search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Legislature"

    • 1949 நவம்பர் 26ல், அரசியல் நிர்ணய சபை உருவாக்கிய வடிவம் ஏற்கப்பட்டது
    • இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல

    வெள்ளையர்களின் காலனி ஆதிக்க ஆட்சியில் இருந்து இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது.

    பல மதங்கள், இனங்கள், சாதிகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவுகள் கொண்ட இந்திய மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் விதமாக நாட்டிற்கு ஒரு திசைகாட்டியாக விளங்க அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. இதை உருவாக்கி தரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை அரசியல் நிர்ணய சபை எனும் அறிஞர்களை கொண்ட குழு ஏற்று கொண்டது.

    1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கி தந்த அரசியலமைப்பு சட்டத்தை இந்திய பாராளுமன்றம் ஏற்று கொண்டது.

    இந்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலுக்கு வந்தது.

    இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் (சம்விதான் திவஸ்) என கொண்டாடப்படும் என 2015 அன்று மத்திய அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2015 அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இது சட்ட தினம் என கொண்டாடப்பட்டு வந்தது.

    அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள், உரிமைகள், கட்டுப்பாடுகள், சலுகைகள், விதிகள் மற்றும் விலக்குகள், வலியுறுத்தும் கடமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களை குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், இந்த அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களை மக்கள் நினைவுகூரும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

    சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம், சுரண்டலை மறுக்கும் உரிமை, தனது மதத்திற்கான சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல என்பதும் உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அதிக நீளம் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "மக்களுக்காக, மக்களால், மக்களின் ஜனநாயகம்" என புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் 3 அங்கங்களாக விளங்கும் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக துறை ஆகியவற்றின் கடமைகளையே வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் என்பதே இதன் பெருமைக்கு ஒரு சான்று.

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் வலுவாகவும் மாற்ற இயலாததாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஓரு சில விதிமுறைகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப பாராளுமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளன.

    1950ல் ஏற்று கொள்ளப்பட்ட அரசியமைப்பு சட்டத்தில் 2023 செப்டம்பர் மாதம் வரை, 106 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாபநாசம், அய்யம்பேட்டை, சாலியமங்கலம் ஆகிய உப கோட்டங்களை சேர்த்து ஒரு புதிய மின் கோட்டத்தை உருவாக்க வேண்டும்.
    • பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்சனைகள் இருப்பதால், விவசாய பம்ப் மோட்டார்கள் வீடுகளில் உள்ள மின் சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.

    பாபநாசம்:

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எச். ஜவாஹிருல்லா பேசியதாவது :-

    பாபநாசம் உப கோட்டம், அய்யம்பேட்டை உப கோட்டம், சாலியமங்கலம் உப கோட்டம் ஆகிய உப கோட்டங்களை சேர்த்து ஒரு புதிய மின் கோட்டத்தை உருவாக்க வேண்டும்.

    பாபநாசம் தொகுதி இரும்புத்தலை ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்சனைகள் இருப்பதால், விவசாய பம்ப் மோட்டார்கள் (மும்முனை மின்சார மோட்டார்கள்) மற்றும் வீடுகளில் உள்ள மின் சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.

    எனவே இரும்புத்தலை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மின் பிரச்சனையை போக்கிட துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, கோரிக்கை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அம்மாபேட்டை-பாபநாசம் ஆகியவற்றை இணைத்து ஓரு புதிய அலுவலகம் தொடங்கப்படும். இதேபோல் மின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கோரிக்கை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×