என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சாம்பியன்ஷிப்"

    • உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன.
    • தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்வெண்கலம் வென்றார்.

    கெய்ரோ:

    உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன. இதில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் (26), நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார்.

    போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார்.

    அவர் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

    தென் கொரியாவின் பான் ஹியோஜின் முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் 2-வது இடமும் பிடித்தனர்.

    உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3வது இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார். இதற்கு முன் அஞ்சும் மோடுகில் (2018), மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் லியு யீ- சென் போயாங் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி முதல் செட்டை 21-19 என கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2வது செட்டை சாத்விக் சிராக் ஜோடி 21-18 என வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சீன ஜோடி 21-12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கத்தைப் பெற்று அசத்தியது.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாதவிக் சிராக் ஜோடி 2வது சுற்றிலும் வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி, சீனாவின் லியனக் வெய் காங்-வாங் சாங் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21 என முதல் செட்டை இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.
    • கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் நீளம் தாண்டுதல் வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் தனக்கு ஒரு கிட்னி மட்டுமே உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தூரம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்று அசத்தினார். ஆனால் போட்டிக்கு முன்னதாகவே அதே ஆண்டில் நடந்த மருத்துவ பரிசோதனையில் தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.

    அந்த வருடம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் அஞ்சு ஜார்ஜின் கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.

    இடைவேளை எடுத்துக்கொண்டு ஐரோப்பாவை சுற்றி பார்க்கவும், முந்தைய சாம்பியன்ஷிப் போட்டிகளை பார்க்கவும் ஊக்குவித்த தனது கணவர் தன்னை போட்டிக்காக மன ரீதியாக தயார் படுத்தினார் என்று அஞ்சு சமீபத்தில் நடத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    ×