search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silver"

    • கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.

    அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும்.
    • உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள், அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம் செவ்வாய்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர்.

    வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும். தற்போது போதிய ஆர்டர் கிடைக்காமல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளி விலை ஒரே நாளில் 1800 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் வெள்ளி ஆபரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் வெள்ளி கிராம் 79.30 ரூபாய், பார் வெள்ளி கிலோ 79 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது. நேற்று வெள்ளி கிராமுக்கு 1.80 குறைந்து 77.50 ரூபாய், பார் வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு 1800 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

    சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட இறக்கம் மற்றும் டாலர் மதிப்பு குறைவு உள்பட காரணங்களால் வெள்ளி விலை குறைந்துள்ளது. விலை குறையும்போது இன்னும் விலை குறையும் என கருதி மக்கள் வெள்ளி வாங்குவதை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை சங்க தலைவர் ஆனந்த ராஜன் கூறியதாவது,

    ரஷியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து அதிக அளவில் வெள்ளி கிடைக்கப்பெற்று சர்வதேச மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. ரஷியாவில் இருந்து மட்டும் வெள்ளி வரத்து 40 சதவீதம் இருக்கும். உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. இது மட்டுமின்றி சர்வதேச நிலவரங்கள் அடிப்படையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே வெள்ளி பொருட்கள் ஆர்டர் கிடைக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கிடைத்த 25 சதவீத ஆர்டர்களுக்கு மட்டும் பட்டறைகள் இயங்குகின்றன. 75 சதவீதம் வரை ஆர்டர்கள் குறைவால் பட்டறைகள் பாதி நாட்கள் மூடப்படுகின்றன.

    இந்த நிலையில் திடீரென பார் வெள்ளி விலை சரிந்துள்ளதால் மேலும் தொழில் வீழ்ச்சி அடையும் நிலை உள்ளதால் வெள்ளி பொருட்கள் விற்பனையாளர்கள், வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
    • வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜனிடம் இருந்து வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.அதன்பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் வெள்ளிப் பொருட்களை தயார் செய்து ஆனந்தராஜிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து ஆனந்த ராஜன் கொண்டலாம்பட்டி போலீஸ் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் -செட்டிபாளை யம் ரோடு, சி.டி.சி டெப்போ அருகில் சங்கரநாராயணன் என்பவரது மனைவி உஷாராணி (வயது 60) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அருகில் இருந்தவர்கள் அவரது வீடு திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் பணம் மற்றும் நகைகள் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதற்கிடையே அந்த வீட்டின் அருகில் முருகன் என்பவரது மகன் அழகுராஜா ( 38 ) என்பவர் குடியிருந்து வருகிறார். அவரும் நேற்று வெளியில் சென்று இருந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
    • இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54).

    என்ஜினீயர்

    இவர் குடும்பத்துடன் பக்ரைன் நாட்டில் தங்கி, என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். ரெட்டிபட்டியில் உள்ள கோவிந்தராஜன் வீட்டை, அவரது மாமனாரான ஜாகீர்காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி பராமரித்து வருகிறார்.

    இதையடுத்து தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது, அதன் பதிவுகளை பழனிச்சாமி தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் பார்த்துக் கொள்வார்.

    வெள்ளிப்பொருட்கள், நகை திருட்டு

    இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில், பழனிச்சாமி செல்போனில் பார்த்தபோது, கோவிந்தராஜின் வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

    அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த இருந்த 4 தங்க காசுகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வீட்டிலிருந்த சொகுசு காரும் திருடுபோய் இருந்தது

    இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ்(வடக்கு) துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் நடைபெற்ற அந்த வீடு மற்றும் தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சூப்பர் மார்க்கெட், டெய்லர் கடையில் கொள்ளை

    சேலம் வீராணம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல்(48). இவர் மன்னார் பாளையம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இரவு ரத்தினவேல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சோப்பு மற்றும் பேஸ்ட், கல்லாவில் இருந்த ரூ.800, ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரத்தினவேல் உடனடியாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதே போல் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் அழகாபுரம் காட்டூர் மெயின் ரோடு பாறை வட்டம் அருகே உள்ள சிவாயநகர் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வாடிக்கையாளர்களின் துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. கல்லாவில் ஏதும் பணம் வைக்காததால் திருட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இருப்பினும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.

     இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
    • மாணவிக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி எம்.எல்.ஏ வாழ்த்துகளை தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி கிருஷாந்தா, மத்தியப்பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற எஸ்பிகேஎப் 7வது நேசனல் கேம்ஸ் 2022 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

    இதன்மூலம் அடுத்த மாதம் நேபாளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    அவருக்கு நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மாணவிக்கு பயிற்சி வழங்கியஏ.ஐ.ஒ விளையாட்டு அகாடமிக்கும், ஆதர்ஷ் பள்ளிக்கும் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    அதுபோல், திட்டச்சேரி ப.கொந்தகை அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஹரிஹரசுதன் - வெற்றிவேல் நினைவாக நடைபெற்ற, 39-ம் ஆண்டு மாபெரும் கபடி தொடர் போட்டி நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.

    • மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.
    • கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 23).

    இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24).

    இவர்கள் இருவரும் கடந்த 30-ம்தேதி புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது, பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.

    பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் கீழ்வேளூர் அருகே உள்ள கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜித் (23), அகரகடம்பனூர் ஊராட்சி கோவில்கடம்பனூரை சேர்ந்த வினோத் (24), கோவில்கடம்பனூர் ஸ்ரீகண்டி நத்தத்தை சேர்ந்த சுதீஷ் (19) என்பதும் இவர்கள் மூவரும் மேற்படி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
    • இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    சேலம்:

    வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் சேலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி வெள்ளிப் பொருட்கள் கேட்டு வட மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் போது வடமாநிலங்களில் பெண்கள் லைட் வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் வாங்குவார்கள். இதையொட்டி வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.

    • 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
    • உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் பூஞ்சைகாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 40).

    இவர் நேற்று ரெயில் நிலையத்தில் மங்களூர் செல்வதற்காக நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த ரெயில்வே போலீசார் வெங்கடாசலபதி வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மங்களுருக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்குரிய உரிய ஆவணம் இல்லை.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சேலம் வணிகவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்ததில் 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • காவல்காரர் ஒருவர் பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

    பேராவூரணி:

    பேராவூரணி பேரூராட்சி நாட்டா ணிக்கோட்டையில் ஏற்கனவே இரண்டுமுறை திருடுபோன ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மூன்றாவது முறையாக வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன் (70) வடக்கு நாட்டாணி க்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அடிக்கடி மகளை பார்ப்பதற்காக பெங்களூர் சென்றுவி டுவார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைப்பூட்டிவிட்டு பெங்களூர் சென்றிரு ந்தபோது இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து வெ ங்ட்ரா மன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி விட்டார்.

    வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெங்கட்ராமன் பெ ங்களூர் சென்றுவிட்டார். காவல்காரர் ஒருவர்பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வை யிட்டு செல்வதுவழக்கம். இந்நிலை யில் ஞாயிற்று க்கிழமை அதிகாலை, பெங்களூரில் இருந்த வெங்கட்ராமன் மகள், சிசிடிவியை தனது மொபைல் போன் மூலம் பார்த்த போது, அதிகாலை 2:20 மணிக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெங்களூ ரில் இருந்த அவர் நாட்டா ணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார்திறந்து கிடந்த வீட்டை பார்வையி ட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் பீரோ, அலமாரியில் பொருட்கள் இருக்கிறதா என தேடிப்பார்த்தது பதிவாகி இருந்தது.பேராவூரணி காவல்நிலை யத்தில் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் இரவு ரோந்து பணிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

    எனவே போலீஸ் நிலையத்திற்கு தேவையான போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 61). இவர் தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு தற்போது அரூர் பகுதியில் வசித்து வருகிறார். 

    இன்று காலை அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனடியாக  இது குறித்து தமிழழகன்க்கு  தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரது மனைவி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் ஆகிய பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.  

    இதுகுறித்து  கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.    
    ×