என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "EU"
- ரஷிய உக்ரைன் போர் 590 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
- மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவி அந்நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்றார் புதின்
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமாக சேதங்களும் உயிரிழப்புகளும் நடைபெற்றும் போர் 590 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவிற்கு உள்ள கடன் ரூ. 2,74,63,90,35,00,00,000 (33 டிரில்லியன் அமெரிக்க டாலர்) எனும் அளவை தொட்டு விட்டதால், அந்நாட்டில் செலவினங்களை குறைக்க கோரி பெரும் விவாதங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இந்த விவாதங்களில் ரஷிய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவி தடைபடும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.
இப்பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஒரு சந்திப்பில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. உதவி நின்றால், ஒரு வாரத்தில் அனைத்தும் நின்று விடும். நிதியுதவி மட்டுமல்ல; ராணுவ தளவாட உதவிகளும் நிற்க தொடங்கினால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும். தற்போது வரை ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், உக்ரைன் 90 ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, "அமெரிக்காவை போன்று நிதியுதவியோ ராணுவ உதவியோ உக்ரைனுக்கு நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியாது," என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.
புதின் கூறியவாறு அமெரிக்க உதவி தடைபட்டு, போர் ரஷியாவிற்கு சாதகமாக சென்றால் அதனால் எற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கும் நல்லது. எனவே ஈரான் இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறவரையில், ஐரோப்பிய கூட்டமைப்பும் நீடிப்பதில் உறுதி கொண்டு உள்ளது.’
மேலும், ‘ஈரானின் பிராந்திய நடத்தை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை குறித்த கவலைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது’ என்றும் குறிப்பிட்டார். #EU #DonaldTusk


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்தின் மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், கனடா, மெக்சிகோ மட்டுமல்லாது டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசு கட்சியில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து உள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக அங்கு இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு பொருட்கள் மற்றும் பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றின் மீது இறக்குமதி வரி விதித்தனர்.
டிரம்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதித்துள்ள இறக்குமதி வரி, சட்டவிரோதமானது என கூறினார். அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் அவர் கூறி உள்ளார்.
அதே நேரத்தில் தன் வரி விதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் இந்தக் கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்தார்.
இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ், உருக்கின் மீது 25 சதவீத வரி என்பது அபத்தமானது என குறிப்பிட்டார். ஜெர்மனி பொருளாதார மந்திரி பீட்டர் ஆல்ட்மையர், ஐரோப்பிய யூனியன் தரக்கூடிய பதிலடி, டிரம்ப் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்று கூறினார். #Tamilnews #DonaldTrump
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
