என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் நெல் தூற்றக்கூடிய எந்திரங்கள் வழங்க வேண்டும்
- இடைத்தரகர்களின் தலை யீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
- விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.
வேதாரண்யம்:
காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் (விவசாய பிரிவு) சுர்ஜித் சங்கர் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளில் சில இடங்களில் அறுவடை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெரும்பா லான கொள்முதல் நிலை யங்களில் அடிப்படை வசதி களான குடிநீர், கழிவறை மற்றும் சாலை வசதி இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்க ளுக்கு போர்கால அடிப்படையில் ஷெட் வசதி செய்து தர வேண்டும், அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் நெல் தூற்றக்கூடிய எந்திரங்கள் வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் மூட்டை தூக்குவதற்கு தொழி லாளர்கள் பற்றாக்குறை இருப்பதை கருத்தில் கொண்டு மூட்டைகளை ஏற்றி இறக்குவதை நவீனப்படுத்த வேண்டும், கொள்முதல் செய்து இங்கு வரும் நெல் மூட்டைகளை காலதாமதம் இன்றி அரவை மில்களுக்கும், வெளி மாவட்டத்திற்கும் விரைந்து அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தாளடி பருவம் நெருங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், விளைவித்த நெல்லை அரசு குறித்த நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்