search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poland"

    • கடந்த நான்கு நாட்களில் உக்ரைனை தலைநகரை நோக்கி ரஷியா ஏவுகணை தாக்குதல்.
    • ரஷியா ஏவுகணைகள் போலந்து நாட்டின் வான்வழி பகுதியில் செல்வதாக குற்றச்சாட்டு.

    உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு அதிகப்படியாக சேதம் ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மூன்று மிகப்பெரிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் உக்ரைன தலைநகர் கீவ் நகரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    இரு நாடுகளுக்கும் மிக அருகில் உள்ளது போலந்து. உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து நாட்டின் வான்வழியில் நுழைந்ததாக போலந்து குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், உடனடியாக இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், எஃப்16 போர் விமானத்தை செயல்படுத்த நேட்டோ உறுப்பினர் நாட்டை தூண்டுகிறது எனவும் எச்சரித்துள்ளது.

    • ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
    • 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன

    2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

    மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.

    போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.

    இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.

    இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.

    இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.

    இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    • 18 மாதங்களாக நடைபெறும் போர் 540வது நாளை நெருங்கி இருக்கிறது
    • இந்த நகரின் வழியாகத்தான் உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து செல்கின்றனர்

    கடந்த பிப்ரவரி 2022ல் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளுதவியுடனும், ராணுவ தளவாட உதவியுடனும் உக்ரைன் தீவிரமாக ரஷியாவுடன் போர் செய்து வருகிறது. 18 மாதங்களாக நடைபெறும் இந்த போர் 540வது நாளை நெருங்கி வரும் நிலையில், இரு தரப்பிலும் பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் பலமாக இருக்கின்றன.

    இந்நிலையில் உக்ரைனின் வடமேற்கு பகுதியில் உள்ள வோலின் (Volyn) மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ல்விவ் (Lviv) என 2 நகரங்கள் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த இரு நகரங்களும் நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டிற்கும் உக்ரைனுக்குமான எல்லையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    வடமேற்கிலுள்ள வோலின் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். வோலின் பகுதியிலுள்ள லுட்ஸ்க் (Lutsk) பகுதியில் ஒரு தொழில் நிறுவன கட்டிடம் சேதமடைந்தது. பலர் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ல்விவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களிலேயே பெரியதாக கருதப்படும் தற்போதைய தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இங்கு ரஷியாவால் ஏவப்பட்ட 6 ஏவுகணைகள் பல கட்டிடங்களை அழித்தன. இந்நகரத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன. ஒரு மழலையர் விளையாட்டு மைதானம் சேதமானது.

    ல்விவ் மீது ஜூலை 2023 வரை ரஷியா தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை. இந்நகரத்திலிருந்துதான் ரஷிய-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து நாட்டிற்கு செல்கின்றனர்.

    இந்த இரு நகரங்கள் மட்டுமின்றி வேறு சில பகுதிகளிலும் வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. ரஷியா செலுத்திய 28 ஏவுகணைகளில் 16 ஏவுகணைகளை உக்ரைன் வானில் இடைமறித்து வீழ்த்தியுள்ளது.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.



    மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 - 0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

    வருண் குமார் 18, 25-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 50, 51-வது நிமிடத்திலும் தலா 2 கோல் அடித்தனர். விவேக் பிரசாத் (1), சுமித் குமார் (7), சுரேந்தர் குமார் (19), சிம்ரன்ஜித் (29), நீலகண்டா ஷர்மா (36), அமித் ரோஹிதாஸ் (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். #AzlanShahhockey
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. #WorldCup2018 #COLPOL
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்திலும், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது.

    கொலம்பியா அணியினரின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் போலந்து வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
    கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி 3 புள்ளிகள் பெற்றது.

    ஆனாலும், எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பியா, போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 37வது நிமிடத்தில் செனகல் அணியின் தியாகோ சியோனெக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம் பாயே நியாங் ஒரு கோல் அடிக்க, செனகல் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து ஆடிய போலந்து அணி ஆட்டத்தின் இறுதியில் 86 வது நிமிடத்தில் கிரிசோவியக் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை போலந்து அணி மற்றொரு கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், செனகல் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    ×