என் மலர்
நீங்கள் தேடியது "பாட் கம்மின்ஸ்"
- இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது.
- அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
சிட்னி:
இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.
இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டது.
- ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவரில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச் சிறந்த பந்துவீச்சு இதுவா–கும்.
இதற்குமுன் 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.
மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென் ஆப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்துவிட்டோம். அதன்பிறகு கிளாசனும், அபினவும் அபாரமாக விளையாடி ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவினார்கள்.
இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அணியை சரிவிலிருந்து மீட்க வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி எங்களுக்கு நடக்கவில்லை. தொடர்ந்து சரிவிலே நாங்கள் சென்று விட்டோம்.
முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்களுக்கு மேல் அடித்தோம். ஆனால் அதன்பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய சரிவு. ஆனால் டி20 போட்டி என்பது இப்படித்தான் இருக்கும்.
எங்கே தவறு நடக்கிறது என்று உங்களால் சொல்லமுடியாது. இந்த சீசன் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு சில வெளியூரில் நடைபெறும் போட்டிகள் இருக்கிறது. அங்கு செல்லும்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன்பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.
சில நாள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்படலாம். சில நாள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.
- இது கடினமான ஆடுகளம்தான். நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
- ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை:
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதாவது:
இது கடினமான ஆடுகளம்தான். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை. நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் 160 ரன்கள் என்பது இந்த ஆட்டத்தில் குறைவான இலக்காக மாறிவிட்டது.
இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற விக்கெட்டுகள் தேவை. இம்பாக்ட் வீரர் ஒன்று அல்லது இரண்டு ஓவர் தான் வீசமுடியும் என எனக்கு தெரியும். இதனால் தான் நாங்கள் ராகுலை தேர்வு செய்தோம். இந்த சூழலில் இருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இந்த சீசனில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது எங்களுக்கு சிறிய ஒரு பிரேக் கிடைத்துள்ளது. நாங்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் அனிகேத் வர்மா அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.
டெல்லி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்.
அனிகேத் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். அனிகேத் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார். அவர் எங்களுக்கு வெற்றி பெற பாதி வாய்ப்பைக் கொடுத்தார்.
மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை.
கடந்த போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என நினைக்கவில்லை. கடந்த இரண்டு ஆட்டங்களில் எல்லாம் நம் வழியில் செல்லவில்லை. மிக விரைவில் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம்.
- போலண்ட் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றார் பாட் கம்மின்ஸ்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
டிராவிஸ் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப் பதற்றமான காலைக்குப் பிறகு எங்களுக்கு ஆறுதல் அளித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஷசுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஹெட் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை மீண்டும் கொடுக்கிறார்.
முதல் நாள் ஆட்டத்தில் நாங்கள் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை விட்டுவிட்டோம். அதை எண்ணும்போது நாங்கள் நன்றாக விளையாடினோம்.
பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். போலண்ட் - அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகத் தொடர்கிறார்.
ஸ்மித், போலண்ட், ஹெட் உள்பட ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக விளையாடினார்கள், சில வருடங்கள் இதை ரசிப்போம், நாங்கள் எங்கள் கவனத்தை (ஆஷஸ் பக்கம்) திருப்புவோம்.
இது எங்களுக்கு பிடித்தமான பார்மட், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர்கள். வெற்றிபெறும் போது நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். நாங்கள் விளையாடுவதை விரும்புகிறோம் என தெரிவித்தார்.
- டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
- சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.
டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்
ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.
சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது
ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க உள்ள நிலையில் இவர்கள் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது.
- இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
- அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.
சிட்னி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.
அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.
எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.






