search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN cm palanisamy"

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.2000 செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami #TNAssembly
    சென்னை:

    கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.2000 செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #TNAssembly
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    சென்னை:

    இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    சென்னை:

    சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று 7-வது நாளாக நீடித்தது. ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். 7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களை பாதிக்கிற வகையில் உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வேலை நிறுத்தத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    ×