என் மலர்
நீங்கள் தேடியது "ஆஷஸ் டெஸ்ட்"
- இங்கிலாந்து வீரர் பெத்தேல் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் குவித்தது. இதற்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் (160 ரன்), கேப்டன் ஸ்டீவ் சுமித் ஆகியோர் சதம் அடித்தனர். நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் எடுத்து இருந்தது. சுமித் 129 ரன்னிலும், வெப்ஸ்டர் 42 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 138 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.
அந்த அணி மேலும் 49 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலியா 133.5 ஓவரில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 183 ரன் கூடுதலாகும்.
ஸ்டீவ் சுமித் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்தார். 8-வது டெஸ்டில் விளையாடும் வெப்ஸ்டர் 5-வது அரை சதத்தை பதிவு செய்தார். 9-வது வீரராக களம் இறங்கிய அவர் 71 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கார்ஸ், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.தொடக்க வீரர் கிராவ்லி 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டான டக்கெட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
டக்கெட் 42 ரன்னிலும், அடுத்து வந்த ஜோரூட் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இங்கிலாந்து 117 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து ஹாரி புரூக்களம் வந்தார். மறுமுனையில் இருந்த ஜேக்கப் பெத்தேல் பொறுப்புடன் ஆடி அரைசதம் எடுத்தார்.
ஹாரி ப்ரூக்- பெத்தேல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அரைசதம் விளாசுவார் என எதிர்பார்த்த ப்ரூக் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 26 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ஒருமுனை விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பெத்தேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் கிராஸ் 16 ரன்னிலும் வெளியேறினர்.
இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெத்தேல் 142 ரன்களுடனும் மேத்யூ பாட்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. உணவு இடைவேளை வரை விளையாடினால் போட்டியை டிரா செய்ய இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி தோல்வியடையும்.
- மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 518 ரன்களை குவித்தது.
- டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
சிட்னி:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 97.3 ஓவரில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்தார். ஹாரி புரூக் 84 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 36 சதங்களுடன் இருந்தனர்.
இந்நிலையில், சிட்னி டெஸ்டில் சதமடித்துள்ள ஸ்டீவன் ஸ்மித் 37 சதங்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார்.
இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (51), ஜாக் காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் (41), ஜோ ரூட் (41), குமார் சங்ககரா (38) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
- முதல் 3 போட்டியில் வென்று ஆஸ்திரேலியா டி20 தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
- நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது. 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்தனர்.
- கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேரில் சந்தித்தார். ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார்.
அப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் ஆண்டனி அல்பானீஸ் உற்சாகமாக கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு பற்றி ஆண்டனி அல்பானீஸ் தனது இன்ஸ்டாகிராமில், இது வேறு எந்தத் தொடரையும் போலல்லாத ஒரு ஆஷஸ் தொடராக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னி மைதானம் ஆஸ்திரேலிய ரசிகர்களும் பார்மி ஆர்மியும் மெக்ராத் அறக்கட்டளையின் சிறந்த பணியை ஆதரிக்கும் இளஞ்சிவப்பு கடலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குப் போவோம் என பதிவிட்டுள்ளார்
- குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
- இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. ஸ்டேடியத்தில் நடந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கோடை காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த டெஸ்ட் வெறும் 2 நாளில் முடிந்தது ரசிகர்களை மட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் மெல்போர்ன் ஆடுகளம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சாடினார்.
பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் மதிப்பிடுவது உண்டு. இதன்படி மெல்போர்ன் ஆடுகளத்தை தரமற்றது என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியுள்ளது.
ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறுகையில், 'மெல்போர்ன் எம்.சி.ஜி. ஆடுகளம் அளவுக்கு அதிவேகமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் நாளில் 20 விக்கெட்டுகளும், 2-வது நாளில் 16 விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஐ.சி.சி.யின் மைதான பிட்ச் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு வழிகாட்டுதலின்படி இது ஒரு திருப்தியற்ற ஆடுகளம். அதனால் இந்த மைதானத்திற்கு ஒரு தகுதி இழப்பு விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு இங்கு நடந்த கடைசி 3 டெஸ்ட் போட்டிகளின் போது இது சிறந்த ஆடுகளம் என்று ஐ.சி.சி. பாராட்டியிருந்தது.
ஐ.சி.சி. விதிப்படி ஒரு மைதானம் 5 ஆண்டுக்குள் 6 தகுதி இழப்பு புள்ளியை பெற்றால் அந்த மைதானத்தில் ஓராண்டு சர்வதேச போட்டி நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் அல்சோப் கூறுகையில், '3 மற்றும் 4-வது நாள் போட்டிக்காக டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் உலகம் முழுவதும் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானோம். இது வழக்கமான எம்.சி.ஜி.யின் ஆடுகளம் போல் அல்லாமல் பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் இடையிலான சமநிலையை வழங்கவில்லை. சமீபத்தில் ஆண்டுகளில் அருமையான டெஸ்ட் போட்டி ஆடுகளங்களை தயாரித்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் ஊழியர்களை பாராட்டுகிறோம். அடுத்த ஆண்டு இங்கு நியூசிலாந்துக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியும், 2027-ம் ஆண்டு மார்ச்சில் டெஸ்ட் போட்டியின் 150-வது ஆண்டை கொண்டாடும் வகையிலான இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டும் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கு அவர்கள் ஆகச்சிறந்த ஆடுகளங்களை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்' என்றார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் காயம் காரணமாக விலகி உள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- முதல் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
- காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 4வது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும்.
காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்மித் செயல்படுகிறார் .
அதே நேரத்தில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.
- இந்த ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார்.
ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 286 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 85 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
முன்னதாக கிரிக்கெட் போட்டிகளில் பந்து பேட்ஸ்மேனின் பேட் மற்றும் கையுறையில் பட்டதா? இல்லையா என்பதை கண்டறிய ஸ்னிக்கோ மீட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக முதல் நாளில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.
இந்த நிலையில் 2-வது நாளிலும் இதே சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து வீரர் ஜேமி சுமித் 16 ரன்னில் நின்றபோது கம்மின்ஸ் வீசிய பந்து அவரது கையுறையில் உரசியதுடன் ஹெல்மெட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற உஸ்மான் கவாஜாவிடம் சிக்கியது. கள நடுவர் அவுட் வழங்க மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியினர் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த 3-வது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார். ஏனெனில் பந்து பேட் அல்லது கையுறையில் பட்டு சென்றதற்கான அதிர்வை ஸ்னிக்கோ மீட்டர் சரியாக காட்டவில்லை.
இதேபோல் அவர் 22 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார். அந்த அவுட்டை எதிர்த்து ஜேமி சுமித் அப்பீல் செய்தார். இதையடுத்து ரீப்ளேயை பார்த்த போது பந்துக்கும், பேட்டுக்கும் சற்று இடைவெளி இருப்பது போல் தெரிந்தது.
ஆனால் ஸ்னிக்கோ மீட்டர் பந்து பேட்டில் உரசியதற்கான அடையாளத்தை காட்டியது. அதன் அடிப்படையில் நடுவரும் அவுட்டை உறுதி செய்தார். இதனால் ஸ்னிக்கோ மீட்டரின் முடிவுகள் விவாதப்பொருளாகி இருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார்.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற
ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்னும், கவாஜா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் ஸ்டார்க் 33 ரன்னும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட் 29 ரன்னும் எடுத்து அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஹாரி புரூக் ஜோடி அணியைக் காப்பாற்ற போராடியது. 56 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஹாரி புரூக் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.
இறுதியில், 2வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 45 ரன்னும், ஆர்ச்சர் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 158 ரன்கள் பின்தங்கி உள்ளது.
ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
- பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட நாதன் லயனும் அணியில் இடம்பிடித்துள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.
கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் காணும் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சுக்கு பதிலாக ஜோஷ் டாங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மிரட்டும் நிலையில், கம்மின்சின் வருகை பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதே போல் பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் அணியில் இடம்பிடித்துள்ளார்
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:
டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (WK), ஜோஷ் இங்லிஸ், பாட் கம்மின்ஸ்(C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்,
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
- முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
அடிலெய்டு:
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் அவரே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் உள்பட 5 பேட்ஸ்மேன்கள் அரை சதம் கடந்தனர்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் 77 ரன்னும், ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், அலெக்ஸ் கேரி 63 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 44 ரன்கள் எடுத்தார். ஒல்லி போப் 26 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 43 ரன் பின்தங்கியுள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இதனால் 2வது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா எளிதில் வெல்லும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.






