search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bronze"

    • 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
    • 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சிஐஎஸ்சிஇ நியூ டெல்லி சார்பில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி சென்னை வேல்ஸ் பன்னாட்டு பள்ளி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சிஐஎஸ்சிஇ பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளியில் இருந்து 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம், சம்ரிதா 26 கிலோ பெண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், தர்ஷன் 60 கிலோ ஆண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், பக்கா லோகேஸ்வர் ரெட்டி 60 கிலோ மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் விஷ்ணு ராம் 55 கிலோ எடை பிரிவு, ராகினி 50 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். ஆசிரா 46 கிலோ எடைப்பிரிவு, வருனேஷ் 45 கிலோ எடை பிரிவு,

    சந்தோஷ் 40 கிலோ எடை பிரிவு, கமலேஷ் 50 கிலோ எடைபிரிவு, பிரணவ் 35 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடை பிரிவிலும் ,ஏகநாதன் 45 கிலோ எடை பிரிவிலும், நவ்ஷத் 66 கிலோ எடை பிரிவிலும், வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    லீனா ஸ்ரீ 14 வயது உட்பட்ட பெண்கள் பிரிவில் 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார்.

    கலந்து கொண்ட பதினைந்து பேர்களில் 14 பேர்கள் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கல, பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த தோடு 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஓவரால் சாம்பிய ன்ஷிப்பும், பெற்று தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்கள் அனை வரும் ஹயாஷிகா கராத்தே கழகத்தின் தஞ்சை செயலாளர் மற்றும் பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் கலந்து கொண்டு பதக்கங்களை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் மற்றும் கராத்தே பயிற்சியாளர்களுக்கும் பள்ளியின் தாளாளர் திரு ஜெரால்ட் பிங்னோரா ராஜ் மற்றும் பள்ளியின் இயக்குனர் திருமதி ரபேக்கா , பள்ளியின் முதல்வர் திருமதி விஜயலட்சுமி' ஆகியோர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷியாம் சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துள்ளனர்.

    தங்கப்பதக்கம் வென்ற விஷாலினி, சம்ரிதா, தர்ஷன், பக்கா லோகேஸ்வர் ரெட்டி ஆகியோர் அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வா கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா தான்டா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். #Wrestling #PoojaDhanda

    புடாபெஸ்ட்:

    உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி ஹங்கேரி புடாபெஸ்டில் நடந்து வருகிறது.

    இதன் பெண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பூஜாதன்டா- 2017-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனான கிரேஸ் ஜேக்கப் புல்லன் மோதினர்.

    இதில் பூஜாதன்டா 10-7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். இது இந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 2-வது பதக்கமாகும். இதற்கு முன்பு ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியா வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.


    உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை பூஜாதன்டா ஆவார். இதற்கு முன்பு அல்காதோமர் (2006), கீதா (2012), பபிதா போகத் (2012) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று இருந்தனர். #Wrestling #PoojaDhanda

    இளையோர் ஒலிம்பிக்கில் தமிழக தடகள வீரர் பிரவீன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். #YouthOlympic #PraveenChitravel
    பியூனஸ் அயர்ஸ்:

    3-வது இளையோர் ஒலிம்பிக் (யூத்) போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை நீளம் தாண்டுதல்) கியூபா வீரர் அலெக்ஜான்ட்ரோ டியாஸ் (34.18 மீட்டர்) தங்கப்பதக்கமும், நைஜீரியாவின் எம்மானுல் ஒரிட்ஸ்மீவா (31.85 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

    தமிழகத்தை சேர்ந்த பிரவீன் வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த போட்டி புதிய விதிமுறைப்படி இரண்டு பகுதியாக நடத்தப்பட்டது. இதன்படி முதல் பகுதியில் அதிகபட்சமாக 15.84 மீட்டர் தூரமும், 2-வது பகுதியில் அதிகபட்சமாக 15.68 மீட்டர் தூரமும் தாண்டினார். ஆக மொத்தம் 31.52 மீட்டர் நீளம் தாண்டிய பிரவீன் 3-வது இடத்தை பிடித்து பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் சர்வதேச அளவில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பள்ளிகளுக்கு இடையே நடந்த கேலோ விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார்.

    17 வயதான பிரவீன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். அவரது தந்தை சித்திரைவேல் விவசாய கூலித்தொழிலாளி. பிரவீனின் சாதனை குறித்து அவருக்கு பயிற்சி அளித்து வரும் இந்திரா சுரேஷ் கூறியதாவது:-

    பிரவீன் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு விடுதியில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்த போது, அவரது திறமையை கண்டு வியந்தேன். அதைத் தொடர்ந்து அவர் மீது தனிகவனம் செலுத்தி பயிற்சி கொடுத்தேன். அந்த சமயம் நான் எஸ்.டி.ஏ.டி.யில் (சென்னை) தடகள பயிற்சியாளராக பணியாற்றி கொண்டிருந்தேன். பிறகு நான் நாகர்கோவிலுக்கு இடம் மாறிய போது, பிரவீனும் அங்கு வந்து உங்களிடம் தான் பயிற்சி பெறுவேன் என்று கூறினார். அதனால் அவருக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். பிரவீன் மட்டுமல்ல, அவரது இளைய சகோதரரும் என்னிடம் தான் பயிற்சி எடுத்து வருகிறார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர், பிரவீன். அவரது தந்தை விவசாய தினக்கூலி. தந்தையின் வருமானம் பிரவீனின் தடகள பயிற்சிக்கு போதுமானதாக இல்லை. போட்டிகளில் பங்கேற்க ஒரு சிலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

    பிரவீனிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடினமாக உழைக்கக்கூடியவர். எப்போதாவது தான் சொந்த ஊருக்கு செல்வார். மற்றபடி அவரது தந்தை தான் இங்கு வந்து பார்த்து செல்வார். அவரை சீனியர் போட்டியில் தேசிய அளவிலான சாம்பியனாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் பிறகு இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய வேண்டும்.

    பிரவீன் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். தேர்வு எழுதுவதற்காக மட்டுமே அங்கு செல்வார். அதற்குரிய அனுமதியை அந்த கல்லூரி நிர்வாகம் வழங்கி இருகிறது. மற்ற நேரங்களில் அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபடுவார்.

    இவ்வாறு இந்திரா கூறினார். 
    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் குர்னிஹால் சிங் வெண்கலப்பதக்கத்தை வென்றார். #JuniorShooter #India ##ISSFWCH
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

    இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

    செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4-வது இடம் வகிக்கிறது.  #JuniorShooter #India ##ISSFWCH
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன், அரையிறுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #BoxerVikasKrishan
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன் 75 கிலோ எடைப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் அமான்குல் அபில்கானுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், கண்ணில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் உடற்தகுதி பெறவில்லை.



    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஷ் கிரிஷனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. காலிறுதியில் சீன வீரருடன் மோதியபோது காயம் மேலும் தீவிரமடைந்தது. எனினும், கடுமையாக போராடி அந்த போட்டியில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில், விகாஸ் கிரிஷன் அரையிறுதியில் பங்கேற்பதற்கு மருத்துவ ரீதியாக உடற்தகுதி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. எனவே, அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

    காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்ட விகாஸ் கிரிஷன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் ஆசிய போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று முறை பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #BoxerVikasKrishan

    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SainaNehwal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன தைபே வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய போட்டியில் சாய்னா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

    இதையடுத்து இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் முதல் செட்டை பிவி சிந்து கைப்பற்றியிருப்பதால், போட்டியின் முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். #AsianGames2018 #SainaNehwal
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    சென்னை:

    இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SauravGhoshal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்திருந்தார்.  

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் ஹாங்காங் வீரரான சங் மிங்கிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இன்று ஒரே நாளில் ஷ்குவாஷ் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
     #AsianGames2018 #SauravGhoshal
    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 11,300 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

    இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 570 பேர் பங்கேற்று உள்ளனர். 36 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியது.

    தொடக்க நாளில் துப்பாக்கி கூடுதலில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
    ×