என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Price Rise"

    • தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது.
    • சமீப காலங்களில் டங்ஸ்டன் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஆபரணங்கள் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றுவது தங்கமே. தமிழர் மரபிலும், இந்திய கலாசாரத்திலும் தங்கம் செல்வச்சின்னமாகவும், முதலீட்டாகவும், குடும்ப மரபின் அடையாளமாகவும் இடம்பிடித்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதால், சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் எட்டாக்கனியாகி விட்டன.

    கடந்த 1970-ம் ஆண்டு ரூ.3.32க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் விலை தற்போது ரூ.11 ஆயிரத்து 500-ஐ தொட்டு இருக்கிறது. அதனால் ஏழை-எளிய மக்களால் தங்கத்தை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே விஞ்ஞானிகள் தங்கத்திற்கு மாற்றான விலை குறைவான ஒரு உலோகத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் உள்ள தகவல்களில் 5 மாற்று உலோகங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

    அதன் விவரம் வருமாறு:-

    பிளாட்டினம்:- தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது. தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாது, நீடித்த தன்மை அதிகம். ஆனால் இது தங்கத்தை விட விலை உயர்வாக இருந்தாலும், மக்களுக்கு முதலீடாகவும் இருக்கும்.

    பல்லேடியம்:- பிளாட்டினத்துடன் ஒருமித்த பண்புகள் கொண்டது. வெள்ளை நிறத்தோற்றம், எடை குறைவாக இருப்பதால் மோதிரங்கள், சங்கிலிகள் போன்றவற்றுக்கு ஏற்றது.

    டைட்டானியம்:- இது மிகவும் இலகுவானாலும், வலிமை மிகுந்தது. ஒவ்வாமை ஏற்படாததால், நகைகளில் அதிகம் பயன்படுத்தலாம்.

    டங்ஸ்டன்:- மிக வலுவானது; கீறல் எளிதில் வராது. சமீப காலங்களில் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.

    வெள்ளி:- எளிமையான விலை காரணமாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விரைவில் கருமை படர்வது ஒரு சவால்.

    அதேபோல் தங்கத்தின் சிறப்பே அது பொன்னிறமாக மின்னுவதுதான். எனவே 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்', டைட்டானியம் போன்ற மலிவு உலோகங்களுக்கு தங்க நிறம் தரும் டைட்டானியம் நைட்ரேட் பூச்சு போட்டு, உண்மையான தங்கம் போல தோற்றமளிக்க முடியும். வெள்ளி தங்கக்கலவையை நானோ அளவில் வடிவமைத்து, தேவையான வண்ணத்தையும், பிரகாசத்தையும் உருவாக்கலாம். இதனால், கலைரீதியான பல நிற ஆபரணங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

    தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாத டைட்டானியம், நையோபியம் போன்ற உலோகங்களை அடிப்படையாகக் கொண்டு நகைகள் தயாரிக்கலாம்.. இது தவிர ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் தங்கம் தொடர்பான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இது உண்மையான தங்கத்துடன் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும், உற்பத்தி செலவு அதிகமுள்ளதால், வணிக ரீதியில் இன்னும் அமல்படுத்தவில்லை.

    இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

    தங்கம் என்பது நம் பாரம்பரியம், நம்பிக்கை, முதலீடு ஆகியவற்றின் சின்னமாக இருப்பதால் அதை முற்றிலும் மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால், தினசரி அணிவதற்கான ஆபரணங்களில் டைட்டானியம், பல்லேடியம், பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற உலோகங்களும், தங்கம் போல் தோற்றமளிக்கும் பூச்சுகளும் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வருங்காலத்தில் நம்முடைய நகைக்கடைகளில் தங்கம் மட்டுமல்லாது, விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் புதிய உலோகங்களும் பிரகாசமாக காட்சி அளிக்க போகிறது. எனவே தங்கம் இல்லாவிட்டாலும், அதற்கு இணையான வேறு ஆபரணங்களும் சந்தைக்கு வர இருக்கின்றன.

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
    • இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது.

    சென்னை:

    தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்தது.

    அதன் பிறகு 2 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ 55 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

    கடந்த 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.56,400-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 1000-க்கு விற்பனையாகிறது.

    ×