search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speech"

    • நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
    • காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

    நடப்பு 2024, 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது.

    நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து உரையாற்றிய அவர்,

    முதலீட்டு செலவினங்களுக்காக இந்த ஆண்டு ரூ.11.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பீகார் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு. வெள்ள மேலாண்மைக்காக அசாம் மாநிலத்திற்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒடிசாவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்படும். பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ரூ.21,400 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

    நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியின மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

    25 ஆயிரம் ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா கொண்டு வரப்படும். நடப்பு நிதியாண்டில் கடன்களை தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபி-யில் 4.09 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், விதிகள் எளிமையாக்கப்படும். வெளிநாடுகளில் இந்திய ரூபாய் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ஜிஎஸ்டி வரி முறை மேலும் எளிதாக்கப்படும். புற்றுநோய்க்கான 3 முக்கிய மருத்துகளுக்கு சுங்கவரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மொபைல் போன்கள், அது தொடர்பான சாதனங்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

    தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைப்பு. பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
    • சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) காலை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அவரது உரையில்,

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும். ஆந்திராவிற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. பீகாருக்கு சிறப்பு நிதியாக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுககு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். வரும் 5 ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

    மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் துவங்கப்படுகிறது. மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும்.

    திவாலான நிதி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும். பிரதமரின் நகர்ப்புற வூட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகளின் வீடு தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் மீது உரையாற்றி வருகிறார்.
    • கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

    அவரது உரையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது மக்கள் மீண்டும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்திய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வளர்ச்சி அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

     ✵இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ✵நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்

    ✵பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ✵வேலை வாய்ப்புகளை பெருக்க 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ✵வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தப் படும் 

    ✵பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்

    ✵அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்வோம்...

    ✵மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

    ✵கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    ✵நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு MSP உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ✵உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் 

    ✵பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். கயாவில் புதிய தொழில்வழித்தடம் அமைக்கப்படும்.

    ✵20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்...

    ✵நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

    ✵ஆந்திராவை பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளும் சான்றி தழ்களை வழங்கினார்.

    கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்பட 5 ஊர்களில் நடத்தப்பட்டு இறுதியாக ராஜபாளை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் நினைவு சுழற் சின்னம் (செங்கோல்) வழங்கப்பட்டது. அதனை முதல்-அமைச்சரின் பார்வைக்கு அவர் அனுப்பி வைத்தார்.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இயற்கை வளங்களை பாதுகாத்து நமது பாரம்பரிய விலங்கான யானைகளை பாதுகாப்பது அனை வருடைய கடைமையாகும். ராஜபாளையம் தொகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெறு வதற்கு வசதியாக ராஜபா ளையம் தொகுதிக்கு தனி யாக புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப் படும் பணிகள் மருத்துவ மனையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் துணைவியார் நிர்மலா ராஜபாளையம் தொகுதி வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு நல்லபல திட்டங்களை செயல் படுத்திக் கொண்டு வரு கிறார். அவருக்கு தொகுதி மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலா, நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 20-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வார விழா கொண்டாட ஏற்பாடு
    • அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் 70-வது வார விழா தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.

    தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க. வாஞ்சிநாதன் தலைமை தாங்கி கூட்டுறவு கொடியை ஏற்றிவைத்தாா்.

    இதையடுத்து அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனா். விழாவில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் வாஞ்சிநாதன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை இலக்காக வைத்து கூட்டுறவு அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றாா்.

    விழாவில் சரக துணைப்பதிவாளா் மது, கூட்டுறவு துறை அலுவலா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், கூட்டுறவாளா்கள், சங்க உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

    விழாவில் கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.

    நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது. இதே மண்டபத்தில் இலவச ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    எடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் கல்வித் திட்டம் சனிக்கிழமையும், கப்பாலாபணியா் நல நிலக் குடியேற்ற கூட்டுறவு பண்ணை சங்கத்தில் மரக்கன்று நடும் விழாவும், ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட விழா நிகழ்ச்சிகளும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    • 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.
    • ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அதிகரிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார குழு கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் பேசியதாவது:-

    தெருநாய்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரின செயல்பாடு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருப்தியாக இல்லை. எனவே அதில் புதிய முறையை கொண்டு வர வேண்டும். தகுதியானவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தினால் தெருநாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:-

    தற்போது குப்பை பிரச்சினை தீவிரமாக உள்ளது. தரம் பிரிக்காமல் கொட்டப்படும் குப்பையால் குப்பை மேலாண்மையில் பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதார குழுவினர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் உறுப்பினர்கள் கேள்வி கேட்க வேண்டும். உரிய பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகள், பணியாளர்களுக்கு உள்ளது. அப்படி பதில் தரமறுத்தால் மெமோதரப்படும். அதேபோல் ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர் சிவக்குமார், நகர் நல அலுவலர் தாமோதரன், உதவி நகர் நகல அலுவலர் வசந்த் திவாகர், பொது சுகாதார குழு உறுப்பினர்கள் குமுதம், மணியன், சம்பத், சுமித்ரா, அம்சவேணி, கமலாவதி, வசந்தாமணி, அஸ்லாம் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 28 ஊராட்சிகளை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்து பேசினர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் பேசுகையில்,

    தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் மக்களை எளிதில் சந்தித்து அவர்களின் குறைகளை கண்டறிய முடியும். அந்த வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக அரசின் பல நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சென்று உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் சீனியார் உள்ளிட்ட உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு உண்டு.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மருது அய்யனார் கோவில் அரங்கில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

    கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். போட்ட விதை. அதனை ஜெயலலிதா உயிரோட்டமாக வளர்த்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை ஆலமரமாக்கி உள்ளார். நீங்கள் இங்கே வந்து இளைப்பாறலாம். அ.தி.மு.க. பூத் கமிட்டியினர் முறையாக செயல்பட்டால் வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் எடப்பாடி பழனிசாமி பிரதமர் யார்? என்பதை சுட்டிக்காட்டுவார். அவரே பிரதமராகும் வாய்ப்பு உண்டு. எனவே பூத் கமிட்டியினர் தீவிரமாக செயல்பட வேண்டும். பட்டாசு தொழிலை தி.மு.க. அழிக்க முயற்சிக்கிறது. பண்டிகையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பட்டாசு கடை வைக்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கலாநிதி, நகரச் செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா,விருதுநகர் மாவட்ட ஜெ.பேரவை துணைத்தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விண்வெளியில் இதுவரை 94 விண்கலங்கள், 125 செயற்கைகோள் ஏவப்பட்டதாக தகவல்
    • இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது என்று பெருமிதம்

    கோவை.

    கோவையில் நடந்த விழாவில் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் டாக்டர்.வீரமுத்துவேல் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும், இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய். சைக்கிளில் துவங்கப்பட்ட இஸ்ரோ பயணம் தற்போது எந்தளவிற்கு வந்துள்ளது என்பதற்கு சந்திராயன் 3 சாட்சி.

    விண்வெளியில் 94 விண்கலங்கள் இதுவரை ஏவப்பட்டுள்ளது. 125 செயற்கைகோள் ஏவப்பட்டு உள்ளது.

    மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மதிப்பெண்களும் முக்கியம் தான். இருப்பினும் நாம் தேர்வில் திறமையாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டும்.

    இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதற்கு மெக்கானிக் பொறியியல் என ஒரு துறை மட்டுமே படிப்பது என்று போதாது.

    பல்வேறு துறைகளின் அறிவும், தேர்வு செய்யும் துறையின் தனித்துவமாக மிளிர வேண்டும். அதனால், தேர்வு செய்யும் படிப்பில் திறம்பட படியுங்கள்.

    மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு மட்டுமின்றி இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, ரேகிங் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது:-

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ரேகிங் புகார்கள் பெறப்படும் வகையில் புகார் பெட்டிகள், அதேபோல் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் அரசு தங்கும் விடுதிகளில், சம்மந்தப்பட்ட வார்டன்கள் ரேகிங் தொடர்பான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரேகிங் ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்திரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா (பொது), வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதரதுல்லா (கூடலூர்), வட்டாட்சியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.பி.எஸ். தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என தர்மர் எம்.பி பேசினார்.
    • இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாத புரம் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்தின் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மூக்கையா, மாநில வழக் கறிஞர் பிரிவு செயலாளர் நவநாதன் முன்னிலை வகித்தனர்.

    முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துச் சாமி வரவேற்றார். கூட்டத் தில் தர்மர் எம்.பி.பேசிய தாவது:-

    நமது ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ். செயல்பாடு களை தமிழகமே உற்று நோக்கி கவனிக்கிறது. திருச்சி மாநாடு இந்திய ளவில் பேசப்பகிறது. பசும்பொன் தேவர் குருபூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுக்க வேணடும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். நம் உழைப்பு என்றும் வீணாவதில்லை. உழைப்புக்கேற்றபலன் கிடைக்கும். நடிப்பவர் களைப் பற்றி நாம் கவலைப்பட தேவை யில்லை. நமது நிர்வாகிகள் யாரும் சோடை போன தில்லை. நமது நிர்வாகிகளை மக்களே பாராட்டுகின்றனர்.

    இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது. அதற்காக தொடர்ந்து உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பரமக்குடி திலகர், மாரந்தை நீதி தேவன், தூரிமுருகேசன் உள்பட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க 52 -ம் ஆண்டு தொடக்க நாள் விழா பொதுக்கூட்டம் புதுவயலில் நடைபெற்றது.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நரிவிழி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன், புதுவயல் பேரூர் செயலாளர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் விஜய்கணேஷ், தஞ்சை சேகர் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், நல்லாட்சி தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணிணி உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு 12 ஆயிரம் கோடியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வீரசேகர், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா அம்பலம், ஊரவயல் ராமு, நகர செயலாளர்கள் மெய்யப்பன், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×