பா. ஜனதா நிர்வாகி மீது தாக்குதல்

பா. ஜனதா நிர்வாகி மீது தாக்குதல் பாதுகாப்பு வழங்க போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. செல்லூர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பா. ஜனதா நிர்வாகி மீது தாக்குதல்
Published on

மதுரை

மதுரை பாமா நகர், துளசி தெருவை சேர்ந்தவர் ஜாபர் ஷெரீப். இவர் மதுரை மாநகர பா.ஜனதா சிறுபான்மை அணி மாவட்ட தலைவராக உள்ளார். ஜாபர்ஷெரீப் நேற்று பார்க் டவுன் மசூதியில் தொழுகை நடத்த சென்றார். அப்போது அங்கு இருந்த 15 பேர் கும்பல் இவரை சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜாபர் ஷெரீப், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாநகர பா.ஜ.க வழக்கறிஞர் அணி முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள், இன்று செல்லூர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் பள்ளிவாசலில் பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com