என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளி"
- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்ற விவாதம் அதிகரித்துள்ளது.
- பலரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை கூறி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.
அண்மையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்ற விவாதம் அதிகரித்துள்ளது. பலரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உலக வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது என்று உலக புகழ்பெற்ற Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார்
இதுகுறித்து ராபர்ட் கியோசாகி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உலக வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது, இதற்கு செயற்கை நுண்ணறிவே முக்கிய காரணம். லட்சக்கணக்கான மக்கள் இந்த சரிவால் தங்கள் சேமிப்பு அனைத்தையும் இழக்க நேரிடும். செல்வத்தைப் பாதுகாக்க ஒரே வழி, தங்கம், வெள்ளி, பிட்காயின்களில் முதலீடுகள் செய்வதுதான். இதிலும் வெள்ளை சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடு" என்று தெரிவித்துள்ளார்.
- தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும்.
- காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருமண வீடு என்றாலே அங்கு காஞ்சிபுரம் பட்டுக்கு தான் முதல் மரியாதை. மணமகள், மணமகன் குடும்பத்தினர் அனைவருமே பட்டு ஆடைகளை உடுத்தி புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பார்கள்.
அதிலும் மணமகள் அணியும் பட்டுச்சேலையானது அசல் தங்கம், வெள்ளி ஜரிகைகளுடன் புத்தம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும். மணமகள் அணியும் முகூர்த்த பட்டுச்சேலையின் அழகை திருமணத்துக்கு வரும் பெண்கள் அனைவருமே பார்த்து ரசிப்பார்கள். வியக்கவும் செய்வார்கள்.
இந்த பாரம்பரிய புடவைக்கு அழகு சேர்ப்பது தங்கம், வெள்ளி ஜரிகைகள் தான். ஆனால் தங்கமும், வெள்ளியும் கடந்த 2 மாதங்களாகவே வரலாறு காணாத விலை உயர்வை கண்டுள்ள நிலையில், அதன் தாக்கம் காஞ்சிபுரம் பட்டுச்சேலையிலும் எதிரொலித்து வருகிறது.
இதன் விளைவு காஞ்சிபுரம் பட்டுச்சேலையின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதாவது அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் இப்போது ஏழைகளுக்கு காட்சி பொருளாக மாறி விட்டது.
காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் அளவை பொறுத்து அதன் விலை அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சேலை 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் தாமிரம் மற்றும் 24 சதவீதம் பட்டு நூல்கள் இருக்கும்.
தற்போது தங்கம் விலை சவரன் ரூ.90 ஆயிரத்தையும், வெள்ளி கிலோ ரூ.1.65 லட்சத்தையும் தாண்டி விற்பனையாகிறது. பட்டுச் சேலை ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை குறைக்க முடியாததால் அதன் விலை அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு ஜரிகை கிலோ ரூ.85 ஆயிரமாக இருந்தது. அது இப்போது ரூ.1.35 லட்சமாக அதிகரித்து விட்டது. ஒரே வருடத்தில் கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் உயர்ந்துள்ளது.
குறைந்த அளவிலான ஜரிகைகள் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த சேலைகளின் விலை தற்போது ரூ.20 ஆயிரமாக அதிகரித்து விட்டது. அதிக ஜரிகைகள் கொண்ட பட்டுப்புடவை விலை ஏற்கனவே ரூ.2 லட்சத்துக்கும் மேல் விற்கப்பட்டது. இந்த சேலைகள் விலை தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளன.
திருமணங்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளின் போது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே பட்டுச்சேலை அணிவது நமது பாரம்பரியங்களில் ஒன்றாகும். ஆனால் இப்போது திருமண நிகழ்ச்சிகளை வைத்திருக்கும் ஏழை குடும்பத்தினரால் மிக குறைந்த ஜரிகைகள் கொண்ட பட்டுச்சேலைகளையே வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக ஜரிகைகளை கொண்ட பட்டுச் சேலைகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு விலை அதிகமாக தெரிகிறது. இதனால் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பட்டுச் சேலைகளை வாங்க பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் கடைகள் 1000-க்கும் மேல் உள்ளன. மேலும் அங்குள்ள பல வீடுகளிலும் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பட்டுச் சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருகிறார்கள்.

மேலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பட்டுச்சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருவது உண்டு. அவர்கள் பல லட்சம் செலவு செய்து பட்டுச் சேலைகளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது பட்டுச் சேலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சேலை வாங்க வருபவர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட விலை கொண்ட பட்டுச் சேலைகளை வாங்குவதை தவிர்க்கிறார்கள். மேலும் குறைந்த விலை கொண்ட சேலைகளையே தேர்வு செய்து வாங்குகிறார்கள். மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே சேலைகளை வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பட்டுச்சேலை விற்பனையும் குறைந்து வருகிறது.
பட்டுச்சேலை விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்கத்தின் விலை உயர்வு பட்டுத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். இதனால் இப்போதே பல தொழிலாளர்கள் வேறு தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கி விட்டனர். இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாது என்பதால் பட்டுத்தொழில் மிகவும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கி உள்ளது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிலர் மட்டுமே ஆதாயம் அடையலாம். ஆனால் இந்த விலை உயர்வானது பலரது வாழ்வாதாரத்தையே அழித்து விடும் என்பதற்கு பட்டுத் தொழில் ஒரு சாட்சியாக கண்முன் வந்து நிற்கிறது.
இனி வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலையானது கட்டுக்குள் இருந்தால் மட்டுமே பட்டுத்தொழிலும் தொடர்ந்து நடைபெறும். தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தால் அது காஞ்சிபுரம் பட்டுத் தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
- ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்தது.
- ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி இன்று 8.7% சரிவை சந்தித்தது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையாகிறது.
இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பெரும் வீழ்ச்சியை சந்தித்தன
ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் $4,082-54,143 வரை வர்த்தகம் ஆனது. இது 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
அமெரிக்கா-சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவுசெய்ததாலும், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதால் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி இன்று 8.7% சரிவை சந்தித்து சுமார் $47.89-$48.40 ஒரு அவுன்ஸ் என்ற நிலையை அடைந்தது. இது பிப்ரவரி 2021-க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
- பாதுகாப்பு பிரச்சனை இல்லை, பரிமாற்றங்களுக்கு எளிதானவை, எளிதில் பணமாக மாற்றலாம்.
- தீபாவளி அன்று, லட்சுமி தேவியை வணங்கும் சடங்காக, பொதுவாக மாலை நேரத்தில் பங்குச்சந்தை ஒரு மணிநேரம் திறக்கப்படும்.
நாளுக்கு நாள் தங்கம், வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில், தங்கத்துடன் சேர்த்து வெள்ளியில் முதலீடு செய்யும் ஆர்வமும் பெருகி விட்டது. அதேசமயம், பங்குச்சந்தையிலும் ஏற்ற இறக்கங்கள் நீடிப்பதால், முதலீட்டாளர்களின் தேர்வு, தங்கம் மற்றும் வெள்ளியாக இருக்கிறது.
இந்நிலையில், தங்கம்-வெள்ளியில் முதலீடு செய்வது நல்லதா?, பங்குச்சந்தை முதலீடு சிறந்ததா..? என்கிற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுவதுண்டு. இது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன். பங்குச்சந்தையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவரான இவர், 'சாய் ஷேர்ட்யூட்' -டின் நிறுவனர். இவர் தன்னுடைய சமூக ஊடகங்கள் வாயிலாக, முதலீடு சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்து வருகிறார். அவர், தங்கம் வெள்ளி முதலீடு தொடர்பான சந்தேகங்களுக்கு, விடை கொடுக்கிறார்.
* இன்றைய நிலவரத்தில், தங்கம் வெள்ளி முதலீடு சிறந்ததாக தோன்றுகிறதே, உண்மைதானா?
இவை இரண்டுமே வங்கி சேமிப்புகள் மற்றும் இதர சேமிப்புகளை ஒப்பிடும்போது சிறந்த தேர்வுகள் தான். ஆனாலும் இவற்றில் முதலீடு செய்யும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
உலகளவிலான பணவீக்க விகிதம் (Inflation), அரசியல் பதற்றங்கள் (Geopolitical Tensions), அமெரிக்க டாலரின் விலை ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் பின்னணியில், தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடாக (Safe Haven) உள்ளது. அதேசமயம் வெள்ளி ஒரு அதிக ஏற்ற இறக்கமுள்ள (Volatile) உலோகம். இது தொழில்துறை தேவை (சோலார் பேனல், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி) மற்றும் முதலீட்டுத் தேவை ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. பொருளாதாரம் வலுவாக இருந்தால் வெள்ளி விலை உயரும், ஆனால் மந்த நிலையில் விலை வீழ்ச்சி அதிகம். எனவே, தங்கத்தில் அதிக முதலீடும், வெள்ளியில் சிறு பங்கு முதலீடும் நல்லது.
* பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி வாங்க முடியுமா? லாபகரமாக இருக்குமா? எப்படி வாங்குவது? என்னென்ன தேவைப்படும்?
ஆம்! முடியும். டிமாட் மற்றும் டிரேடிங் கணக்கு இருந்தால், நீங்கள் பங்குச்சந்தையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம். தங்கம், வெள்ளி இ.டி.எப். வகைகளில், முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு நிப்பான் இந்தியா இ.டி.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ சில்வர் இ.டி.எப். போன்றவை, தங்கம்-வெள்ளி சார்ந்த பிரபலமான பங்குச்சந்தை முதலீடுகள். நகைகள், நாணயங்களை விட இவற்றில் கட்டணங்கள் குறைவு. பாதுகாப்பு பிரச்சினை இல்லை, பரிமாற்றங்களுக்கு எளிதானவை, எளிதில் பணமாக மாற்றலாம்.
* தீபாவளிக்கு என பிரத்யேகமாக நடைபெறும், பங்கு வர்த்தகம் பற்றி விளக்குங்கள்?
தீபாவளி அன்று, லட்சுமி தேவியை வணங்கும் சடங்காக, பொதுவாக மாலை நேரத்தில் பங்குச்சந்தை ஒரு மணிநேரம் திறக்கப்படும். இந்த நேரத்தில் வர்த்தகம் செய்வது வருடம் முழுவதும் நல்ல லாபம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. முகூர்த்த சிறப்பு வர்த்தகத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளைச் சிறிய எண்ணிக்கையில் வாங்கலாம். அல்லது, உங்கள் எஸ்.ஐ.பி.-ஐ இந்த நாளில் தொடங்கலாம்.
* பங்குச்சந்தை, நிலையாக இருக்கிறதா? இந்த சமயத்தில் எந்த துறையில் முதலீடு செய்வது நல்லது? எந்தத் துறையைத் தவிர்ப்பது நல்லது?
தற்போதைய பங்குச்சந்தை 'நிலையான ஏற்ற இறக்கம்' (Stable Volatility) கொண்டதாக உள்ளது. உலகப் பொருளாதாரச் சவால்கள் இருப்பினும், இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி (ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம்) சந்தையைத் தாங்கி நிற்கிறது. பெரும் சரிவு வருவதற்கான வாய்ப்பு தென்படவில்லை. ஆனால் அதி விரைவான வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. இந்த சூழலில் வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகள் (Banking & Financial Services), அடிப்படை கட்டுமானம் மற்றும் மூலப் பொருட்கள் (Infrastructure & Capital Goods), உள்நாடு சார்ந்த துறைகளில் (Domestic Cyclicals) முதலீடு செய்யலாம். ஐ.டி. சேவைகள் (IT Services), ஏற்றுமதி சார்ந்த துறைகளை (Export-oriented sectors) தவிரிப்பது நல்லது.
* தங்கத்திற்கு மாற்றாக, வெள்ளியில் முதலீடு செய்வது சிறப்பானதா? இல்லாதபட்சத்தில் வேறு எதில் முதலீடு செய்யலாம்?
வெள்ளியை, தங்கத்திற்கு மாற்றாக கருதமுடியாது. இப்போது வெள்ளியின் விலை ஏற்றம் பெற்றாலும், அதன் நிலைப்புத்தன்மை கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் முதலீட்டின் ஒரு பகுதியாக, வெள்ளியை வைத்து கொள்ளலாம். ஆனால் முழு பணத்தையும் அதில் முதலீடு செய்வது தவறு.
அதற்கு மாற்றாக, ரியல் எஸ்டேட் மியூச்சுவல் பண்டுகள் (REITs) மற்றும் கார்ப்பரேட் பாண்ட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை விட குறைந்த ஆபத்து மற்றும் நிலையான வருமானம் உண்டு.
- கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.
- கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்துள்ளன.
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சவாரியா சேத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் மூலவரான கிருஷ்ணருக்கு பக்தர் ஒருவர் வெள்ளி துப்பாக்கி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூண்டு காணிக்கை அளித்தார்.
இந்த இரண்டும் சேர்ந்து சுமார் அரை கிலோ எடை கொண்டவை. கடவுளுக்கு ஆயுதம் காணிக்கையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கோவில் தலைவர் ஜானகி தாஸ் கூறினார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தானில் பூண்டின் விலை கடுமையாக அதிகரித்தது.
பூண்டு பயிரில் இருந்து சில விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டினர். அதனால் வெள்ளி துப்பாக்கி, பூண்டு ஆகியவற்றை இறைவனுக்கு வழங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.
கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்துள்ளன. இங்குள்ள கிருஷ்ணர் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என தெரிவித்தனர்.
- தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும்.
- தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.
சென்னை:
தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. தங்களது அவசர தேவைக்குஉதவும் பொருளாகவும் பார்க்கிறார்கள்.
ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடனடி பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெற்று வந்தனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வந்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பேரிடியாக விழுந்தது.
அதாவது முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம். தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும்.
இந்த கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்தது.
இந்த சூழ்நிலையில் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவலாக, நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் 9 அம்சங்கள் முன் மொழியப்பட்டுள்ளன.
அதன் விவரம் வறுமாறு:-
* தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும்.
* தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
* வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.
* தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.
* தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.
* ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
* கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும்.
* அடமான நகையை திருப்பி தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
கன்னியாகுமரி:
தக்கலை-நாகர்கோவில் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக பயணிகள் கூட்டம் அரசு பேருந்துகளில் நிரம்பி வழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக் கட்டில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் எந்த பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பேருந்து ஸ்டாப்புக்கு முன்னரோ, பின்னரோ இறக்கி விட்டு மட்டும் செல்கின்றனர்.
இதனால் யாரும் ஏறவும் முடியாது.இதில் அரசு பேருந்து ஓட்டுனர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பேருந்தில் நிற்க கூட இடமில்லாத நிலை உள்ளது. இலவச பேருந்து சேவை வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் இலவச பேருந்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதால், முக்கிய பணிகளுக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இலவச பேருந்தில் ஏற முடியாத நிலை உள்ளது. மார்த்தாண்டத்திலிருந்தே பேருந்தில், நாகர்கோவில் வருபவர்களும் பல இன்னலுக்கு உள்ளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே காலை-மாலை வேளைகளில், குறிப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்மநபர்கள் கைவரிசை
- அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே குட்டைக்குழி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கும்பளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலையில் பூஜை நடப்பது வழக்கம்.
நேற்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றனர்.
இன்று காலை யில் பூஜை செய்வதற்காக ராமன் போற்றி கோவிலுக்கு சென்றார். உள்ளே சென்று பார்க்கும்போது கோவிலில் இருந்த பெரிய 15 கிலோ எடையிலுள்ள அணையா விளக்கு, மற்றும் 20 கிலோ எடையிலான பெரிய மணி மற்றும் 10 கிலோ மதிப்பிலான சிறிய மணிகள் உட்பட சுமார் 60 கிலோ எடையிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.
இதன்மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து அர்ச்சகர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தினமும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அருகே நரசிம்மர் ஆலயத்தில் உண்டியில் பணம் திருட்டு போனநிலையில் தற்போது திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்,
- பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது.
பல்லடம் :
பல்லடம் -செட்டிபாளை யம் ரோடு, சி.டி.சி டெப்போ அருகில் சங்கரநாராயணன் என்பவரது மனைவி உஷாராணி (வயது 60) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அருகில் இருந்தவர்கள் அவரது வீடு திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் பணம் மற்றும் நகைகள் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதற்கிடையே அந்த வீட்டின் அருகில் முருகன் என்பவரது மகன் அழகுராஜா ( 38 ) என்பவர் குடியிருந்து வருகிறார். அவரும் நேற்று வெளியில் சென்று இருந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதையடுத்து வெள்ளி தொழிலாளர்கள் கோரிக்கையின் அடிப்படை யில் அரியாகவுண்டம்பட்டி யில் வெள்ளி கொலுசு பன்மாடி உற்பத்தி மையக் கட்டிடம் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வெள்ளி கொலுசு உற்பத்தி மைய கட்டிட பணி களை விரைந்து முடித்துத் பயன்பாட்டுக்கு வழங்கு மாறு சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத் தலைவர் ஆனந்தராஜன், செயலாளர் முனியப்பன், துணை செயலாளர் பாபு ஆகியோர் தமிழ்நாடு சிட்கோ சென்னை கிண்டி யில் உள்ள மேலாண்மை இயக்குனர் மதுமதியிடம் மனு வழங்கினர். அப்போது அவர் விரைந்து கட்ட நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்தார்.
- சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
- இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.
சென்னை:
நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும்.
மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களை கண்களால் பார்க்க முடியும்.
சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.
இதனை தொலைநோக்கிகள் போன்ற உபகரணங்களை கொண்டு பார்க்க முடியும். கிண்டியில் உள்ள ஸ்பேஸ் ஆர்கேடில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தொலைநோக்கிகள் மூலம் வானில் தோன்றும் கிரகங்களின் இணைப்பு நிகழ்வை பார்க்க முடியும் என அதன் தலைமை செயல் அதிகாரி நீரஜ்லடியா கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பு விண்வெளி ஆய்வு ஒரு முக்கிய பொழுது போக்காக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொருவரும் நமது சூரிய குடும்பத்தை பற்றி மேலும் அறியவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.
இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை 3 கிரகங்கள் நேர்கோட்டில் சந்திப்பதை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






