என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சரிவில் இருந்து எங்களால் மீள முடியவில்லை: தோல்வி குறித்து பாட் கம்மின்ஸ்
    X

    சரிவில் இருந்து எங்களால் மீள முடியவில்லை: தோல்வி குறித்து பாட் கம்மின்ஸ்

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

    நாங்கள் 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்துவிட்டோம். அதன்பிறகு கிளாசனும், அபினவும் அபாரமாக விளையாடி ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவினார்கள்.

    இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அணியை சரிவிலிருந்து மீட்க வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி எங்களுக்கு நடக்கவில்லை. தொடர்ந்து சரிவிலே நாங்கள் சென்று விட்டோம்.

    முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்களுக்கு மேல் அடித்தோம். ஆனால் அதன்பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய சரிவு. ஆனால் டி20 போட்டி என்பது இப்படித்தான் இருக்கும்.

    எங்கே தவறு நடக்கிறது என்று உங்களால் சொல்லமுடியாது. இந்த சீசன் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு சில வெளியூரில் நடைபெறும் போட்டிகள் இருக்கிறது. அங்கு செல்லும்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன்பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.

    சில நாள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்படலாம். சில நாள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×