என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world championships"

    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    டோக்கியோ:

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அவர் தனது முதல் வாய்ப்பில் 84.85 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.

    இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாதவிக் சிராக் ஜோடி 2வது சுற்றிலும் வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி, சீனாவின் லியனக் வெய் காங்-வாங் சாங் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21 என முதல் செட்டை இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் ஏலத்தில் இருந்து இத்தாலி பின்வாங்கியது.
    • சீனா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், உலக தடகள கவுன்சில் அதற்கு வாய்ப்பு அளித்துள்ளது.

    இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். 2025-ல் ஜப்பான் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்தப்படுகிறது.

    2027-ம் போட்டியை நடத்த இத்தாலி, சீனா விருப்பம் தெரிவித்திருந்தன. இத்தாலியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு 92 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான தொகையை ஒதுக்க உத்தரவாதம் அளிக்க மறுத்துவிட்டது. இதனால் இத்தாலி போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.

    இதனால் சீனா போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் 2027 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். தடகள போட்டிகள் அனைத்தும் இந்த சாம்பியன்ஷிப்பிற்குள் அடங்கும்.

    உலக தடகள கவுன்சில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வணிக மார்க்கெட்டான சீனாவில் விளையாட்டு மற்றும் ரசிகர்கள் வளர்ச்சிக்கு இது வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த முறை ஹங்கேரியின் புத்தாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நடைபெற்றது. அதற்கு முன்னதாக அமெரிக்காவில் உள்ள ஒரேகானில் நடைபெற்றது.

    • தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.
    • கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் நீளம் தாண்டுதல் வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் தனக்கு ஒரு கிட்னி மட்டுமே உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தூரம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்று அசத்தினார். ஆனால் போட்டிக்கு முன்னதாகவே அதே ஆண்டில் நடந்த மருத்துவ பரிசோதனையில் தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.

    அந்த வருடம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் அஞ்சு ஜார்ஜின் கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.

    இடைவேளை எடுத்துக்கொண்டு ஐரோப்பாவை சுற்றி பார்க்கவும், முந்தைய சாம்பியன்ஷிப் போட்டிகளை பார்க்கவும் ஊக்குவித்த தனது கணவர் தன்னை போட்டிக்காக மன ரீதியாக தயார் படுத்தினார் என்று அஞ்சு சமீபத்தில் நடத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா தான்டா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். #Wrestling #PoojaDhanda

    புடாபெஸ்ட்:

    உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி ஹங்கேரி புடாபெஸ்டில் நடந்து வருகிறது.

    இதன் பெண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பூஜாதன்டா- 2017-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனான கிரேஸ் ஜேக்கப் புல்லன் மோதினர்.

    இதில் பூஜாதன்டா 10-7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். இது இந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 2-வது பதக்கமாகும். இதற்கு முன்பு ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியா வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.


    உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை பூஜாதன்டா ஆவார். இதற்கு முன்பு அல்காதோமர் (2006), கீதா (2012), பபிதா போகத் (2012) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று இருந்தனர். #Wrestling #PoojaDhanda

    ×