என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pat Cummins"

    • முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    • இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    இந்த நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபா மைதானத்தின் தன்மையை பொறுத்தே கம்மின்ஸ் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கமால் இருந்து வருகிறது.

    • கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
    • தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
    • முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், "இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம். இது மைதானத்தை அமைதியாக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்க கேப்டனின் இந்த பேச்சு 2023 இல் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸின் பேச்சை நினைவுபடுத்தியது.

    2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசிய பேட் கம்மின்ஸ், "1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும்" என்று கூறினார்

    • கோலியும், ரோகித்தும் கடந்த 15 ஆண்டுகளாக ஏறக்குறைய இந்திய அணியின் ஒவ்வொரு தொடரிலும் அங்கம் வகித்து இருக்கிறார்கள்.
    • அவர்கள் இங்கு விளையாடுவதை ஆஸ்திரேலிய மக்கள் பார்க்க இருப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது.

    இதையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று இரு குழுவாக டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர். முதல் குழுவில் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, புதிய கேப்டன் சுப்மன்கில், ஜெய்ஸ்வால், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப்சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

    இதற்கிடையே இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், 'விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கடந்த 15 ஆண்டுகளாக ஏறக்குறைய இந்திய அணியின் ஒவ்வொரு தொடரிலும் அங்கம் வகித்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கு விளையாடுவதை ஆஸ்திரேலிய மக்கள் பார்க்க இருப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்.

    இருவரும் இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போதெல்லாம் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அமோகமாக இருக்கும். காயத்தால் நான் இந்த தொடரில் ஆட முடியாமல் போவது வேதனை அளிக்கிறது. போட்டியை நேரில் பார்க்க அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருவார்கள்.

    ஏற்கனவே இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எப்போதும் இது போன்ற பெரிய தொடரை தவற விடுவது ஏமாற்றமாக இருக்கும். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வெல்ல விரும்புகிறோம். அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த உலகக் கோப்பையில் ஆடாதவர்கள். அவர்களது செயல்பாடு எப்படி இருக்குப்போகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம்' என்றார்.

    • இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது.
    • அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    சிட்னி:

    இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.

    இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.

    • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது.
    • இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மிகவும் பழமையான ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

    5 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதுகுவலி பிரச்சனை காரணமாக அவர் முதல் டெஸ்டில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் குணமடையாத பட்சத்தில் முழு தொடரையும் அவர் இழக்க நேரிடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர் விலகினால் ஆஸ்திரேலிய அணிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படும்.

    அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான வெள்ளை தொடரில் இருந்து விலகினார். அடுத்து தொடங்கவிருக்கும் இந்திய தொடரிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த 2 தொடரில் இருந்தும் முதுகு வலி காயம் காரணமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். மேலும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பெரிய அடியாக உள்ளது.

    • ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக இருந்தது.
    • வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என எதற்கும் ஒத்துழைக்கவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. என்ற போதிலும் இங்கிலாந்து ஆடுகளத்திற்குரிய ஸ்விங் மிகப்பெரிய அளவில் இல்லை. பேட்டிங்கிற்கு சொர்க்கமாக இருந்தது.

    பேஸ்பால் எனச் சொல்லிக் கொண்டு ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச்சாளராக விரும்புவார்கள். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இது 3ஆவது மிகவும் மோசமான பிளாட் பிட்ச்.

    ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியை இந்தியா- இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் போட்டியுடன் ஒப்பிடும்போது இரண்டு வேறுபட்ட விளையாட்டாக தெரிகிறது. இந்தியா- இங்கிலாந்து தொடர் நல்லத் தொடராக செல்லும் போன்று தெரிகிறது. தற்போது 1-1 என இருக்கிறது. அதிக அளவில் போட்டியை பார்க்கவில்லை. இருந்தபோதிலும் ஸ்கோர் பார்த்தேன்.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது.
    • பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 123 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    அடுத்து வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து 9-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெய்டன் சீல்ஸ் வேகப்பந்து வீ்ச்சாளர் கைப்பற்றினார். விக்கெட்டை வீழ்த்தியதும், வெளியே போ (Dressing Room) என்ற வகையில் ஆக்ரோசமாக சைகை காட்டினார்.

    அந்த நிலையில் ஒரு வீரர் ஆட்டமிழக்கும்போது பந்து வீச்சாளர் ஐசிசி விதிமுறைக்கு மாறாக நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இந்த போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் தடைவிதிப்பதற்கான ஒரு புள்ளிகளையும் வழங்கியது. கடந்த 24 மாதங்களில் சீல்ஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது 2ஆவது முறையாகும். இதனால் தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்களே சேர்த்தது. 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டது.
    • ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவரில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

    புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச் சிறந்த பந்துவீச்சு இதுவா–கும்.

    இதற்குமுன் 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.

    மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென் ஆப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
    • கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்த 138 ரன்னில் சுருண்டது.

    உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 212 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்அப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×