என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி காத்துக்கிடக்கும் விவசாயிகள்
    X

    கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்துள்ள நெல்லின் ஒருபகுதி.

    கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி காத்துக்கிடக்கும் விவசாயிகள்

    • விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
    • நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர்.

    கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    எனவே மெலட்டூரில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×