போலந்து வான் வெளியில் ரஷிய டிரோன்கள் புகுந்ததால் பரபரப்பு

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய சில டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் ஊடுருவின.டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து ராணுவம் தெரிவித்தது.
போலந்து வான் வெளியில் ரஷிய டிரோன்கள் புகுந்ததால் பரபரப்பு
Published on

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய சில டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் ஊடுருவின.

இதையடுத்து அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து ராணுவம் தெரிவித்தது. நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் போலந்து உறுப்பினராக உள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் அல்லது போர் செயல்பாடு ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் எதிரான செயலாக கருதப்படும்.

அந்த நாட்டுக்கு ஆதரவாக, அனைத்து நாடுகளும் போரில் களம் இறங்கலாம். இதையடுத்து ரஷியாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று நேட்டோ அமைப்பை உக்ரைன், போலந்து வலியுறுத்தி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com