search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transformer"

    • கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரத்தில் வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

    ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவரம் அறிந்த கணவன் ராம் கோவிந்த் இது குறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று ஷில்பா கடும் மன வேதனை அடைந்தார். மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.

    இதுபற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

    மேலும், போலீஸ் விசாரணையில் மனைவி ஷில்பா தான் கள்ளத் தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • வடக்கு அமுதுண்ணாக்குடியில் மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பழுதான மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.
    • இந்நிலையில் நேற்று காலை முதல் பெய்த மழையால் அந்த மின்மாற்றியின் அடிப்பகுதி பெயர்ந்து சரிந்து நின்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு அமுதுண்ணாக் குடியில் மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பழுதான மின் மாற்றி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் சாத்தான்குளம் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதில் அந்த மின் மாற்றியின் அடிப்பகுதி பெயர்ந்து சரிந்து நின்றது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின் கம்பம் சரிந்து நிற்பது சமூக வலை தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு சரிந்த நின்ற மின் மாற்றியை சீரமைத்தனர். மேலும் மழை நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பழுதான மின் மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுத்து மின் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • செம்பு கம்பியின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
    • மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி திருடு போனது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் காரங்குடா செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சுடுகாடு உள்ளது.

    இதன் அருகே விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன.

    இப்பகுதியில், விவசாயிகளின் மின்மோட்டார்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் சம்பவதன்று அதிகாலை இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி (காயில்) திருட்டுப்போனது தெரியவந்தது.

    இதன்மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.

    இது குறித்து நாடியம் உதவி மின் பொறியாளர் சிவசங்கர் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் மின்மாற்றியில் செம்புக்கம்பி களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • சமீபத்தில் மழை பெய்யும் போது அந்த பகுதியில் மின் கசிவுகள் ஏற்பட்டு ஷாக் அடித்துள்ளது.
    • ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு ஆபத்தான மின்மாற்றியை மாற்றி புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா பொதுச்செ யலாளர் உமரி சத்தியசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே எம்.சவேரியார்புரம் கணேஷ்நகரில் திருச்செந்தூர் பிரதான சாலையோரமாக உள்ள மின்மாற்றி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. டன் கணக்கில் மின் சாதனங்களை தாங்கி நிற்கும் இந்த மின்மாற்றி தூண்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு சிமெண்ட் ஸ்லாப் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது.

    சமீபத்தில் மழை பெய்யும் போது அந்த பகுதியில் மின் கசிவுகள் ஏற்பட்டு ஷாக் அடித்துள்ளது. காற்று பலமாக வீசும் போது மரக்கிளை போல ஆடி சத்தம் எழுப்புகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு ஆபத்தான மின்மாற்றியை மாற்றி புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பழுதான மின்மாற்றி அகற்றாமல் விட்டு வைத்ததால் அவை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது.

    இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது 2 நாட்களாக நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மின்வாரிய துறையினர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பழுதான மின்மாற்றியை சீரமைத்து மின்சாரம் வழங்கினர். அதே போன்ற நிலை இந்த பகுதியிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
    • புதியமின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 9.35 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் மூலம் ரவணசமுத்திரம் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் ஊராட்சி சின்னத்தெரு கிட்டகல் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்நிலையில் போதிய மின் அழுத்தம் இல்லாததால் இக்கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இதையடுத்து ரவணசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவர் முகம்மது உசேன், மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததையடுத்து புதியமின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 9.35 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் மூலம் ரவணசமுத்திரம் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் புதிய மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் முகம்மது உசேன், மின் வாரிய கல்லிடைக்குறிச்சி கோட்ட பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி, உதவிப் பொறியாளர்கள் ஜீவானந்தம், விஜயராஜ், ரவணசமுத்திரம் ஜமாத் தலைவர் சாகுல் கமீது, செயலாளர் செய்யது அப்பா, சிராஜிதீன், ரிபாய், ஊராட்சி துணைத் தலைவர் ராமலட்சுமி, ஊராட்சி உறுப்பினர்கள் கோமதி, மொன்னா முகமது, முகம்மது யஹ்யா, மெகருண்நிஷா, ஜானகிராமன், கனகா, முகைதீன் அப்துல் காதர், ஜமீலா காத்தூன், சமூக ஆர்வலர் நாகூர் மீரான் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் உடனடியாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி மேற்கு வட்டாரம் தெற்கு நாங்குநேரி ஊராட்சி தட்டான்குளம் கிராமத்தில் மின் அழுத்த குறைபாட்டினால் பல வீடுகளில் மின் விசிறி, மின்மோட்டார் போன்றவை அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    இது குறித்து கிராம மக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம், மின் அழுத்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் உடனே மின் வாரியத்திடம் மின் அழுத்த குறைபாட்டை நீக்க மின்மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று மின்வாரியத்தின் மூலமாக கிராமப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தட்டான்குளம் கிராமத்தில் ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் மின்மாற்றி உடனடியாக அமைக்கப்பட்டது.

    மின்மாற்றி திறப்பு

    அதனை நேற்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார். நீண்ட காலமாக இருந்து வந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்த உடனே மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் பாராட்டினர்.

    திறப்பு விழா நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, நெல்லை கிராம புறக்கோட்ட செயற் பொறியாளர் குத்தாலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மறுகால்குறிச்சி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் புஷ்பா பாண்டி, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் சுரேஷ், நாங்குநேரி உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் ராமநாதன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், வின்சென்ட்,

    உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) ஆஷா, உதவி பொறியாளர் (கட்டுமானம்) அன்புசரவணன், நாங்குநேரி கிராமப்புற உதவி பொறியாளர் சிவசிவலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் செலவிலும், ராஜகோல்நகர் பகுதியில் ரூ.7 லட்சத்து 72 ஆயிரம் செலவிலும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்தார்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார வினியோ கத்தில் உள்ள பிரச்சினைகளை களைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    புதிய மின்மாற்றிகள்

    அதன்படி தூத்துக்குடியில் புதிதாக 6 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் செலவிலும், ராஜகோல்நகர் பகுதியில் ரூ.7 லட்சத்து 72 ஆயிரம் செலவிலும், பால்பாண்டிநகர் பகுதியில் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் செலவிலும், கோக்கூர் ரோட்டில் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் செலவிலும், மினிசகாயபுரத்தில் ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலும், பொன்சுப்பையாநகரில் ரூ.6.63 லட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.43 லட்சத்து 92 ஆயிரம் செலவில் 6 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    திறப்பு விழா

    இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் மின்சார பிரச்சினையை தீர்த்து வைத்ததற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலமாக 50-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் மின்மோட்டார் களுக்கு மின்சாரம் செல்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி பழுத டைந்தது. இதையடுத்து மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். 2மாத காலமாகி யும் மின்மாற்றி சீரமைக்கப் படாததால் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயி கள் வேதனை தெரி விக்கின்றனர். பழுத டைந்த மின்மாற்றியை சீர மைத்து, கருகி வரும் பயிர்களை காப்பாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது பணப்பாக்கம் கிராம விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து விவசாயி சேஷாயிலு கூறியதாவது:-. ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன்.தனது நிலத்தின் மின்மோட்டா ருக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகியும் புதிய டிரான்ஸ் பார்மர் வைக்கப்படாததால் பயிர்கள் காய்ந்து கருகி உள்ளது இதே மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2 செங்கல் சூளைக்கு மின்சாரம் சென்று கொண்டிருந்தது. தற்போது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாமல் வேறு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு விவசாயிகளை நிற்கதியில் விட்டு விட்டனர். பண்ருட்டி மின்துறை அதிகாரிகளோ சீனியாரிட்டி அடிப்படை யில் தான் டிரான்ஸ்பார்மர் வரும் என்று சொன்னார்கள். சென்னை மின்னக தொலைபேசியில் புகார் செய்த போது கடலூரில் இருந்து தொடர்புக்கு வந்த அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    • காமநாயக்கன்பட்டியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையை சமாளிக்கும் வகையில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் மின் திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது
    • இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பங்கேற்று மின்மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே காமநாயக்க ன்பட்டி யில் குறைந்த மின்னழுத்தம் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் மின் திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ பங்கேற்று மின்மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறி யாளர் கோவில்பட்டி கோட்டம் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் கோவில்பட்டி குருசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மிகாவேல், முனியசாமி தங்கராஜ், முருகேசன் மற்றும் காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அந்தோணி குருஸ் அடிகளார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது.
    • மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் 200 கேவிஏ மின் திறன் கொண்ட 2 மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட்டுகள் மூலம் விவசாய பயிர்களுக்கு மின்சாரம் செல்கின்றது. மேலும் யாதவர் வீதி, வாணியர் வீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் மின்சாரம் செல்கின்றது.

    இந்த 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது. இன்று வரை இந்த மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யாத தால் விவசாயிகள், பொது மக்கள் மின்சாரம் பற்றாக் குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின் விளக்கு, மின்விசிறி, வீட்டு உப யோகப் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மின்மாற்றி யை சரி செய்வ தற்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்சாரம் வாரியம் சார்பில் அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் மின்சாரம் முறைப்படுத்தி வழங்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் சண்முகையா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி, துணைத்தலைவர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஜோசப் மோகன், தி.மு.க. கிளைச்செயலாளர்கள் ராமசாமி, இசக்கி, சீனிவாசகம், மாணவரணி உதயகுமார், காங்கிரஸ் பிரமுகர் கோபால், ராஜ், கப்பிக்குளம் பாபு, மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.
    • கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.

    அங்குள்ள மலைவாழ் மக்கள் ராசிபுரம் போன்ற ஊர்களுக்கு கரடு முரடான பாதை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு போதமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டது.

    இந்நிலையில் தரை மட்டத்திலிருந்து 6 கி.மீ. உயரத்தில் உள்ள கீழூரில் இயங்கி வந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட் களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை மலைவாழ் மக்களே கீழே கொண்டு வந்து மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் புதிய ட்ரான்ஸ்பார்மரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு கீழூருக்கு கொண்டு செல்வதற்காக போதமலை அடிவாரத்தில் வைத்திருந்தனர். மலைப்பகுதியில் உள்ள கீழூருக்கு கரடு முரடான பாதையில் கொண்டு செல்வதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று போதமலை அடிவாரத்தில் இருந்து கீழூருக்கு 750 கிலோ எடையுள்ள புதிய டிரான்ஸ்பர்மரை 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தோளில் சுமந்து சென்றனர்.

    வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆர்.எம். துரைசாமி, ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் நாமகிரிப்பேட்டை ரவி, புதுப்பட்டி விக்னேஷ்வரன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன், வனிதா உள்பட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அனுப்பி வைத்தனர்.

    இன்னும் 3 அல்லது 4 நாட்களில் புதிய டிரான்ஸ்பார்மர் கீழூர் பகுதியில் வைக்கப்பட்டு மின் விநியோகம் நடைபெறும் என்று மின்வாரியத் துறையினர் தெரிவித்தனர். இதனால் 20 நாட்களாக மின் வசதி இல்லாமல் இருந்த கீழூர் பகுதி மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    ×