search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Test Championship"

    • இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
    • இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.

    சிட்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்து வெளியேற்றப்பட்டது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆனது. இதன் காரணமாக இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.

    இதற்கு முன்பு நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. 2019-21-ல் நியூசிலாந்து அணியிடமும், 2021-23-ல் ஆஸ்திரேலியா அணியிடமும் தோற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்தது.

    சிட்னி டெஸ்ட் வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    • 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
    • 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கொண்டதாகும்.

    இந்த தொடரின் முதல் 3 போட்டிகள் முடிவில் ஒரு போட்டியில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த போட்டி டிரா ஆனதால் இந்திய அணி, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று, 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆக வேண்டும். 2-2 என டிரா செய்தால் கூட, இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு குறைந்துவிடும்.

    அதாவது, 2-2 என்ற கணக்கில், தொடர் சமன் ஆனால், அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுகளை எதிர்நோக்கி, இந்தியா காத்திருக்கும் நிலை ஏற்படும்.

    2-2 என சமன் ஆனால், இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டாயமாக ஒரு வெற்றியைப் பெற்றாக வேண்டும். இந்த தொடர் இலங்கை மண்ணில்தான் நடைபெறும்.

    ஒருவேளை, ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுவார்கள்.

    • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
    • 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி தற்சமயம் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வி உள்ளது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வழிகள் குறித்து பார்ப்போம்.

    அதன்படி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கக்கூடாது. அந்தவகையில் இந்திய அணி இத்தொடரை 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    ஒருவேளை எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினால் கூட பிற அணிகளின் வெற்றி தோல்வியை கணக்கில் கொண்ட இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும். அந்தவகையில் இந்திய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றியை ஈட்ட வேண்டும்.

    அதேசமயம் இந்த தொடரை இந்திய அணி 2-2 என சமநிலையில் முடிக்கும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியும் அல்லது இரண்டு போட்டிகளையும் டிரா செய்தால் மட்டுமே இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பானது கிடைக்கும்.

    ஒருவேளை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இத்தொடரை இழக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை முழுமையாக வீழ்த்தியும், அஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கான வாய்ப்பு இருக்கும்.

    • 63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
    • இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களும் இலங்கை 328 ரன்களும் சேர்த்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி தற்போது தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.

    63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியா 60.710 புள்ளிகளுடன் இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை அணி 45.45 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

    • இந்திய அணி 4 (ஆஸ்திரேலியா) போட்டிகளில் 2 வெற்றி பெற வேண்டும்.
    • தென் ஆப்பிரிக்கா அணி 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

    புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இல்லாததால் அந்த அணி இடம் பெறவில்லை. அதனால் இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணிக்கு இன்னும் 4 (ஆஸ்திரேலியா) போட்டிகள் மீதமுள்ளது. இதில் 2 வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

    ஆஸ்திரேலியாவுக்கு 6(4 இந்தியா 2 இலங்கை) போட்டிகளில் 4 போட்டிகளிலும் இலங்கைக்கு ( 1 தென் ஆப்பிரிக்கா 2 ஆஸ்திரேலியா)3 போட்டிகளில் மூன்றுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

    • 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
    • ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

    பெர்த்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங் சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.

    46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.

    534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெற்றிக்கு மேலும் 522 ரன் தேவை.கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இந்தியா 110 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா 90 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை.
    • ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாடாதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சையும் சேர்த்து ரோகித் 91 ரன்கள் மற்றும் கோலி 93 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர்.

    இந்நிலையில், ஒழுங்காக விளையாடவில்லை எனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய கர்சான் காவ்ரி, "இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள். குறிப்பாக ரோஹித் மற்றும் விராட் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். உங்கள் சொந்த மண்ணில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

    முதலில், நீங்கள் பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தீர்கள். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மாற்றங்களைச் செய்தீர்கள், ஆனால் மூன்று நாட்களுக்குள் அந்த போட்டியில் தோல்வியடைந்தீர்கள்.

    ஒரு டெஸ்ட் போட்டியில் போட்டியிடுவதற்கு 350 அல்லது 400க்கு மேல் ஸ்கோர்களை எடுக்க வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டும். பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நமது பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் சிரமப்படும்போது, வெளிநாடுகளில் என்ன செய்வார்கள்? உண்மையிலேயே ஏமாற்றம்தான். ஆஸ்திரேலியாவில் எப்படி இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சரியாக விளையாடவில்லை எனில் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும்.

    அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவை. எதிர்காலத்திற்காக நாம் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். செயல்படாத வீரர்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?

    அவர்கள் சிறப்பாக விளையாடினால், அவர்களை அணியில் வைத்து கொள்ளலாம். இல்லையென்றால், ஏன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சரியாக விளையாடாத வீரர்களை தேர்ந்தெடுப்பீர்கள் எனில் புஜாரா அல்லது ரஹானேவைக் கொண்டு வாருங்கள். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?

    ஆஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில், அதிக நேரம் களத்தில் நின்று பெரிய ஸ்கோர் முடிக்கக்கூடிய அனுபவமிக்க வீரர்கள் நமக்கு தேவை. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க பெரிய ஸ்கோரை நீங்கள் அடிக்க வேண்டும்" என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என கைப்பற்றியது.
    • இதனால் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இதில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

    இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
    • டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த வங்கதேசம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.

    துபாய்:

    இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74.24 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேசம் 5-வது இடத்தில் இருந்து சரிந்து 7வது இடத்துக்கு சரிந்தது.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
    • டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.

    துபாய்:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.

    டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திற்கு சென்றது.

    இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேசம் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.
    • டெஸ்டில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.

    துபாய்:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை ஒரு இடம் உயர்ந்து 3-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வி அடைந்த நியூசிலாந்து ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு சென்றது.

    இங்கிலாந்து 5-வது இடத்திலும், வங்கதேசம் 6-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • வங்கதேசக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.

    துபாய்:

    இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் 6-வது இடத்திற்கு சரிந்தது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது. இலங்கை 4வது இடத்திலும், இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    ×