என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC"

    • டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
    • இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

    இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-

    வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.

    ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
    • இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது.

    இஸ்லாமாபாத்:

    வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

    இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்க தேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே வங்க தேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, ஐதராபாத் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் வங்கதேச போட்டியை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் போட்டி நடத்த முடியாவிட்டால் நாங்கள் நடத்த தயார் என்று பாகிஸ்தான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

    • சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
    • சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோல் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வோர்ட் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

    • 4 அணிகளுக்கான தகுதிச் சுற்றுத் தொடர் நடைபெற இருக்கிறது.
    • இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

    இங்கிலாந்து மற்றும வேல்ஸில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே 6 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. 4 அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.

    இதற்கான தகுதிச் சுற்று நேபாளத்தில் வருகிற 14-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்த தகுதிச் சுற்று தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் அதே பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 6 பிரிவில் 6 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைத் தொடருக்கான முதன்மை சுற்றுக்கு இடம் பெறும்.

    "ஏ" பிரிவில் வங்கதேசம், அயர்லாந்து, நமீபியா, பபூவா நியூ கினியா, அமெரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளனர. "பி" பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன.

    தகுதிச் சுற்று தொடருக்காக 10 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. 18-ந்தேதி தகுதிச் சுற்று தொடரின் லீக் ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    • இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது.
    • பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளது.

    துபாய்:

    வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டில் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்கதேச வீரர் முஸ்டாபிசுர் ரகுமானுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது. பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) வலியுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே வங்கதேசத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் விளையாட வேண்டும் இல்லையென்றால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. எச்சரித்ததாக கூறப்படுகிறது. காணொலி அழைப்பின் மூலம் இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதேநேரத்தில் ஐ.சி.சி.யி டம் இருந்து தங்களுக்கு இறுதி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    20 ஓவர் உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. வங்கதேசம் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசுடன் பிப்ரவரி 7-ந்தேதியும், இத்தாலியுடன் 9-ந் தேதியும், இங்கிலாந்துடன் 14-ந்தேதியும், நேபாளத்துடன் 17-ந்தேதியும் மோதுகிறது. கொல்கத்தா, மும்பையில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    • வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
    • முஷ்தபிசுர் ரகுமான் கே.கே.ஆர். அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இதனால் நெருக்கடிக்கு உள்ளான பிசிசிஐ, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியது. பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?

    IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகள் அனைத்தையும், இந்தியாவிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என ஐசிசி-க்கு முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளது வங்கதேசம் கிரிக்கெட் போர்டு. பாதுகாப்பு கவலை அளிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    தற்போதுள்ள சூழ்நிலை மதிப்பீடு அளவின்படி, இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வரும் நிலையில், வங்கதேச அணியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமா? என்பது குறித்து பரிசீலனை செய்யவும் என வங்கதேச அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் வங்கதேச கிரிக்கெட் போர்டு, முறையாக ஐசிசி-க்கு வங்கதேச போட்டிகளை அனைத்தையும் வேறு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த பரிசீலனை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என பிசிபி தெரிவித்துள்ளது.

    இந்தியா- இலங்கை வருகிற பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பையைநடத்துகிறது.

    • ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.

    இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றனர். இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கபடாமல் உள்ளது.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 31-ம் தேதி வரை தங்கள் அணியில் மாற்றங்களைச் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.

    • ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்கள் 20 ஓவர் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

    இதன்படி பேட்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, வெஸ்ட் இண்டீசின் மேத்யூ ஹெய்ன்ஸ், இந்தியாவின் மந்தனா, ஆஸ்திரேலியாவின் தாலியா மெக்ராத், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.

    இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் அனபெல் சுதர்லாண்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சாதியா இக்பால் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 8 இடங்கள் எகிறி 6-வது இடத்தை தென்ஆப்பிரிக்காவின் மிலாபாவுடன் பகிர்ந்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 17 இடங்கள் உயர்ந்து 52-வது இடத்தை பெற்றுள்ளார். இலங்கை தொடரில் அறிமுகம் ஆன இந்திய சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா 124-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்தது.
    • இந்த டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவை 30 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.

    துபாய்:

    தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

    கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.

    இந்தப் போட்டி மூன்று நாளில் முடிவுக்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானம் 'திருப்திகரமானது' (Satisfactory) என ஐசிசி மதிப்பிட்டுள்ளது. இதனால் இந்த மைதானத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

    இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.

    • ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
    • தீப்தி சர்மா தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார்.

    ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இவர் தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 732 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாகூர் 3 இடங்களை சரிந்து 14-வது இடத்தில் உள்ளார். ராதா யாதவ் 15-வது இடத்தில் உள்ளார்.

    பேட்டிங் தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஜெர்மையா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா 1 இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார்.

    ஹர்மன்ப்ரீத் கவுர் 15-வது இடத்தில் உள்ளார்.

    • பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார்.
    • விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதன் காரணமாக டேரில் மிட்செல் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கும், இப்ராஹிம் சத்ரன் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா தரப்பில் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் மாற்றமின்றி முதலிடத்திலும் ஆர்ச்சர் 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தியாவின் குல்தீப் யாதவ் கிடுகிடுவென 3 இடங்கள் எகிறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா தரப்பில் இவர் மட்டுமே டாப்-10 இடத்திற்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மாற்றமில்லை. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய தரப்பில் அக்சர் படேல் 10-வது இடத்தில் உள்ளார்.

    ×