என் மலர்
நீங்கள் தேடியது "Bavuma"
- இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பவுமா மட்டும் ஆட்டமிழ்க்காமல் 29 ரன்கள் அடித்து தனி ஒருவராக போராடி வருகிறார்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.
குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது.
- 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது.
புளோம்பாண்டீன்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80 ரன்னும், கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்னும் மொயீன் அலி 51 ரன்னும் விளாசினர்.
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 58 ரன்னும், மார்கோ ஜேன்சன் 32 ரன்னும் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பவுமாக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1-ம் தேதி நடக்கிறது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 335 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 287 ரன்களில் ஆல் அவுட்டானது.
கேப் டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 128 ரன்னில் அவுட்டானார். ரோமன் பாவெல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒருநாள் தொடரில் ஆடவில்லை.
தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது. ஜூலை 19 முதல் போட்டிகள் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து ஒயிட் பால் கேப்டனான பவுமா விலகி உள்ளார். மணிகட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இங்கிலாந்து எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஜூலை 27 முதல் 31 வரை நடக்கவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அயர்லாந்துக்கு எதிராக ஆகஸ்டு 3 முதல் 5 வரை நடக்கும் 2 போட்டிகள் கொண்ட தொடரிலும் டேவிட் மில்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடர் ஜூலை 19 முதல் 24 வரை நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் பவுமாவுக்கு எட்டு வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அயர்லாந்திற்கு எதிரான டி20 ஐத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. லார்ட்ஸில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் டி20 அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி டி20 அணிக்கான முதல் போட்டியில் ஆட உள்ளார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார்.
டெஸ்ட் அணி:
டீன் எல்கர் (C), சரேல் எர்வீ, கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், கயா சோண்டோ, கைல் வெர்ரேய்ன் (WK),டுவான் ஆலிவியர், ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கெளத்தோ சிபம்லா, க்ளென்டன் ஸ்டூர்மேன், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, கேசவ் மகாராஜ்
ஒருநாள் அணி:
கேசவ் மகராஜ் (c), குயின்டன் டி காக் (WK), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ராஸ்ஸி வான் டெர் டுசென், கயா சோண்டோ, கைல் வெர்ரைன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ட்வைன் ப்ரிடோரியஸ், மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ்.
டி20 அணி:
டேவிட் மில்லர் (c), குயின்டன் டி காக் (WK), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், வெய்ன் பார்னெல், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் ப்ரிடோரியஸ், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஜெரால்ட் கோட்ஸி.






