என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா தென்ஆப்பிரிக்கா தொடர்"
- சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார்.
- இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 52-வது சதமாகும்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-வது சதமாகும்.
இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெத்தியூ ப்ரீட்ஸ்கி 72 ரன்னும் மார்கோ யான்சன் 70 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கார்பின் போஸ் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 49.2 ஓவர்களில் தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது சர்வதேச போட்டிகளில் அவர் பெறும் 70வது ஆட்ட நாயகன் விருதாகும்.
அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் சச்சின் (76) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 2 ஆம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
- ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
2வது ஓவரிலேயே ரியான் ரிக்கெல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். ரியான் ரிக்கெல்டனுக்கு பிறகு அடுத்து வந்த குயிண்டன் டிகாக், 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் இல்லாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
4வது ஓவரில் ஏய்டன் மர்க்ரம் 7 ரன்களுடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் ப்ரீட்ஸ்கி ஜோடி நிலைத்து நின்று விளையாடி பங்காளி ஆட்டத்தில் 66 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மெத்தியூ ப்ரீட்ஸ்கி நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். மார்கோ யான்செனும் அரைசதம் கடந்தார். ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆனால் 49.2 ஓவர்களில் ஹர்ஷித் ரானா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகவே கடைசி விக்கெட்டையும் இழந்து, தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
- 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
விராட் கோலி இன்று அடித்த சதத்துடன் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
முன்னதாக சச்சின் மற்றும் டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா 5 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அதனை விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
- ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
- தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.
- இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும்.
- மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தாமதமாக டிக்ளேர் செய்தது எதனால் என தென் ஆபிரிக்க அணி பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் காரணத்தை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, இந்திய வீரர்கள் மைதானத்தில் அதிக நேரம் ஃபீல்டிங் செய்து விரக்தியில் தவிக்க வேண்டும் என்று நினைத்தோம்.
அவர்களை வெற்றி வாய்ப்பிலிருந்து முற்றிலும் வெளியேற்றும் வரை நாங்கள் பேட்டிங் செய்து, 'மீதமிருக்கும் நேரத்தில் முடிந்தால் பேட்டிங் செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்' என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதே எங்கள் திட்டம்.
அதனால்தான் தாமதமாக டிக்ளேர் செய்தோம். இருந்தாலும், போராட்டமே இல்லாமல் அவர்கள் எளிதாகச் சரிந்துவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாளை காலையும் நாங்கள் மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகள் பங்கேற்கும் 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் நேற்று கவுதாத்திக்கு புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் இன்று கவுகாத்திக்கு சென்றடைந்தனர். மேள தாளங்கள் முழங்க அவர்கள் வரவேற்கப்பட்டனர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டதில் இருந்து கவுகாத்திக்கு சென்றது வரை உள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
- இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பவுமா மட்டும் ஆட்டமிழ்க்காமல் 29 ரன்கள் அடித்து தனி ஒருவராக போராடி வருகிறார்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார். கே.எல். ராகுல் 13 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 132 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னும், கே.எல்.ராகுல் 39ரன்னும், ரிஷப்பண்ட் 27 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் இருந்தபோது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா-துருவ் ஜூரல் ஜோடி ஆடி வருகிறது.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஜடேஜாவும், ஜூரலும் தொடர்ந்து ஆடினார்கள்.
ஜூரல் 14 ரன்னிலும் ஜடேஜா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்தீப் 1, சிராஜ் 1, பும்ரா 1, அக்ஷர் படேல் 16 என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதில் பேட்டிங் செய்த சுப்மன் கில் 3 பந்துகளில் காயம் காரணமாக வெளியேறினார்.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 29 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் 39 ரன்னில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தர். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளை சந்தித்த நிலையில் கழுத்து வலி காரணமாக retired hurt ஆகி வெளியேறினார்.
நவம்பர் மாதத்தில் இதே (15-ந் தேதி) தேதியில் கடந்த 2023-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் எடுத்து retired hurt ஆனார்.
அதேபோல 2 ஆண்டு கழித்து அதே நாளான நவம்பர் 15-ந் தேதி இன்றும் அவர் retired hurt ஆகி வெளியேறி உள்ளார். இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
- ரிஷப் பண்ட் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது.
முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னிலும் கேஎல் ராகுல் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
இதனையடுத்து ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இதில் ரிஷப் பண்ட் தனது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.
இரண்டு சிக்சர்கள் விளாசியதன் மூலம் முன்னாள் இந்திய வீரர் சேவாக்கின் (90) சாதனையை ரிஷ்ப பண்ட் (91) முறியடித்துள்ளார்.
இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:-
1. ரிஷப் பந்த் (91 சிக்சர்)
2. வீரேந்திர சேவாக் (90 சிக்சர்)
3. ரோஹித் சர்மா (88 சிக்சர்)
4. ரவீந்திர ஜடேஜா (80 சிக்சர்)
5. எம்.எஸ். தோனி (78 சிக்சர்)
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
- பத்திரிகையாளர்களிடம் ஐபிஎல் குறித்து கேள்வி கேட்கக்கூடாது என ரோகித் சர்மா கேட்டுக்கொண்டார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ஐ.பி.எல். தொடர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் குறித்து கேள்விகளை எழுப்ப தயாராக இருந்தனர்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடங்கியதும் ரோகித் சர்மா, ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்றார். இது பத்திரியாளர் சந்திப்பு தானே?... நாங்கள் கேள்விகள் கேட்க முடியும் என நிருபர்கள் தெரிவித்தனர். பிசிசிஐ லோகோவை சுட்டிக்காட்டு இது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பின்னர், அடுத்த இரண்டு வருடத்திற்கு கிரிக்கெட் விளையாடுவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. டி20 கிரிக்கெட் மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு கேள்வி எழுப்பினர்.

அதற்கு எனக்கான, என்முன் இருக்கும் கிரிக்கெட்டில் நான் விளையாடுவேன் என்றார். அப்போதும் டி20 எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா பிடி கொடுக்காமல் பதில் அளித்தார்.
சீனியர் வீரர்களான நீங்கள் மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாட விருப்பப்படுகிறீர்களா? என்று நேரடியாக கேள்விகளை தொடுத்தனர்.
அதற்கு ரோகித் சர்மா, நாங்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட விருப்பப்படுகிறோம். யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாட விரும்புவார்கள் என்றார்.
அதன்பின், நீங்கள் அனைவரும் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக ஒரு பதிலை பெறுவீர்கள் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தார்.
- நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன்.
- நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று டர்பனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகள் விருதை வென்றார். ஆட்ட நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் "நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன். இந்த தருணத்திற்காக நான் 10 ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன். ஆனால் நான் என் கால்களை தரையில் வைக்க விரும்புகிறேன், இந்த தருணத்தில் அதில் இருக்க விரும்புகிறேன்.
ஆடுகளத்தில் என்னுடைய நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். ஆக்ரோசமாக விளையாடி அணியை நீங்களே முன்னதாக கொண்டு சொல்ல வேண்டும் என அணியில் பேசிக்கொண்டோம். அந்த எண்ணத்துடன் விளையாடினேன்.
மூன்று நான்கு பந்துகளை சந்தித்தபின், பவுண்டரி அடிக்க வேண்டும் எனத் தோன்றும். நான் அதை பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. சில நேரம் இது சாத்தியமாகும். சில நேரம் சறுக்கல் ஏற்படும். இன்று எனக்கு சரியாக வேலை செய்தது மகிழ்ச்சியாக விசயம். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது மிக முக்கியமானது. சிறந்த அணியான தென்ஆப்பிரிக்காவுக்கு சொந்த மண் கூடுதல் சாதகமாக இருக்கும்.
இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.






