என் மலர்
நீங்கள் தேடியது "ICC"
- அமெரிக்கா- ஈரான் மோதலால் துபாய் விமான நிலைய சேவை பாதித்துள்ளது.
- வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பு துபாய் விமான நிலையம் முக்கிய மையமாக விளங்குகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் சூப்பர் 8 சுற்று போட்டிகள் முடிவடைகிறது. அதன்பின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த நிலையில்தான் அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் துபாயில் விமான நிலைய சேவை பாதித்துள்ளது. உலகக் கோப்பையில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு துபாய் விமான நிலையம் முக்கிய மையமாக உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடியும் வரை அமெரிக்கா- ஈரான் மோதல் நீடித்தால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்ப மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நிலையில் மாற்று ஏற்பாடுக்கான பணியை செய்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை மார்ச் 8-ந்தேதி முடிவடைகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
- இறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
துபாய்:
நடப்பாண்டு ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடர் ஜூன் 12-ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடங்குகிறது. இறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குழு 1-ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளும், குழு 2-ல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. மகளிர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன.இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் ஜூன் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துடன் தொடங்குகிறது. ஜூன் 17-ம் தேதி ஹெட்டிங்லியில் நெதர்லாந்து அணியையும், ஜூன் 21-ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் தென் ஆப்பிரிக்க அணியையும் எதிர்கொள்கிறது. ஜூன் 25-ம் தேதி வங்கதேசத்துடனும், ஜூன் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா மோதவுள்ளது.
தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- முதல் இடத்தை பிடித்த 4 அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் உள்ளன.
- 2-வது இடத்தை பிடித்த அணிகள் அனைத்தும் ஒரே பிரிவில் உள்ளன.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிட்ட சில நாட்களில் சூப்பர் 8 சுற்றுக்கான விவரமும் வெளியிடப்பட்டது. கடந்த முறையை போல் இல்லாமல் சூப்பர் 8 சுற்றில் மாற்றம் செய்யப்பட்டது.
முன்கூட்டியே தரவரிசையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2 என பிரித்தது.
இந்த தரவரிசையின்படி குரூப் 1 பிரிவில் இந்தியா, ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பி ரிக்கா அணிகளும், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த அணிகளே ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவிலும், ஜிம்பாவே 'பி' பிரிவிலும், வெஸ்ட் இண்டீஸ் 'சி' பிரிவிலும், தென் ஆப்பிரிக்கா 'டி' பிரிவிலும் முதல் இடத்தை பிடித்தன. இந்த 4 அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் உள்ளன.
இதே போல 2-வது இடத்தை பிடித்த அணிகள் அனைத்தும் ஒரே பிரிவில் உள்ளன. ஐ.சி.சி. முன்கூட்டியே தீர்மானித்த தரவரிசை தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் பிரிவில் 2-வது பிடித்த அணிகள் இடம் பெறும். அந்த நிலை தற்போது மாறி உள்ளதால் சூப்பர் 8 சுற்று போட்டி முறை குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து உள்ளனர்.
அதே நேரத்தில் ஐ.சி.சி. தன்நிலையை நியாயப்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகளை இணைந்து நடத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிடல் தேவைப்படுகிறது. இடங்களை தேர்வு செய்வதற்கும், அட்டவணைபடுத்துவதற்கும் முன்கூட்டியே வரிசையை நிர்ணயிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
- போட்டியை நடத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன.
- டி20 தரவரிசைப்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
2028-ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 இடங்கள் பிராந்திய தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தகுதிபெறும்.
அதன்படி இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இந்தியா ஆகிய அணிகளுடன் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன. டி20 தரவரிசைப்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்த அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
2028 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும். மேலே குறிப்பிட்டுள்ள 12 அணிகள் தவிர, மீதமுள்ள 8 இடங்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக், மற்றும் அமெரிக்கா ஆகிய மண்டலங்களில் நடைபெறும் தகுதிச் சுற்றுகள் மூலம் தீர்மானிக்கப்படும்.
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தலா 2 அணிகளும், ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக் பகுதியிலிருந்து இணைந்து 3 அணிகளும், அமெரிக்கா பகுதியிலிருந்து 1 அணியும் தகுதி பெறும்.
- ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
- ஆஸ்திரேலியா அணி ஐ.சி.சி. போட்டிகளில் தொடர்ச்சியாக 15 வெற்றியை பெற்று இருந்தது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 11வது வெற்றியை பெற்றது. 9வது வெற்றியை அடைந்த போது இந்தியா சாதனை படைத்து இருந்தது.
இதற்கிடையே பாகிஸ்தானை தோற்கடித்தன் மூலம் இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியது. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடத்திய போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றது.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதன் பிறகு ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஷிப் டிராபி (டி20, ஒருநாள்) போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2006ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐ.சி.சி. போட்டிகளில் தொடர்ச்சியாக 15 வெற்றியை பெற்று இருந்தது. இந்த சாதனையை இந்தியா தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்திய அணி இதற்கு முன்பு 2012-2014 வரை தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும்.
- வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைகிறது.
உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) உள்ளது.
ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாயின் பெரும் பங்கு பி.சி.சி.ஐ. மூலமே கிடைக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் வணிக மதிப்பு ரூ.1800 கோடி முதல் ரூ.2200 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 70 சதவீதத்துக்கும் மேலாக கிடைக்கிறது. 2024 முதல் 2027 வரையிலான கால கட்டத்தில் ஐ.சி.சி.யின் வருவாயில் 38.5 சதவீதம் பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கிறது. தோராயமாக ரூ.2079 கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கிறது.
ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும். அதாவது அவர்கள் ரூ.310 கோடி சம்பாதிக்கிறார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில்தான் அதிக அளவில் வருவாய் குவிகிறது. வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைகிறது.
- நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை.
- எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான்.
வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அரசு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், கடுமையான நிதி அபராதத்திற்கு உள்ளாகும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்தது.
அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி, வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் அமினுல் இஸ்லாம், ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி அளித்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி கூறியதாவது:-
நாங்கள் வங்கதேசத்தை தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை. எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது சுட்டிக்காட்டினோம். வங்கதேச கிரிக்கெட் போர்டு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள், ஐசிசி-யால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவுதான்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நலனை கருதவில்லை. எங்களுடைய எங்கள் பணி முற்றிலும் வங்காளதேசத்துடன் தொடர்புடையது. அதனடிப்படையில் அரசு முடிவு எடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, நாங்கள் அதன் பிறகு விளையாடுகிறோம்.
பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அறிவுறுத்தியுள்ளது.
ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும், இந்த உலகளாவிய தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளை ஆதரிப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
- டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது
- வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது
வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.
இந்நிலையில், "டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது என்று ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்ஜோக் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காததற்கு வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது என்றும் 2031 உலக கோப்பைக்கு முன்பாக ICC தொடர் ஒன்றை வங்கதேசத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சஞ்ஜோக் குப்தா தெரிவித்தார்.
- எங்களுடைய விருந்தினருக்கு நாங்கள் வரவேற்பு அளித்தோம்.
- ஐசிசி எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் வரவேற்றோம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து பின் வாங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இன்று ஐசிசி குழு பாகிஸ்தான் கிரிகெட் போர்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி கூறியதாவது:-
நாங்கள் அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தற்போதைய நிலையில் இதுபற்றி மேலும் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஐசிசி-யில் பதிலை பெற்ற பிறகு நாங்கள் முடிவு செய்வோம். ஐசிசி பதில் அளித்தபின், ஆலோசனைக்காக பிரதமர் ஷேபாஸ் ஷெரீபை சந்திப்போம். நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும்.
எங்களுடைய விருந்தினருக்கு நாங்கள் வரவேற்பு அளித்தோம். ஐசிசி எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் வரவேற்றோம். ஐசிசி- வங்கதேசம் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் கருத்து கூற இயலாது. வங்கதேசத்தின் முடிவில் அர்த்தமுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம்.
ஐசிசி மிரட்டல்களுக்கு நாங்கள் பயந்துவிடுபவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். எங்களுடைய ராணுவ தளபதி ஆசிம் முனீர் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த தடையையும் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.
இவ்வாறு மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
- முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்தது.
- தவெக தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன.
ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
- பாகிஸ்தான் இந்தியாவுடன் உலகக் கோப்பையில் விளையாட பேச்சுவார்த்தை.
- பாகிஸ்தான் சில நிபந்தனைகள் ஐசிசி முன் வைத்தது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில நிபந்தனையை விதித்தது, தற்போது பாகிஸ்தான் நிபந்தனைகளில் முக்கியமானதை ஐசிசி நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் முன்வைத்த நிபந்தனையும், அதற்கு ஐசிசி அளித்த விளக்கமும் பின்வருமாறு:-
பாகிஸ்தானின் நிபந்தனை 1: வங்கதேசத்திற்கு நிதி தொடர்பாக அபராதம் விதிக்கக் கூடாது. உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், ஐசிசி-யின் முழு வருவாய் பகிர்வு கிடைக்க வேண்டும்.
ஐசிசி பதில்: இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. வங்கதேச கிரிக்கெட் போர்டு தண்டிக்கப்படாது.
பாகிஸ்தானின் நிபந்தனை 2: வங்கதேசத்திற்கு அடுத்த சுற்று உலகக் கோப்பை அறிவிப்பில் கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஐசிசி பதில்: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து பரிசீலனை செய்யப்படும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 3: இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள்.
ஐசிசி பதில்: இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இருதரப்பு தொடர் என்பது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விவகாரம். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடங்கும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 4- இந்தியா- பாகிஸ்தான்- வங்கதேசம் இடையில் முத்தரப்பு தொடர் வேண்டும்.
ஐசிசி பதில்: அதிகார வரம்பு இல்லாததை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் நிபந்தனை 5: இந்த வருடம் இந்தியா வங்கதேசம் சென்று விளையாட இருந்தது. இந்த தொடரை உறுதிப்படுத்தும் வகையில் ஐசிசி ஈடுபட வேண்டும்.
ஐசிசி பதில்: சுற்றுப் பயணங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அது தலையிட மறுக்கிறோம்.
இவ்வாறு பதில் அளித்த ஐசிசி, இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசி முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது.
- வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும்.
- இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது 2-வது கோரிக்கையாகும்.
இஸ்லாமாபாத்:
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது.
ஐ.சி.சி. துணை தலைவர் இம்ரான் குவாஜா அசோசியேட் உறுப்பினர் இயக்குநரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட்டின் பொதுச் செயலாளருமான முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின நக்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவா் அமினுல் இஸ்லாமும் மோசின் நக்வியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஐ.சி.சி. பாகிஸ்தான் இடையே பேச்சுவாா்த்தை நடத்தும் முன்பாக நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
இதே போல ஐ.சி.சி. துணைத் தலைவா், அமினுல் இஸ்லா முடனும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும். இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது நக்வியின் 2-வது நிபந்தனையாகும். மேலும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையாகும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசின் முடிவே இறுதியானது என்றும் ஐ.சி.சி.யிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மோசின் நக்வி இன்று பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகே முடிவு தெரிய வரும்.






