என் மலர்
நீங்கள் தேடியது "Silver Coin"
- ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்தது.
- ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி இன்று 8.7% சரிவை சந்தித்தது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையாகிறது.
இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பெரும் வீழ்ச்சியை சந்தித்தன
ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் $4,082-54,143 வரை வர்த்தகம் ஆனது. இது 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
அமெரிக்கா-சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவுசெய்ததாலும், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதால் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி இன்று 8.7% சரிவை சந்தித்து சுமார் $47.89-$48.40 ஒரு அவுன்ஸ் என்ற நிலையை அடைந்தது. இது பிப்ரவரி 2021-க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
- 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குபதிவு .
- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.
திருப்பதி:
ஆந்திராவில் வருகிற 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்குபதிவு நடக்கிறது. தற்போது அங்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
கோணசீமா மாவட்டத்தில் தபால் ஓட்டு வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும் வெள்ளி காசுகளை சில அதிகாரிகள், ஆசிரியர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேர்தல் விதியை மீறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.






