொல்கத்தா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.

    அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.

    இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    • தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • 2 ஆவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ், முகத்து சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    124 ரன்கள் என்ற இலக்குடன் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.

    இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.

    அவர் விலகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார்.
    • டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    லண்டன்:

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னும், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

    இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன் இலக்காக இருந்தது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டை இழந்து இந்த ரன்னை எடுத்தது. தொடக்க வீரர் மர்க்ராம் 136 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 27 ஆண்டுகளுக்க பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. கோப்பை கிடைத்துள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் அந்த அணி ஐ.சி.சி. பட்டத்தை வென்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா புதிய வரலாறு படைத்தார். அதோடு அவர் கேப்டன் பதவியிலும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் தலைமையில் 10 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி கிடைத்தது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் கூட தோற்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    அவர் 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 1920-21 ஆண்டுகளில் தோல்வியை தழுவாமல் 8 டெஸ்டில் வெற்றி பெற்றார். பவுமா தோல்வியை சந்திக்காமல் 9 டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.

    எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
    • ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.

    குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

    இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது. 

    • லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11-ம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகிறது.

    இதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

    இந்நிலையில் ஐசிசி பட்டத்தை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என தென் ஆப்பிரிக்கா வீரர் டெம்பா பவுமா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்த முக்கியமான விளையாட்டு வடிவத்திற்கு சூழலை வழங்குகிறது.

    லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம். ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

    என்று பவுமா தெரிவித்துள்ளார். 

    • மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது
    • கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நேற்று காலை நடந்த ஆட்டத்தில் (குரூப்2) தென்ஆப்பிரிக்கா, குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. 'வெற்றி பெற்றால் அரைஇறுதி, தோற்றால் வெளியேற்றம்' என்ற வாழ்வா-சாவா? சூழலில் 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீபன் மைபர்க் (37 ரன்), மேக்ஸ் டி டாவ்ட் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த டாம் கூப்பர் (35 ரன்), காலின் அகெர்மான் (41 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பு அளிக்க, அந்த அணி 150 ரன்களை கடந்து சவாலான நிலையை அடைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெதர்லாந்து 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. துல்லியமாக பந்து வீசி குடைச்சல் கொடுத்த நெதர்லாந்து பவுலர்கள், குயின்டான் டி காக் (13 ரன்). கேப்டன் பவுமா (20 ரன்), ரோசவ் (25 ரன்) ஆகியோரை சீக்கிரம் காலி செய்தனர். இதன் பின்னர் மார்க்ராமும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை கரைசேர்க்க சிறிது நேரம் போராடினர்.

    இவர்கள் நின்றது வரை தென்ஆப்பிரிக்கா பக்கம் சற்று உற்சாகம் தென்பட்டது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. ஸ்கோர் 90-ஐ (12.3 ஓவர்) எட்டிய போது மார்க்ராம் 17 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். தொடர்ந்து டேவிட் மில்லரும் (17 ரன்) நடையை கட்ட நெதர்லாந்தின் கை ஓங்கியது. அடுத்து வந்த வீரர்களால் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க இயலவில்லை.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அந்த ஓவரில் 12 ரன்களே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 145 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

    இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய 4 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோற்றிருந்தது.இந்த தோல்வியால் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    தோல்வியால் விரக்தி அடைந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியதாவது:-

    தோல்வியை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. நிச்சயம் அரைஇறுதிக்கு முன்னேறி விடுவோம் என்று நம்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போய் விட்டது. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாகிப் போனது.

    மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது' என்றார். உணர்ச்சிபூர்வமான இந்த நிலைமையில் இப்போது கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன், சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து பேசுவேன் என்றும் பவுமா குறிப்பிட்டார்.

    • அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
    • ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின் போது பவுமா விக்கெட்டை கொண்டாடியதற்காக சாம் கரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

    28-வது ஓவரில் தென்னாப்பிரிக்கா கேப்டனை போல்ட் முறையில் அவுட் செய்த பிறகு டெம்பா பவுமாவின் அருகில் சென்று சாம் கரண் ரொம்ப ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

    இதனால் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதற்காக சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. 24 மாத காலத்தில் கரணின் முதல் குற்றம் இதுவாகும்.

    கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், மூன்றாவது நடுவர் பொங்கனி ஜெலே மற்றும் நான்காவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    ×