என் மலர்
நீங்கள் தேடியது "Ashes"
- ஆஷஸ் டெஸ்ட் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பெர்த்தில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவு பெற்றதால், டிக்கெட் விற்பனையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.17 கோடி நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட்83 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.
- ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
இரு நாட்களுக்குள் ஆஷஸ் போட்டி முடிவுக்கு வருவது வரலாற்றில் இது 6-வது முறை மட்டுமே. 1888-ல் 3 முறை, 1890, 1921 ஆண்டுகளில் தலா ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளன.
- ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 83 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.
- ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்தது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லயன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர் . தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்சை போலவே தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. கிராலி டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு டக்கெட் மற்றும் போப் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.
டக்கெட் 28 ரன்னிலும் போப் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அதன்படி ரூட் 8, ஹரி ப்ரூக் 0, ஸ்டோக்ஸ் 2, ஸ்மித் 15 என வெளியேறினர்.
இதனையடுத்து அட்கின்சன் - கார்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. கார்ஸ் 20 ரன்னிலும் அட்கின்சன் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதில் ஜேக் வெதரால்ட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹெட்டுடன் லெபுசென் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இறுதியில் அவர் 83 பந்தில் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
- அட்கின்சன் - கார்ஸ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
- ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்தது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லயன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர் . தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்சை போலவே தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. கிராலி டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு டக்கெட் மற்றும் போப் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.
டக்கெட் 28 ரன்னிலும் போப் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அதன்படி ரூட் 8, ஹரி ப்ரூக் 0, ஸ்டோக்ஸ் 2, ஸ்மித் 15 என வெளியேறினர்.
இதனையடுத்து அட்கின்சன் - கார்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. கார்ஸ் 20 ரன்னிலும் அட்கின்சன் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன்.
- இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இன்று (நேற்று) காலை எழுந்ததும், ஆஷஸ் போட்டியை டி.வி.யில் பார்த்தோம். இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.
விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன். தற்போது நாங்கள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இது 1-1 அல்லது 2-0 என்று முடியவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். சமனுக்கு பதிலாக தொடரை வெல்வதற்குரிய வாய்ப்பு உருவாகும்' என்றார்.
- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 100 ஆண்டுகால ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் (Eng 10, Aus 9) 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் (Eng 10, Aus 7) 17 விக்கெட்டுகள் இழந்தது அதிகபட்சமாக இருந்தது.
மேலும் பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் 17 விக்கெட்டுகளை இழந்ததே அதிகபட்சமாக இருந்தது.
- ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். பென் டக்கெட் 21, ஒலி போப் 46, ஹார் ப்ரூக் 52, ஸ்மித் 33 ஆகியோர் ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் ஓவரின் 2-வது பந்தில் ஆர்ச்சர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து லெபுசென் -ஸ்மித் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 14 ஓவர்கள் தாக்குபிடித்த இந்த ஜோடியை ஆர்ச்சர் பிரித்தார். லெபுசெனை (9) கிளின் போல்ட் ஆக்கினார். அடுத்த ஓவரில் ஸ்மித் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த கவாஜா (2) வந்த வேகத்தில் வெளியேறினார்.
இந்த நிலையில் ஹெட் மற்றும் கிரீன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த ஜோடியை பிரித்தார்.
ஹெட் 21 ரன்னிலும் கிரீன் 24 ரன்னிலும் இவரது பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து அலெக்ஸ் ஹேரி 26 ரன்னிலும் ஸ்டார்க் 12 ரன்னிலும் போலண்ட் 0 ரன்னிலும் வெளியேறினர்.
123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இங்கிலாந்து அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
- ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். பென் டக்கெட் 21, ஒலி போப் 46, ஹார் ப்ரூக் 52, ஸ்மித் 33 ஆகியோர் ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செலஸ்டிஸ் நிறுவனம் செயல்படுத்தியது.
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ் மன்னிப்பு கோரியது.
விண்வெளிக்கு 166 பேரின் சாம்பலையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற Mission Possible என்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவை பதிவு செய்யும் திட்டமாக இதை செயல்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.
- கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயனுக்க வயது ஆகிவிட்டது.
- ஸ்மித், டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை மட்டுமே அதிக அளவில் நம்பியுள்ளது ஆஸ்திரேலியா
கிரிக்கெட்டில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகக்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட அதிக அளவிற்கு இந்த தொடருக்கு உண்டு.
இந்த வருடம் இறுதியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வென்றதில்லை.
இந்த நிலையில் வயதான பந்து வீச்சாளர்கள், அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்ட ஆஸ்திரேலியா அணியை இந்த முறை இங்கிலாந்து வீழ்த்தி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் "உண்மையிலேயே, எங்களுக்கு வாய்ப்பு என்பதுடன்தான் ஆஸ்திரேலியாவுக்கு செல்வோம். ஆஸ்திரேலியா உலகின் சிறந்த அணி. சொந்த மண்ணில் நம்பமுடியாதவை. ஆனால் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என வயதான பந்து வீச்சு குழுவை கொண்டுள்ளது. தொடக்க வீரராக விளையாட வாய்ப்புள்ள சாம் கோன்ஸ்டாஸ் உள்ளிட்ட அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.
அவர்கள் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை மட்டுமே அதிக அளவில் நம்பியிருக்க வேண்டும். மார்னஸ் லபுசேன் ரன் சேர்க்க திணறுகிறார். ஆகவே, இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்தால், வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்வதற்கன அணி. இருந்தாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
- ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
- இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.
இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடராக கருதப்படும். இதனால் இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் லைன் என்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் உள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இருந்து வந்தார். அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது.
இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் அவரிடம் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி என மெக்ராத் கூறினார்.
- இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள் என மைக்கெல் வாகன் கூறினார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆஷஸ் தொடரில் இந்த முறை ஆஸ்திரேலியா முழுமையாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக விளையாடி வரும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி. இது நம்ப முடியாத ஒரு போட்டித்தொடராக இருக்கப்போகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிவு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் அமைய வேண்டியது அவசியம். ஒவ்வொரு டெஸ்டும் கடைசி வரை பரபரப்பாக நகர்ந்து, அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன். தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் என்பதே எனது கணிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,
2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. கிட்டத்தட்ட இதே அணி வீரர்களுடன் கடைசியாக 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆடிய போது அவர்களால் 2-2 என்று தொடரை சமன்தான் செய்ய முடிந்தது. இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள். தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும்.
இவ்வாறு வாகன் கூறினார்.






