search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
    X

    லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

    லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    சென்னை:

    சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று 7-வது நாளாக நீடித்தது. ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். 7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களை பாதிக்கிற வகையில் உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வேலை நிறுத்தத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    Next Story
    ×