என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சூப்பர் 8 சுற்று போட்டி முறை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீது கடுமையான விமர்சனம்
- முதல் இடத்தை பிடித்த 4 அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் உள்ளன.
- 2-வது இடத்தை பிடித்த அணிகள் அனைத்தும் ஒரே பிரிவில் உள்ளன.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிட்ட சில நாட்களில் சூப்பர் 8 சுற்றுக்கான விவரமும் வெளியிடப்பட்டது. கடந்த முறையை போல் இல்லாமல் சூப்பர் 8 சுற்றில் மாற்றம் செய்யப்பட்டது.
முன்கூட்டியே தரவரிசையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2 என பிரித்தது.
இந்த தரவரிசையின்படி குரூப் 1 பிரிவில் இந்தியா, ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பி ரிக்கா அணிகளும், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த அணிகளே ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவிலும், ஜிம்பாவே 'பி' பிரிவிலும், வெஸ்ட் இண்டீஸ் 'சி' பிரிவிலும், தென் ஆப்பிரிக்கா 'டி' பிரிவிலும் முதல் இடத்தை பிடித்தன. இந்த 4 அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் உள்ளன.
இதே போல 2-வது இடத்தை பிடித்த அணிகள் அனைத்தும் ஒரே பிரிவில் உள்ளன. ஐ.சி.சி. முன்கூட்டியே தீர்மானித்த தரவரிசை தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் பிரிவில் 2-வது பிடித்த அணிகள் இடம் பெறும். அந்த நிலை தற்போது மாறி உள்ளதால் சூப்பர் 8 சுற்று போட்டி முறை குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து உள்ளனர்.
அதே நேரத்தில் ஐ.சி.சி. தன்நிலையை நியாயப்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகளை இணைந்து நடத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிடல் தேவைப்படுகிறது. இடங்களை தேர்வு செய்வதற்கும், அட்டவணைபடுத்துவதற்கும் முன்கூட்டியே வரிசையை நிர்ணயிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.






