search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Constituent Assembly"

    • ஆண்டுதோறும், நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம் என கொண்டாடப்படுகிறது
    • பல வழக்கறிஞர்கள் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்

    இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு 1949, நவம்பர் 26 அன்று இந்திய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.

    இதையொட்டி, 2015லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இன்று நாடு முழுவதும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய குழுவின் தலைவரான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் மக்களால் நினைவுகூரப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நீதித்துறையின் தலைமையிடமாக விளங்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 7 அடி உயர சிலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கர், வழக்கறிஞர் உடையுடன் தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வைத்து கொண்டிருப்பதை போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், பல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் சமர்ப்பித்திருந்ததை அடுத்து உடனடியாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • 1949 நவம்பர் 26ல், அரசியல் நிர்ணய சபை உருவாக்கிய வடிவம் ஏற்கப்பட்டது
    • இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல

    வெள்ளையர்களின் காலனி ஆதிக்க ஆட்சியில் இருந்து இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது.

    பல மதங்கள், இனங்கள், சாதிகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவுகள் கொண்ட இந்திய மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் விதமாக நாட்டிற்கு ஒரு திசைகாட்டியாக விளங்க அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. இதை உருவாக்கி தரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை அரசியல் நிர்ணய சபை எனும் அறிஞர்களை கொண்ட குழு ஏற்று கொண்டது.

    1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கி தந்த அரசியலமைப்பு சட்டத்தை இந்திய பாராளுமன்றம் ஏற்று கொண்டது.

    இந்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலுக்கு வந்தது.

    இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் (சம்விதான் திவஸ்) என கொண்டாடப்படும் என 2015 அன்று மத்திய அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2015 அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இது சட்ட தினம் என கொண்டாடப்பட்டு வந்தது.

    அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள், உரிமைகள், கட்டுப்பாடுகள், சலுகைகள், விதிகள் மற்றும் விலக்குகள், வலியுறுத்தும் கடமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களை குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், இந்த அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களை மக்கள் நினைவுகூரும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

    சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம், சுரண்டலை மறுக்கும் உரிமை, தனது மதத்திற்கான சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல என்பதும் உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அதிக நீளம் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "மக்களுக்காக, மக்களால், மக்களின் ஜனநாயகம்" என புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் 3 அங்கங்களாக விளங்கும் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக துறை ஆகியவற்றின் கடமைகளையே வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் என்பதே இதன் பெருமைக்கு ஒரு சான்று.

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் வலுவாகவும் மாற்ற இயலாததாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஓரு சில விதிமுறைகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப பாராளுமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளன.

    1950ல் ஏற்று கொள்ளப்பட்ட அரசியமைப்பு சட்டத்தில் 2023 செப்டம்பர் மாதம் வரை, 106 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரைந்துள்ளது.
    • 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. (பூந்தமல்லி), தமிழரசி எம்.எல்.ஏ (மானாமதுரை) நாகைமாலி எம்.எல்.ஏ (கீழ்வேளுர்), பாலாஜி எம்.எல்.ஏ (திருப்போரூர்) ஆகியோர் முன்னிலையில் 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொது நிறுவன குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூன்று சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 15 பயனாளிகளுக்கு ரூ.1,70,888 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.30,108 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு இணை மானிய திட்டம் மானியம் ரூ.13,58,589 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பீட்டிலும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 3 பயனாளிகளுக்கு என மொத்தம் 35 பயனா ளிகளுக்கு ரூ.19.74 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவன குழு இணைச் செயலாளர் பாண்டியன், சார்பு செயலாளர் இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாந்த ரவை ஊராட்சியில் கோரமண்டல் மின் ஆலை யினை பார்வையிட்டு உற்பத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை பொது நிறுவன குழுவினர் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து களிமண்குண்டு ஊராட்சியில் கடற்கரை ஓரமாக மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். பின்னர் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி யில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை பார்வையிட்டு கூடுதல் கொள்ளளவு திறன் மின்மாற்றிகள் அமைக்க அறிவுறுத்தினர்.

    ×