என் மலர்

    நீங்கள் தேடியது "Prajnesh Gunneswaran"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். #PrajneshGunneswaran #ATPRanking
    பாரிஸ்:

    உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென் னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் திம் (ஆஸ்திரியா) 4 இடங்கள் முன்னேறி 2-வது முறையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் சரிவை சந்தித்து 7-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 3 இடம் சறுக்கி 8-வது இடத்தையும் பெற்றனர். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 9-வது இடத்திலும், கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் போட்டியில் 3-வது சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 13 இடங்கள் ஏற்றம் கண்டு 84-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். முழங்காலில் காயம் அடைந்து தேறி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 36 இடங்கள் சரிந்து 207-வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக யுகி பாம்ப்ரி டாப்-200 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் 139-வது இடத்தையும், சகெத் மைனெனி 251-வது இடத்தையும், சசிகுமார் முகுந்த் 268-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் 2 இடம் முன்னேறி 94-வது இடத்தையும், ரோகன் போபண்ணா 36-வது இடத்தையும், திவிஜ் சரண் 41-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தையும், இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 2 இடம் சறுக்கி 7-வது இடத்தையும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சபலெங்கா (பெலாரஸ்) 9-வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இன்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 36 இடம் உயர்வு கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 3 இடம் முன்னேறி 20-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 2 இடம் சரிந்து 168-வது இடத்தையும், கர்மான் தாண்டி 7 இடங்கள் முன்னேறி 203-வது இடத்தையும் தனதாக்கினார்கள்.  #PrajneshGunneswaran #ATPRanking 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடத்தை பிடித்துள்ளார். #PrajneshGunneswaran
    புதுடெல்லி:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

    சென்னையில் கடந்த வாரம் நடந்த சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6 இடங்கள் முன்னேறி 97-வது இடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த 29 வயதான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் ‘டாப்-100 இடத்துக்குள் முதல்முறையாக நுழைந்துள்ளார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 100-வது இடத்துக்குள் முன்னேறிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே சோம்தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் இந்த இலக்கை எட்டி இருந்தனர்.

    97-வது இடத்தை பிடித்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அளித்த பேட்டியில், ‘என்னை பொறுத்தமட்டில் இது சிறந்த மைல் கல்லாகும். கடினமான உழைப்பின் மூலம் இந்த சீசனில் எனது பல இலக்குகளில் முதல் இலக்கை எட்டி இருக்கிறேன். இந்த ஆண்டு நல்ல தொடக்கம் கண்டுள்ளேன். இன்னும் பல விஷயங்களில் நான் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. உடல் தகுதிக்காக இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ராம்குமார் 5 இடம் முன்னேறி 128-வது இடமும், காயத்தில் சிக்கி தவித்து வரும் யுகி பாம்ப்ரி 4 இடம் சரிந்து 156-வது இடமும், சகெத் மைனெனி 5 இடம் ஏற்றம் கண்டு 255-வது இடமும், சசிகுமார் முகுந்த் 22 இடம் முன்னேறி 271-வது இடமும் பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 37-வது இடத்தில் நீடிக்கிறார். அவருடன் இணைந்து ஆடும் திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 39-வது இடமும், லியாண்டர் பெயஸ் 7 இடம் ஏற்றம் கண்டு 75-வது இடமும், ஜீவன் நெடுஞ்செழியன் 2 இடம் முன்னேறி 77-வது இடமும், புரவ் ராஜா 3 இடம் முன்னேறி 100-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக் குடியரசு வீராங் கனை கிவிடோவா, ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங் கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் நீடிக்கின்றனர். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 3 இடம் முன்னேறி 165-வது இடத்தையும், கர்மான் கவுர் தாண்டி ஒரு இடம் சரிந்து 211-வது இடத்தையும் பெற்றுள்ளனர். #PrajneshGunneswaran
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    சென்னை:

    இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி அடைந்தார். #StuttgartOpen
    ஸ்டட்கர்ட்:

    ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 75-ம் நிலை வீரர் குடோ பெல்லாவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 1 மணி 29 நிமிடங்கள் போராடிய தரவரிசையில் 169-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (4-7), 3-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதில் குணேஸ்வரன் வெற்றி பெற்றிருந்தால் கால்இறுதியில் ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) மோதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கும். #StuttgartOpen
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 23-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். #StuttgartOpen
    ஸ்டட்கர்ட்:

    ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 169-வது இடம் வகிப்பவரும், தகுதி நிலை வீரருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 23-ம் நிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) எதிர்கொண்டார். 1 மணி 48 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 7-6 (8-6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் குணேஸ்வரனின் டென்னிஸ் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

    2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்ச்சா ஸ்வெரேவை விரட்டினார். #StuttgartOpen
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான யூகி பாம்ப்ரி சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி 93-வது இடத்தில் இருந்து 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 14 இடங்கள் முன்னேறி 169-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    யூகி பாம்ப்ரி பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறினாலும், சர்பிட்டோன் சேலஞ்சர் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் 30 புள்ளிகள் கிடைத்தது. இதன்மூலம் 9 இடங்கள் முன்னேறினார்.



    ராம்குமார் ராமநான் 7 இடங்கள் பின்தங்கி 128-வது இடத்திலும், சுமித் நகல் 14 இடங்கள் பின்தங்கி 234-வது இடத்திலும் உள்ளனர்.

    இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா 22-வது இடத்திலும், திவிஜ் ஷரன் 43-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 59-வது இடத்திலும், புரவ் ராஜா 77-வது இடத்திலும் உள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். #Gunneswaran #FrenchOpen2018
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் தகுதி சுற்றில் விளையாடி வந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) சந்தித்தார். இதில் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்று நாளை தொடங்குகிறது. #Gunneswaran #FrenchOpen2018
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். #Gunneswaran #FrenchOpen2018
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. இதன் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) இன்று சந்திக்கிறார். இதில் குணேஸ்ரன் வெற்றி பெற்றால் பிரதான சுற்றை எட்டுவார். 
    ×