என் மலர்
நீங்கள் தேடியது "INDvSA"
- காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அணியில் இடம் பிடித்தால் சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இடம் பெறுவதே ஒரு கேள்வி குறியாக உள்ளது.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்கிறது.
- இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி ராய்பூர் சென்றடைந்தது.
டெஸ்ட் தொடரை தொடந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர். இந்நிலையில் அங்கு இந்திய வீரர் விராட் கோலியை குழந்தைகள் பூ கொடுத்து வரவேற்றனர். அவர்களின் அன்பு பரிசை ஏற்ற விராட் கோலி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
- ரோகித் மற்றும் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போதே அந்த வதந்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளார்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.
- சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.
கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். தோல்விக்கு அவர் கூறிய விளக்கமும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தற்போதைக்கு கம்பீரை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கம்பீர் உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் அவர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் தோல்வி தர்மசங்கடமானதும், கடினமானதுமானது. தலைமையைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல.
இப்படிக் கூறும்போது, திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வதாக ஆகாது. சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். கம்பீருக்கு பயிற்சியாளராகும் அனுபவம் உள்ளது.
கம்பீர் குறித்த கேள்வி கடினமானது. தென் ஆப்பிரிக்க அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய பயிற்சியாளரான சுக்ரியுடன் நான் பணியாற்றியதில்லை. காம்பீர், ரியான் டென் டஸ்கேட், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை. வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது.
ஆனால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிப்பார். முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் தலைமையின் கீழ் நான் விளையாட விரும்புவேன். அவரும் கம்பீர் போலத்தான். முன்னாள் வீரர்களின் அனுபவம் நமக்கு உதவும், சில வீரர்கள் அதனால் சவுகரியமாக உணர்வார்கள். அது அவர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு அது உத்வேகமாக இருக்காது. எப்படியிருந்தாலும் உணர்ச்சிவசப்படும் நபர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல" என்று கூறினார்.
- ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
- ரோகித் சர்மா 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் உள்ளார்.
ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்சர் பறக்க விட்டார். இதையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக இச்சாதனை பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (351 சிக்சர்) வசம் இருந்தது. அவரை ரோகித் சர்மா நேற்று முந்தினார்.
38 வயதான ரோகித் சர்மா இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உள்பட 11,427 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 352 சிக்சரும், 1,071 பவுண்டரிகளும் அடங்கும்.
•ரோகித் சர்மா அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 93 சிக்சர் விளாசியுள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர் தான்.
• ஓராண்டில் அதிக சிக்சர் எடுத்தவர் என்ற சிறப்பும் அவரிடமே (2023-ம் ஆண்டில் 67 சிக்சர்) உள்ளது.
• உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராகவும் (54 சிக்சர்) வலம் வருகிறார்.
•இதுவரை 150 பவுலர்களின் பந்தில் சிக்சர் அடித்திருக்கிறார். அவர் 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலர் வெஸ்ட் இண்டீசின் மர்லன் சாமுவேல்ஸ் ஆவார். இனியும் அடிக்கமுடியாது. ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
•ஒரு நாள் போட்டியில் 1971-ம் ஆண்டு முதல் முறையாக சிக்சர் அடிக்கப்பட்டது. ரோகித் சர்மாவுக்கு முன்பாக அதிக சிக்சர் அடித்த சாதனை மொத்தம் 18 வீரர்களிடம் மாறியிருக்கிறது. கடைசியாக அப்ரிடியிடம் இச்சாதனை 2010-ம் ஆண்டில் சென்றது. அவர் சிக்சர் மன்னர் அரியணையில் 5,641 நாட்கள் இருந்தார்.
இனி ரோகித் சர்மா 'சிக்சர் கிங்'காக தொடருவார். இப்போது விளையாடும் வீரர்களில் ரோகித் சர்மாவை தவிர்த்து பார்த்தால், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (182 சிக்சர்), இந்தியாவின் விராட் கோலி (159 சிக்சர்) மட்டுமே 150-க்கும் அதிகமாக சிக்சர் அடித்துள்ளனர். எனவே ரோகித் சர்மாவின் சாதனையை தகர்ப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
- இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 17 ரன்களில் தோல்வியடைந்தது.
- தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கியது.
ராஞ்சி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
அதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அரங்கேறியது.
'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம், இரவு பனியின் தாக்கத்தை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் மனம் தளரவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியிலும் இடைவிடாது ரன்வேட்டை நடத்தினர். டோனி டி ஜோர்ஜி (39 ரன்), டிவால்ட் பிரேவிஸ் (37 ரன்), மார்கோ யான்சென் (70 ரன், 39 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன், 80 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவர்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.
இதனால் ஆட்டம் எந்த பக்கம் போகும் என்பதை கணிக்க முடியாததால் கடைசி வரை துளியும் பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்றது. இறுதிகட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஆல்-ரவுண்டர் கார்பின் பாஷ் இந்திய பவுலர்களை மிரள விட்டார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து விச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத கார்பின் பாஷ் (67 ரன், 51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அடுத்த பந்தை தூக்கியடித்தார். அதை ரோகித் சர்மா லாவகமாக கேட்ச் செய்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி தோல்விக்கு முக்கிய பங்கு வகித்த எக்ஸ்டிரா ரன்கள். அதன்படி தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கியது. ஆனால் இந்தியா எக்ஸ்டிராவாக வெறும் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அதாவது தென்ஆப்பிரிக்கா 17 ரன்களை கூடுதலாக வழங்கியிருந்தது. கடைசியில் அதே 17 ரன் வித்தியாசத்தில் தான் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
- தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார்.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான, இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெயிக்வாட் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய அணியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ருதுராஜ் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே ரள் ராகுல் தெரிவித்துள்ளார்.
அதில், தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறேன் என கூறினார்.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
- கே.எல். ராகுல் தலைமையிலான அணியில் ரோகித், கோலி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. டெஸ்ட் தொடர் இன்று நிறைவடைந்த உடன் இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான அந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார். மும்பை விமான நிலையத்திலிருந்து அவர் வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். விராட் கோலி ஏறக்குறைய 6 மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும்.
- மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தாமதமாக டிக்ளேர் செய்தது எதனால் என தென் ஆபிரிக்க அணி பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் காரணத்தை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, இந்திய வீரர்கள் மைதானத்தில் அதிக நேரம் ஃபீல்டிங் செய்து விரக்தியில் தவிக்க வேண்டும் என்று நினைத்தோம்.
அவர்களை வெற்றி வாய்ப்பிலிருந்து முற்றிலும் வெளியேற்றும் வரை நாங்கள் பேட்டிங் செய்து, 'மீதமிருக்கும் நேரத்தில் முடிந்தால் பேட்டிங் செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்' என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதே எங்கள் திட்டம்.
அதனால்தான் தாமதமாக டிக்ளேர் செய்தோம். இருந்தாலும், போராட்டமே இல்லாமல் அவர்கள் எளிதாகச் சரிந்துவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாளை காலையும் நாங்கள் மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவுக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்தது.
- 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது.
கவுகாத்தி:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50+ விக்கெட்டுகள் கைப்பற்றிய 5-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே - 84 விக்கெட்டுகள்
2. ஜவகல் ஸ்ரீநாத் - 64 விக்கெட்டுகள்
3. ஹர்பஜன் சிங் - 60 விக்கெட்டுகள்
4. அஸ்வின் - 57 விக்கெட்டுகள்
5. ஜடேஜா - 52 விக்கெட்டுகள்
- தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
- 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன்.
சென்னை:
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.
இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் மீது முன்னாள் வீரர் அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன். ஆனால், களத்தில் நமது வீரர்களின் உடல் மொழியை பார்க்கையில் எதுவும் சரியாக இல்லை. என தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன்.
- முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
கவுகாத்தி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தவறி விட்டனர்.
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாளில் எஞ்சிய 3 விக்கெட்டுகளை எளிதில் கைப்பற்ற தவறி விட்டனர். இதனால் 489 ரன்களை அந்த அணி குவித்து விட்டது.
இந்திய பந்து வீச்சாளர்களுக்கு செனுரான் முத்துசாமி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவருக்கு யான்சென் மிகவும் உதவியாக இருந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி 109 ரன்கள் எடுத்தார். தனது 8-வது டெஸ்டில் விளையாடும் அவர் முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
முதல் சதம் அடித்தது குறித்து முத்துசாமி நேற்றைய போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் சதத்தை பதிவு செய்தது அற்புதமான அனுபவமாகும். 2019-ல் நாங்கள் இந்தியாவில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த பிறகு நான் உள்நாட்டு போட்டியில் விளையாடி தேசிய அணியில் மீண்டும் இடம் பிடித்தேன்.
இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன். முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முத்துசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 2-வது டெஸ்டில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் தொட ரில் அவர் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






