search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "political change"

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் அருகே தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரவளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் அருகே தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, தமிழக பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செய லாளர் பொன் பாலகணபதி, மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன்,மாவட்ட துணைத்தலைவர்வக்கீல் எஸ்.பி.வாரியார் வரவேற்றனர்.

    கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரவளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    உலக நாடுகளுடன் சமபலம் பொருந்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது,இதற்கு காரணம் தினமும் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் நரேந்திரமோடி என்பதை உலகமே வியந்து பாராட்டி வருகிறது.

    அவரது தலைமையில் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மாநிலங்களும் வளர்ச்சி பெற்று வருகின்றது.ஒளிவு மறைவு அற்ற முறையில் திட்டப்பணி கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்திய தேசத்தின் வளர்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநில மக்கள் அனைவரும் பங்கு கொண்டு வருகின்றனர். அது போல தமிழகமும் வளர்ச்சி அடைய வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் தமிழகத்திலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மலர வேண்டும் அதற்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் சென்னை கேசவன்,தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சுவைதர்,சிவமுருகன் ஆதித்தன்,சின்னத்தங்கம், ஜனகராஜ்,வக்கீல் சண்முகசுந்தரம்,வக்கீல் சந்தானகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ் குமார், சிவராமன், பால்ராஜ், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம்,மாவட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் விந்தியா முருகன், மாநகர தெற்குமண்டல் தலைவர் மாதவன் தெற்கு மண்டல் பா.ஜ.க. வக்கீல் பிரிவு தலைவர் வெற்றிவேல்,தெற்கு மண்டல பொருளாதார பிரிவு தலைவர்முருகேசன், பொதுச் செயலாளர் மகேஷ், பொருளாளர் முத்துராஜ், துணைத்தலைவர் பொய் சொல்லான் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×