என் மலர்
நீங்கள் தேடியது "Stuttgart Open"
- ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியின் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தது. இதில் பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்கா, இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியின் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், லாத்வியா வீராங்கனை ஜலினா ஒஸ்டாபென்கோ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த இகா ஸ்வியாடெக் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 2-6 என ஸ்வியாடெக் இழந்தார். இதன்மூலம் ஸ்டட்கர்ட் தொடரில் இருந்து ஸ்வியாடெக் வெளியேறினார்.
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 75-ம் நிலை வீரர் குடோ பெல்லாவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 1 மணி 29 நிமிடங்கள் போராடிய தரவரிசையில் 169-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (4-7), 3-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதில் குணேஸ்வரன் வெற்றி பெற்றிருந்தால் கால்இறுதியில் ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) மோதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கும். #StuttgartOpen
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 169-வது இடம் வகிப்பவரும், தகுதி நிலை வீரருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 23-ம் நிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) எதிர்கொண்டார். 1 மணி 48 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 7-6 (8-6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் குணேஸ்வரனின் டென்னிஸ் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்ச்சா ஸ்வெரேவை விரட்டினார். #StuttgartOpen






