search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "glenn mcgrath"

    • துடைப்ப குச்சியால் மெக்ராத் பாம்பின் தலை மற்றும் வாலை பிடித்து கொண்டு அதனை வீட்டிற்கு வெளியில் கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளது.
    • வீட்டுக்குள் நுழைந்த ராட்சத வண்டுகளை தனது மனைவி சாரா லியோன் உதவியுடன் பிடித்து வெளியே விட்டதாகவும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.

    பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் வீட்டுக்குள் புகுந்த ஆபத்தான மலைபாம்பை துணிச்சலுடன் பிடித்து அசத்தி உள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான கிளன் மெக்ராத்.

    இவரது வீட்டுக்குள் மலைபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். எனினும் மெக்ராத் வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப்பை வைத்து அந்த மலைபாம்பை சாதுர்யமாக பிடித்து அப்புறப்படுத்திய காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அதில் துடைப்ப குச்சியால் மெக்ராத் பாம்பின் தலை மற்றும் வாலை பிடித்து கொண்டு அதனை வீட்டிற்கு வெளியில் கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளது. ஏற்கனவே வீட்டுக்குள் நுழைந்த ராட்சத வண்டுகளை தனது மனைவி சாரா லியோன் உதவியுடன் பிடித்து வெளியே விட்டதாகவும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.


    • ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி என மெக்ராத் கூறினார்.
    • இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள் என மைக்கெல் வாகன் கூறினார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆஷஸ் தொடரில் இந்த முறை ஆஸ்திரேலியா முழுமையாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக விளையாடி வரும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி. இது நம்ப முடியாத ஒரு போட்டித்தொடராக இருக்கப்போகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிவு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் அமைய வேண்டியது அவசியம். ஒவ்வொரு டெஸ்டும் கடைசி வரை பரபரப்பாக நகர்ந்து, அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன். தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் என்பதே எனது கணிப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,

    2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. கிட்டத்தட்ட இதே அணி வீரர்களுடன் கடைசியாக 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆடிய போது அவர்களால் 2-2 என்று தொடரை சமன்தான் செய்ய முடிந்தது. இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள். தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும்.

    இவ்வாறு வாகன் கூறினார்.

    • இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
    • ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    பேட்டிங் வரிசையில் ஒவ்வொருவரும் ரன்கள் குவிக்க வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேஞ்ச் ஆகிய வீரர்களை மட்டுமே ஆஸ்திரேலியா நம்பியுள்ளது. இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பது குறித்த கேம் பிளானில் அவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவில் அதிக ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் முதல் 2 டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய மைதானங்களில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு நன்கு தெரியும். இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடையாமல் இருந்தாலே அது ஆஸ்திரேலியா செய்யும் சாதனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    என்று மெக்ராத் கூறியுள்ளார்.

    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒரு நாள் போட்டி அணியாகும். என்னை பொறுத்தமட்டில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அவர்கள் இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள். இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நான் முதல்முறையாக சொல்லுகிறேன். அந்த அணியின் நடப்பு பார்மும், ஆட்டமும் என்னை அதிகம் ஈர்த்து இருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அதிக ரன்களை குவித்து வருகிறது.

    இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் கடைசி கட்டம் வரை நன்றாக ஆடுகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் 50 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் அந்த அணிகளின் ஆட்டத்தில் 20 ஓவர் ஆட்டத்தின் அதிரடி தாக்கம் அதிகம் இருக்கும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானதாகும்.

    இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் நன்றாக செயல்படும் என்று நம்புகிறேன். தென்ஆப்பிரிக்காவும் நல்ல அணியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணியை கருப்பு குதிரை எனலாம். அந்த அணி நன்றாகவும் விளையாடும். மோசமாக செயல்படவும் வாய்ப்பு உண்டு. வெஸ்ட்இண்டீசும், பாகிஸ்தான் அணியும் ஒரே மாதிரி குணம் கொண்டவையாகும். இந்த உலக கோப்பை போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். இங்கிலாந்து, இந்தியா அணிகளை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடினமானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கையில் அந்த அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தற்போது அந்த அணியினர் தங்களுக்கு சாதகம் இல்லாத ஆடுகளங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு மெக்ராத் கூறினார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் மற்றும் டேல் ஸ்டெயின் என்னைவிட சிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்டில் இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை வீழ்த்தியன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி 564 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    564 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று மெக்ராத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் என்னைவிட மெக்ராத் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெல் ஸ்டெயின் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நான் மெக்ராத்தை பற்றி சில விஷயங்களை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர் என்னைவிட சிறந்த பந்து வீச்சாளர். இது தவறான தன்னடக்கம் இல்லை’’ என்றார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் சாதிக்க இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் அறிவுரை தெரிவித்துள்ளார். #GlennMcGrath ViratKohli #INDvENG

    புதுடெல்லி:

    இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி-20 போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-டி-20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்த போட்டிகளுக்காக தயாராகும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடுவதாக இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய கால அவகாசம் தேவைப்படுவதால் அவர் கவுண்டி போட்டியில் பங்கேற்கவில்லை. கோலி, தற்போது பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

    இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் சாதிக்க, அங்குள்ள தன்மைக்கு ஏற்ப கோலி விரைவாக மாறுவது மிகவும் அவசியம் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கோலி இப்போது மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து நிலைமைகள் மிகவும் கடினமானவை. ஆண்டர்சன் போன்ற ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இருக்கும் போது, ​​அது எதிரணிக்கு கடினமான வேலை இருக்கும். நீங்கள் கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். கோலி ஒரு தரம் வாய்ந்த வீரர், எனவே ஒரு நல்ல போட்டியை காண காத்திருக்கிறேன்.

    எப்போதும் உங்கள் சிறந்த பேட்ஸ்மேன் சரியாக விளையாட வேண்டும். இது, மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கும், இந்திய அணியில் சில தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர், இந்திய அணியில் சில தரமான வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஒரு வீரரை நம்பி இருந்தால் அவர்கள் தவறு செய்கிறார்கள்.

    நிறைய விசயங்கள் வீரர்கள் எப்படி தன்மைக்கு ஏற்ப மாறுகிறார்கள் என்பதை சார்ந்துள்ளது என நினைக்கிறேன். இந்த நாட்களில் நீங்கள் விரைவாக தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். என் காலத்தில், இரண்டு அல்லது மூன்று வெளிநாட்டு போட்டிகள் தான் கிடைக்கும். எனவே நாங்கள் மிக விரைவாக தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். வெளிப்படையாக, உண்மையில் நிலைமைகள் பயன்படுத்த போதுமான வெளிநாட்டு போட்டிகள் எங்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் கடந்த கால அனுபவத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GlennMcGrath ViratKohli #INDvENG
    ×