என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் பட்டு சேலை"

    • தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும்.
    • காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருமண வீடு என்றாலே அங்கு காஞ்சிபுரம் பட்டுக்கு தான் முதல் மரியாதை. மணமகள், மணமகன் குடும்பத்தினர் அனைவருமே பட்டு ஆடைகளை உடுத்தி புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பார்கள்.

    அதிலும் மணமகள் அணியும் பட்டுச்சேலையானது அசல் தங்கம், வெள்ளி ஜரிகைகளுடன் புத்தம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும். மணமகள் அணியும் முகூர்த்த பட்டுச்சேலையின் அழகை திருமணத்துக்கு வரும் பெண்கள் அனைவருமே பார்த்து ரசிப்பார்கள். வியக்கவும் செய்வார்கள்.

    இந்த பாரம்பரிய புடவைக்கு அழகு சேர்ப்பது தங்கம், வெள்ளி ஜரிகைகள் தான். ஆனால் தங்கமும், வெள்ளியும் கடந்த 2 மாதங்களாகவே வரலாறு காணாத விலை உயர்வை கண்டுள்ள நிலையில், அதன் தாக்கம் காஞ்சிபுரம் பட்டுச்சேலையிலும் எதிரொலித்து வருகிறது.

    இதன் விளைவு காஞ்சிபுரம் பட்டுச்சேலையின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதாவது அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் இப்போது ஏழைகளுக்கு காட்சி பொருளாக மாறி விட்டது.

    காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் அளவை பொறுத்து அதன் விலை அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சேலை 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் தாமிரம் மற்றும் 24 சதவீதம் பட்டு நூல்கள் இருக்கும்.

    தற்போது தங்கம் விலை சவரன் ரூ.90 ஆயிரத்தையும், வெள்ளி கிலோ ரூ.1.65 லட்சத்தையும் தாண்டி விற்பனையாகிறது. பட்டுச் சேலை ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை குறைக்க முடியாததால் அதன் விலை அதிகரித்துள்ளது.

    இதற்கு முன்பு ஜரிகை கிலோ ரூ.85 ஆயிரமாக இருந்தது. அது இப்போது ரூ.1.35 லட்சமாக அதிகரித்து விட்டது. ஒரே வருடத்தில் கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் உயர்ந்துள்ளது.

    குறைந்த அளவிலான ஜரிகைகள் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த சேலைகளின் விலை தற்போது ரூ.20 ஆயிரமாக அதிகரித்து விட்டது. அதிக ஜரிகைகள் கொண்ட பட்டுப்புடவை விலை ஏற்கனவே ரூ.2 லட்சத்துக்கும் மேல் விற்கப்பட்டது. இந்த சேலைகள் விலை தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளன.

    திருமணங்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளின் போது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே பட்டுச்சேலை அணிவது நமது பாரம்பரியங்களில் ஒன்றாகும். ஆனால் இப்போது திருமண நிகழ்ச்சிகளை வைத்திருக்கும் ஏழை குடும்பத்தினரால் மிக குறைந்த ஜரிகைகள் கொண்ட பட்டுச்சேலைகளையே வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக ஜரிகைகளை கொண்ட பட்டுச் சேலைகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு விலை அதிகமாக தெரிகிறது. இதனால் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பட்டுச் சேலைகளை வாங்க பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் கடைகள் 1000-க்கும் மேல் உள்ளன. மேலும் அங்குள்ள பல வீடுகளிலும் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

    தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பட்டுச் சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருகிறார்கள்.



    மேலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பட்டுச்சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருவது உண்டு. அவர்கள் பல லட்சம் செலவு செய்து பட்டுச் சேலைகளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது பட்டுச் சேலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சேலை வாங்க வருபவர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட விலை கொண்ட பட்டுச் சேலைகளை வாங்குவதை தவிர்க்கிறார்கள். மேலும் குறைந்த விலை கொண்ட சேலைகளையே தேர்வு செய்து வாங்குகிறார்கள். மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே சேலைகளை வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பட்டுச்சேலை விற்பனையும் குறைந்து வருகிறது.

    பட்டுச்சேலை விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தங்கத்தின் விலை உயர்வு பட்டுத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். இதனால் இப்போதே பல தொழிலாளர்கள் வேறு தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கி விட்டனர். இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாது என்பதால் பட்டுத்தொழில் மிகவும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கி உள்ளது.

    தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிலர் மட்டுமே ஆதாயம் அடையலாம். ஆனால் இந்த விலை உயர்வானது பலரது வாழ்வாதாரத்தையே அழித்து விடும் என்பதற்கு பட்டுத் தொழில் ஒரு சாட்சியாக கண்முன் வந்து நிற்கிறது.

    இனி வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலையானது கட்டுக்குள் இருந்தால் மட்டுமே பட்டுத்தொழிலும் தொடர்ந்து நடைபெறும். தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தால் அது காஞ்சிபுரம் பட்டுத் தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    • பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது.
    • திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறைப்பால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்து உள்ளது, இதனால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை மத்திய அரசு பட்டியலிட்டு தெரிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    ஜவுளித்துறை:-

    தமிழகத்தின் ஜவுளித்துறை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். அதனால் திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் இதன்மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். "இந்தியாவின் பின்னலாடை தலைநகர்" என்று அழைக்கப்படும் திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள் வேலை செய்கின்றனர். இந்தியாவின் பின்னலாடை துணி ஏற்றுமதியின் 90 சதவீத பங்களிப்பும், அதாவது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இங்கிருந்தே வருகிறது. குறைந்த மதிப்புள்ள ஆடைகள், எம்பிராய்டரி மற்றும் அணிகலன்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டதால், உற்பத்திச் செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும்.

    காஞ்சிபுரம் பட்டு:-

    இந்த பட்டு உலகப்புகழ் பெற்றது. அங்குள்ள நெசவாளர்கள், பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன்மீது தான். இந்த பட்டுக்கான தேவையான ஜரி, ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், மூலப்பொருள் செலவு 7 சதவீதம் குறையும். அதனால் இறுதி பட்டு விலையும் 2 முதல் 4 சதவீதம் வரை குறையும்.

    கைத்தறிப் பொருட்கள்:-

    ஈரோட்டின் பவானி ஜமுக்காளம், மதுரையின் சுங்குடி போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக இருக்கும். இவை உள்நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும். ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்பு உண்டு.

    வெண்கலச் சிலைகள்:-

    தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1,200 கைவினைஞர்கள் இழந்த மெழுகு வார்ப்பு முறையில் சிலைகள் உருவாக்குகின்றனர். ஆண்டுக்கு ரூ.20 முதல் 30 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால் விலையும் 6 சதவீதம் குறையும்.

    நாகர்கோவில் கோவில் நகை:-

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில் நகை செய்யும் தொழிலில் சுமார் 500 கைவினைக்குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீத குறைவால் விலை குறையும்.

    பித்தளை, கல், மர கைவினை பொருட்கள்:

    தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பிகள் உற்பத்தி செய்யும் பித்தளை, கல், மர கைவினை பொருட்கள் 6 முதல் 7 சதவீதம் வரை குறையும். சுற்றுலா சந்தையிலும், ஆன்லைன் விற்பனையிலும் அதிக ஆதாயம் உண்டு.

    பாரம்பரிய பொம்மைகள்:

    தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொம்மைகள், 5 சதவீத ஜி.எஸ்.டி.யால் விலை மலிவாகி, வெளிநாட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு போட்டியாகும்.

    தென்னை நார்:-

    பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது. பெண்கள் அதிகம் ஈடுபடும் இந்தத் துறையில், ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்ததால் தென்னை பாய், கயிறு, டெக்ஸ்டைல் போன்றவை 6 முதல் 7 சதவீதம் மலிவாகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையில் போட்டித்திறன் உயரும்.

    ஆவின்:-

    பால் பொருட்கள் பன்னீர், வெண்ணெய் போன்றவை ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் குறைந்ததால் அதன் விலையும் 4 முதல் 11 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. ஆவினில் தினசரி 37 லட்சம் லிட்டர் பால், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. குறைவால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும்.

    மணப்பாறை முறுக்கு:

    திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது. இந்த சிற்றுண்டி மூலம் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதன் விலை 6 சதவீதம் மலிவாகி இருக்கிறது.

    மீன்பிடித்துறை:-

    தமிழகத்தின் கடலோர 14 மாவட்டங்களில் 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். மீன், இறால், கடல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டதால், விலை 7 சதவீதம் மலிவாகி இருக்கிறது. அதனால் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்கள் அதிக நன்மை பெறும்.

    நோட் புத்தகம்:-

    சிவகாசி, பெரம்பூர் ஆகிய இடங்களில் அச்சு, ஸ்டேஷனரி தொழில் வலுவாக உள்ளது. நோட் புத்தகம், மற்றும் ஸ்டேஷனரி ஜி.எஸ்.டி. குறைவால் வியாபாரம் அதிகரிக்கும்.

    எலெக்ட்ரானிக்ஸ்:-

    ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் மையங்கள் உள்ளன. டிவி, மானிட்டர் 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைந்து இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும்.

    டிரோன்கள்:-

    சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் டிரோன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. 18, 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைந்ததால் விலை 18 சதவீதம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ஆட்டோமொபைல்:-

    கடந்த 2023-ல் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத பங்கு வகித்த தமிழகம், 22 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. 28-ல் இருந்து 18 சதவீதம் குறைவதால் வாகன விலை 8 சதவீதம் குறையும்.

    பாதுகாப்பு:-

    சென்னை ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தொழில் உற்பத்தி மையங்கள்உள்ளன. ஏவுகணைகள், போக்குவரத்து விமானங்கள், சிமுலேட்டர்கள் ஆகியவை இப்போது பூஜ்ஜிய ஜி.எஸ்.டி. என்பதால் விலைகுறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ரெயில் பெட்டிகள்:-

    சென்னை ஐ.சி.எப். உலகின் மிகப்பெரிய ரெயில் பெட்டி உற்பத்தியாளர். 8,200 பேர் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைவால், உற்பத்தி செலவு 5 சதவீதம் மிச்சமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது.
    • காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் என்றாலே பட்டுச்சேலை தான் நினைவுக்கு வரும். சுபகாரியங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வார்கள்.

    கடந்த மாதம் சுபமுகூர்த்த தினங்கள் இல்லை என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து இருந்தது. கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததை தொடர்ந்து சுப மூகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு பட்டுச்சேலை எடுக்க காஞ்சிபுரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வெளியூர்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்து வருவதால் பட்டுச்சேலை விற்பனை கடைகள் அதிகம் உள்ள காஞ்சிபுரம் காந்திரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அனைத்து கடைகளிலும் விற்பனை களை கட்டுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    இதற்கிடையே பட்டுச்சேலை கடைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த உரிய பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம், காந்திரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் காஞ்சிபுரம் நகர மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-

    கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது. தற்போது தை மாதம் தொடங்கி உள்ள நிலையில் பட்டு சேலைகள் அமோகமாக விற்பனையாகும். தை மாதம் மட்டும் அறிஞர் அண்ணா பட்டுக்கூட்டுறவு சொசைட்டியில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு சேலைகள் விற்பனையாகும். முகூர்த்த புடவைகளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அவர்கள் வசதிக்கு ஏற்றார் போல் வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலான முகூர்த்த புடவைகள் விற்பனையாகின்றன.

    காஞ்சிபுரத்தில் சுமார் ரூ.100 கோடி வரை பட்டுச்சேலைகள் இந்த தை மாதம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பட்டுச்சேலைகளுக்கு காந்தி ரோட்டில் அதிக அளவில் அரசு சொசைட்டிகள் மற்றும் தனியார் கடைகள் உள்ளன. முக்கிய முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் சேலை வாங்க கார்கள் மற்றும் வாகனங்களில் வருவதால் காந்தி ரோடு பகுதியில் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர்.
    • இரு தலைப்பட்சி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார். விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

    மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அம்பானி தம்பதியினர் நேற்று அமெரிக்கா சென்றனர்.

    பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

    மேலும் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகளிலும் அம்பானி தம்பதி கலந்துகொள்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

    அவர் அணிந்திருந்த காஞ்சிப்பட்டு சேலையில், காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், டிரம்ப் விழாவில் காஞ்சிப் பட்டுச் சேலையில் நீடா அம்பானி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.

    ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னரும் பல நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலைகளை அணிந்து வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×