search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executive"

    • கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.
    • பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் கோட்டாலி பகுதியை சேர்ந்தவர் சாஜிமோன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

    அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேறு ஒரு நபர் ஈடுபட்டது போன்று, வழக்கை திசை திருப்பவும் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போனது. சாஜிமோன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மேலும் கோட்டாலி பிரிவு கிளைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சாஜிமோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஊழியராக இருந்துவரும் பெண் ஒருவரை நிர்வாண படம் எடுத்த வழக்கில் சிக்கினார்.

    இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1949 நவம்பர் 26ல், அரசியல் நிர்ணய சபை உருவாக்கிய வடிவம் ஏற்கப்பட்டது
    • இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல

    வெள்ளையர்களின் காலனி ஆதிக்க ஆட்சியில் இருந்து இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது.

    பல மதங்கள், இனங்கள், சாதிகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவுகள் கொண்ட இந்திய மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் விதமாக நாட்டிற்கு ஒரு திசைகாட்டியாக விளங்க அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. இதை உருவாக்கி தரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை அரசியல் நிர்ணய சபை எனும் அறிஞர்களை கொண்ட குழு ஏற்று கொண்டது.

    1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கி தந்த அரசியலமைப்பு சட்டத்தை இந்திய பாராளுமன்றம் ஏற்று கொண்டது.

    இந்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலுக்கு வந்தது.

    இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் (சம்விதான் திவஸ்) என கொண்டாடப்படும் என 2015 அன்று மத்திய அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2015 அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இது சட்ட தினம் என கொண்டாடப்பட்டு வந்தது.

    அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள், உரிமைகள், கட்டுப்பாடுகள், சலுகைகள், விதிகள் மற்றும் விலக்குகள், வலியுறுத்தும் கடமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களை குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், இந்த அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களை மக்கள் நினைவுகூரும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

    சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம், சுரண்டலை மறுக்கும் உரிமை, தனது மதத்திற்கான சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல என்பதும் உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அதிக நீளம் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "மக்களுக்காக, மக்களால், மக்களின் ஜனநாயகம்" என புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் 3 அங்கங்களாக விளங்கும் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக துறை ஆகியவற்றின் கடமைகளையே வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் என்பதே இதன் பெருமைக்கு ஒரு சான்று.

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் வலுவாகவும் மாற்ற இயலாததாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஓரு சில விதிமுறைகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப பாராளுமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளன.

    1950ல் ஏற்று கொள்ளப்பட்ட அரசியமைப்பு சட்டத்தில் 2023 செப்டம்பர் மாதம் வரை, 106 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் கந்தபாரதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ். கதிரவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகங்காதரன்,மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம், செய்தி தொடர்பாளர் கண்ணன், நகரச் செயலாளர்கள் ராமகுரு (ஸ்ரீவில்லிபுத்தூர்), முருகதாஸ் (ராஜபாளையம்), ஒன்றியச் செயலாளர்கள் செந்தில்காளைபாண்டியன் (ராஜபாளையம்), அலங்காரம் (வத்திராயிருப்பு வடக்கு), குண்டுமணி முத்தையா (வத்திராயிருப்பு மேற்கு), மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். ஊராட்சிமன்ற தலைவர். நேற்று முன்தினம் பொன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    • பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் (வயது 33) மற்றும் ஒரு சிறுவனை கைது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். ஊராட்சிமன்ற தலைவர்.

    கொலை

    நேற்று முன்தினம் பொன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரை சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் (வயது 33) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திக் கூறியதாவது:-

    கடந்த 15-ந்தேதி சுதந்திர தினவிழாவையொட்டி நடந்த கிராமசபை கூட்டத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளை திறக்க வேண்டும். பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்ற நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் நிறைவேற்ற சொன்ன தீர்மானத்தினை நிறைவேற்றவில்லை.

    இது தொடர்பாக அவரிடம் நாங்கள் கேட்க சென்ற போது பொன்ராஜ் எங்களை அவதூறாக பேசியது மட்டுமின்றி, அரிவாளை காட்டி மிரட்டினார்.

    இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று தனியாக இருந்த அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையில் கொலையில் மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், உண்மையான குற்றாவளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி பொன்ராஜ் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்.

    தொடர்ந்து அவரது உடலுக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் பொன்ராஜ் உடல் அவரது சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? கிராம சபை கூட்டத்தில் நடந்த பிரச்சினை தான் காரணமா ? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா. ஜனதா நிர்வாகி மீது தாக்குதல் பாதுகாப்பு வழங்க போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • செல்லூர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    மதுரை

    மதுரை பாமா நகர், துளசி தெருவை சேர்ந்தவர் ஜாபர் ஷெரீப். இவர் மதுரை மாநகர பா.ஜனதா சிறுபான்மை அணி மாவட்ட தலைவராக உள்ளார். ஜாபர்ஷெரீப் நேற்று பார்க் டவுன் மசூதியில் தொழுகை நடத்த சென்றார். அப்போது அங்கு இருந்த 15 பேர் கும்பல் இவரை சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜாபர் ஷெரீப், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாநகர பா.ஜ.க வழக்கறிஞர் அணி முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள், இன்று செல்லூர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் பள்ளிவாசலில் பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ×