என் மலர்
நீங்கள் தேடியது "INDvsSA"
- முதலில் ஆடிய இந்தியா 237 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அசாமின் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. சிறப்பாக தொடக்கம் கொடுத்த கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார்.
அதிரடியில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 5சிக்சர், 5 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார்.
இதையடுத்து, 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. கேப்டன் பவுமா, ரூசோவ் டக் அவுட்டாகினர். மார்கிராம் 33 ரன்னில் அவுட்டானார்.
டி காக், டேவிட் மில்லர் பொறுமையுடன் ஆடினர். டி காக் அரை சதமடித்தார். டி காக் 69 ரன் எடுத்தார். டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ௧௬ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி 20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
- அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்
- தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 57 ரன் அடித்தார்.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கே.என்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.
அவருடன் ஜோடி சேர்ந்த விராத் கோலி 49 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. இதையடுத்து 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.
- ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் உதவியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
- தொடக்கம் முதலே அர்ஷ்தீப் சிங், தீபக் சாகர் விக்கெட்களை எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆரம்பம் முதலே வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாகர் விக்கெட்களை எடுக்க ஆரம்பித்து விட்டனர். பவர்பிளேயின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. விக்கெட் கடினமாக இருந்தது.
இதுபோன்ற விளையாட்டை விளையாடுவதில் நீங்கள் நிறைய கற்றுக் கொள்கிறீர்கள். ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் உதவியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக ஆடுகளம் இருக்கும் போது எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கு இந்த போட்டி சரியான காட்சியாக இருந்தது.
- முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது
- கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றியை உறுதி செய்தனர்
திருவனந்தபுரம்:
இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா பின்னர் ஒரு வழியாக 100 ரன்னை கடந்தது. 20 ஓவர் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 41 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 3 ரன்னில் நடையை கட்டினார்.
அதன்பின்னர் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும், கடைசி வரை நிலைத்து நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் சேர்க்க, இந்தியா 20 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
+3
- முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறியது
- பார்னெல் 24 ரன்களும், கேசவ் மகராஜ் 41 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் பவுமா, ரோசோ, டேவிட் மில்லர், ஸ்டப்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 2வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கேசவ் மகராஜ்
இதைத்தொடர்ந்து சற்றுநேரம் தாக்குப்பிடித்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போக்கு காட்டிய மார்க்ராம், 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்னெல் 24 ரன்களும், கேசவ் மகராஜ் 41 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. ரபாடா 7, நோர்ட்ஜே 2 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது.
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
- சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியதில்லை
திருவனந்தபுரம்:
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி இதுவரை கைப்பற்றியதில்லை. எனவே, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.