search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drones"

    • பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.
    • எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் அறிந்து இந்திய ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் பயங்கரவாதிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அதி நவீன வசதி கொண்ட ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.

    அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு ஜம்மு காஷ்மீர் ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளது.

    இதேபோல் எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது. இதனையும் அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    • வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 2 டிரோன்களை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார்.

     கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    "வயநாடு முன்முயற்சி" என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 2 டிரோன்களை வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார். அப்போது அவர் புதிய டிரோன்களை பறக்கவிட்டார்.

    • ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.
    • ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.இதில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகம். ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்களைஅவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் தாக்குதலை முறியடிக்க செங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள். இதனால் உஷாரான அமெரிக்க படையினர் அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அழித்தனர்.

    இந்த டிரோன்கள் வீசியதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. 

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரோடு ஷோ நடக்க உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரமாண்ட பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லடம், தூத்துக்குடி, நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். அன்றைய தினம் கோவை மாவட்டத்திற்கு வருகை தரும் அவர், கோவையில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்க உள்ளார்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட உள்ளது.

    பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றபடி, மக்களை பார்த்து கையை அசைத்து பேச உள்ளார். குறிப்பிட்ட சில இடங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதவிர கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும், அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தின் போது, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோடு ஷோ நடக்க உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பாதுகாப்பு, மக்கள் கூட்டம் வந்தால் எப்படி சமாளிப்பது, எந்த இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள் நிறைந்த பகுதி, போக்குவரத்து உள்ள பகுதி, பதற்றமான பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    17-ந்தேதி முதல் கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவையில் நேற்று முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அந்த வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி கோவை கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்புரம், வடகோவை, சாய்பாபா காலனி, துடியலூர் பகுதிகளில் ரெட்சோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
    • 2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் கழுகு ஈடுபடுத்தப்படுகின்றன. முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் 3 கழுகுகளுக்கு போலீசார் மொய்னாபாத்தில் உள்ள மையத்தில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    இந்த கழுகுகள் ஆளில்லா விமானங்களை துல்லியமாக கணித்து அவற்றை கீழே இழுத்து வரும் தன்மை கொண்டது.

    இதற்காக கழுகுகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த கழுகு படையை பயன்படுத்த முடியும். நெதர்லாந்தில் கழுகு படை உள்ளது. அதற்குப் பிறகு இந்தியாவிலேயே தெலுங்கானாவில் தான் போலீசார் கழுகுப்படையை உருவாக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதாக தெரிவித்தனர்.

    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
    • கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியது.

    மாலி:

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டிய அவர் அந்நாட்டுடன் ராணுவம் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்நிலையில், கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியுள்ளது. துருக்கி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து முதல் முறையாக ராணுவ டிரோன்கள் மாலத்தீவுக்கு கொண்டு வரப்பட்டன.


    அந்த டிரோன்கள் தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விரைவில் டிரோன்கள் செயல்பாடு தொடங்கும் என்று கூறப்படுகிறது. எத்தனை டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    • வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.
    • சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன.

    சென்னை:

    மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.

    பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

    கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில் 'டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப்படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்.

    இது தவிர 3,300 பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன. தற்போது கூடு தலாக 600 கால்வாய்கள் கட்டப்பட்டு மொத்தம் 2,200 கால்வாய் கள் வழியாக மழைநீர் வெளியேறுகிறது.

    மழைக் காலங்களில் கொசு பொதுவாக பெருகுவது இல்லை. மழை முடிந்த பிறகு தான் அதிகளவில் உற்பத்தியாகும். மழை நீர் கால்வாய்களின் மூலம் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    மழை நீர் கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்கள், டீக்கடைகள், தொழில் நிறுவனங்களின் கழிவு நீர் மழைநீர் கால்வாய்களில் விடப்படுவதால் மழை இல்லாத காலத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக அமைகிறது.

    எனவே மழைநீர் கால் வாய்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தினால் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் மழை நீர் கால்வாய்களையும் இக்காலக் கட்டத்தில் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
    • டெல்லி வான்பரப்பில் அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவு பிப்ரவரி 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
    • ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார். 

    மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
    • சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமா னம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகைதந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.

    ×