என் மலர்
நீங்கள் தேடியது "Procurement"
- மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
- தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி புகார் அளித்தது.
இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக் கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையாகும்.
மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
- , கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.
ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரூ.1,981.90 கோடிக்கு இந்த ஆயுதங்கள் வாங்கப்படும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுவதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
13 ஒப்பந்தங்கள் மூலம் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள், குறைந்த எடை கொண்ட ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
ஏவுகணைகள், ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்கள், சிறிய ட்ரோன்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், குண்டு துளைக்காத தலைக்கவசங்கள், கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆயுதக் கிடங்கு அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தன.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்திய ராணுவம் அவற்றை அழித்தாலும் இவ்வகை தாக்குதல்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
- பற்றாக்குறையை சமாளிக்க, பல மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை பெறப்படுகிறது.
- ஒரு வருட தேவைக்கும் மேலாக உணவு தானியம் கையிருப்பு.
இந்திய உணவு கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய உணவுக் கழகத்தின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட நிலையம் உள்ளது.

இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு வருட தேவைக்கும் மேலான உணவு தானியம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.
பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் பெறப்படுகிறது.
பிரதமரின் இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னைப் பிரிவு, 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இடைத்தரகர்களின் தலை யீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
- விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.
வேதாரண்யம்:
காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் (விவசாய பிரிவு) சுர்ஜித் சங்கர் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளில் சில இடங்களில் அறுவடை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெரும்பா லான கொள்முதல் நிலை யங்களில் அடிப்படை வசதி களான குடிநீர், கழிவறை மற்றும் சாலை வசதி இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்க ளுக்கு போர்கால அடிப்படையில் ஷெட் வசதி செய்து தர வேண்டும், அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் நெல் தூற்றக்கூடிய எந்திரங்கள் வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் மூட்டை தூக்குவதற்கு தொழி லாளர்கள் பற்றாக்குறை இருப்பதை கருத்தில் கொண்டு மூட்டைகளை ஏற்றி இறக்குவதை நவீனப்படுத்த வேண்டும், கொள்முதல் செய்து இங்கு வரும் நெல் மூட்டைகளை காலதாமதம் இன்றி அரவை மில்களுக்கும், வெளி மாவட்டத்திற்கும் விரைந்து அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தாளடி பருவம் நெருங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், விளைவித்த நெல்லை அரசு குறித்த நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
- நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர்.
கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
எனவே மெலட்டூரில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
- இதனால், நன்னிலம் வட்டார விவசாயிகள், பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரத்தில், தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாக மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியும், அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடி பணிகள், நடைபெற்றது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, தமிழகத்தில் வழக்கத்திற்கு அதிகமாக மழை பெய்தபோதும் நன்னிலம் வட்டார பகுதியில், மழைப்பொழிவு என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அமைந்திருந்ததால் இந்த ஆண்டு நன்னிலம் வட்டார பகுதியில், மகசூல் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விவசாயப் பணிகளுக்கு தற்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் எந்திரங்களின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில் எந்திரங்கள் விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்வதால், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உடனடியாக கொள்முதல் செய்து கொள்ளக் கூடிய வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்திற்கு முன்பாக திறக்கப்பட்டு, விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.
விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேட்டூர் அணை நீர் திறப்பும் விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை, விற்பனைக்கு காத்திருக்–காமல் விவசாயிகளின் நலன் பேணிக் காக்கக்கூடிய வகையில் உடனடியாக கொள்முதல் செய்யக்கூடிய வகையில், விவசாயிகளின் உணர்வுகளைஉணர்ந்த அரசாக, இருந்து உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகளை, தொடங்கியதில் நன்னிலம் வட்டார விவசாயிகள், பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் செயல்பாடு விவசாயிகளின் நலனை பேணிக் காக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.
- அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
- மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது பாபநாசம் தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.
தற்போது பெய்த மழையால் நெற் கதிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கூறியதாவது:-
பாபநாசம் சுற்றுப்பகுதி களில் பெய்த கனமழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல்மணிகள் உதிர்ந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பா நெற்பயிர் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளன.
மழை நீடித்தால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாகும். இதனிடையே பாபநாசம் தாலுகாவில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.
கொள்முதல் நிலைய ங்களில் விவசாயிகள் தாங்கள்கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல்தார்ப்பாய் கொண்டு மூடி
வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
- நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தின குமார் ,விவசாயிகள் சங்க தலைவர் வேணு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாய சங்க செயலாளர் பிரபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கபட்ட நிலையில் தற்போது வெயில் அடிக்க துவங்கி அறுவடை பணிகள் துவங்கி உள்ள நிலையில்நேரடி நெல்கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் முடிவில் விவசாய சங்கத்தை சேர்ந்த வெங்கடா சலம் நன்றி கூறினார்.
- நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
- அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கோமதி தனபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-
நாகை மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 10 நெல் கொள்முதல் நிலையங்களும், நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுவாஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்.
விழாவில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கர், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.
- நிலக்கடலை, உளுந்து, எள், சோளம், நெல், கேழ்வரகு பயிரிட்டு விவசாயிகளுக்கு சிமெண்ட் களம் இல்லை.
- நிலக்கடலையை தனியார்கள் குறைந்து விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் நிர்வாகி ராமசாமி, பயிரிட்ட நிலக்கடலை செடியை எடுத்துக்கொண்டு கோட்டா ட்சியர் ரஞ்சித்திடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சிவவிடுதி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு நிலக்கடலை, உளுந்து, எள், சோளம், நெல், கேழ்வரகு பயிரிட்டு விவசாயிகளுக்கு சிமெண்ட் களம் இல்லை.
இதனால் ரோடுகளில் கொண்டு சோளம், நெல் காய ப்படும் நிலை ஏற்படுகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சிமெண்ட் களம் அமைத்து தர வேண்டும்.
நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். எங்கள் பகுதி மானாவாரி பகுதியாகும். அதிகமாக நிலக்கடலை , உளுந்து, தட்டைபயறு, பாசி பயறு சாகுபடி செய்கிறோம்.
எனவே எங்கள் பகுதியில் களம் அமைத்து தர வேண்டும். நிலக்கடலையை தனியார்கள் குறைந்து விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை.
அரசே நிலக்கடலையை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையெ ன்றால் ஒழுங்குமுறை விற்ப னை கூட மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிலக்கடலை செடியுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி பணியிலும் அதேபோன்று 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே குறுவை நெல் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 2022 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 4.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முது நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிக ளிடமிருந்து அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யப்பட்ட வருவதாக தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு யாரேனும் ஊழியர்கள் கையூட்டு பெற்றால் அது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
- 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 629 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவத்தில் 41 ஆயிரத்து 390 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.404 கோடியாகும்.
தற்போது 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
நடப்பு கே.எம்.எஸ் 2022-23 கொள்முதலானது கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் தொடங்கப்பட்டு குறுவை பருவத்தில் 391 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.475 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 ஆயிரத்து 596 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போது மான ஆவணங்களை மட்டும் பெற்றுக்கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் கையூட்டு பெறாமலும் விவசாயிகளை காக்க வைக்காமலும் உடனுக்குடன் நெல்லினை கொள்முதல் செய்ய வேண்டும்.
வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் தஞ்சாவூர் மண்டலத்தில் மருங்குளம், தென்னமநாடு மற்றும் அன்னப்பன்பேட்டை ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






