என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSF"

    • சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.
    • பந்தசௌக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முகாமில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை (BSF) வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

    தகவலின்படி, நேற்று (ஜூலை 31) இரவு, BSF வீரர் சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.

    BSF உடனடியாக சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால் அந்த அவர் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, பந்தசௌக் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

    காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அவரை தேடி வருகின்றனர்.  

    • அமிர்தசரஸில் உள்ள மோதே எல்லையில் 5 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
    • ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 டிரோன்களை இடைமறித்து எல்லை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அமிர்தசரஸில் உள்ள மோதே கிராமத்தில் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் துப்பாக்கிகள், குண்டுகளை நிரப்பும் மூன்று மெகஜின்ஸ் (magazines), 1.070 கி.கி. ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    • ரெயில் 72 மணி நேரம் தாமதமாக வந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி
    • ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது

    அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரெயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.

    மேலும் ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள், கிழிந்த இருக்கைகள், மேற்கூரை மற்றும் உடைந்த கதவு, ஜன்னல்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    BSF படையினருக்கு சிறப்பு ரெயில் என்ற பெயரில் மிக மோசமான நிலையில் உள்ள ரெயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.

    அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.

    மேலும், ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    திரிபுராவில் உள்ள உதய்பூர் ரெயில் நிலையத்தை ஜூன் 6-ம் தேதி வந்தடைய வேண்டிய இந்த ரயில், ஜூன் 9-ம் தேதி மாலை 6:30 மணிக்கே வந்து சேர்ந்தது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, ஜூன் 12, 2025-க்குள் முழு பட்டாலியனும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தது.

    இந்தத் தாமதம் திரிபுரா, குவஹாத்தி, மிசோரம் மற்றும் கச்சார் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரயில்வே பதிலளித்து, பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளது.

    சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் வீடியோக்களில் காணப்படும் சேதமடைந்த பெட்டிகள் பருவகால பராமரிப்புக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளால் தவறுதலாக அந்த பெட்டிகளில் வீரர்கள் ஏற்றப்பட்டதாகவும் ரெயில்வே விளக்கமளித்துள்ளது.

    கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த BSF வீரர் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
    • இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தியது. . சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் இருநாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தன.

    இந்நிலையில், குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை எல்லை பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றது.

    சர்வதேச எல்லையை தாண்டிய பிறகு எல்லை வேலியை தாண்ட அந்நபர் முயற்சி செய்ததாகவும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் எச்சரித்தும் தொடர்ந்து அவர் முன்னேறியதால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் உயிரிழந்தார் என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

    முன்னதாக தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    • BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
    • "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று BSF வீரரின் மனைவி ரஜனி அழுதார்.

    கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். ஆபரேசன் சிந்தூர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.

    இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹுவை இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது. இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் விடுத்துள்ளது.

    • BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
    • ரஜனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசி ஆறுதல் கூறினார்.

    கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில், பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் நிலை குறித்து பேசிய ரஜனி, "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவர் அவர்களின் காவலில் உள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    BSF அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலைமை ஒரு போர் போல் உள்ளது. அடுத்து என்ன செய்தி வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    ஆபரேசன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.

    • பதற்றத்தை பயன்படுத்தி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஏற்கனவே இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் 8 வீரர்கள் தற்போது காயம் அடைந்துள்ளனர்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இருநாட்டு எல்லையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

    இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவம முகாமுக்கு சிகிச்சைக்கான கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை சுமார் 2000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இந்த எல்லையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
    • ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

    ஸ்ரீநகர்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் நிலைகுலைந்த பாகிஸ்தான் காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.00 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிந்தனர்.

    எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.

    • ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
    • அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    கடந்த வாரம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது..

    இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, BSF கான்ஸ்டபிள் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் தடுத்து வைக்கப்பட்டு ஆறு நாட்கள் ஆகின்றன.

    அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    சாஹுவின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகள் கூட்டத்தை நடத்திய போதிலும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ள நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பதால் அவர்கள் எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
    • 530 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர விவசாயிகள் 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப் இன்று அறிவுறுத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஞ்சாபில் அட்டாரி - வாகா எல்லை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பதால் அவர்கள் எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

    இந்நிலையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இங்கு பாதுகாப்பை அதிகரிக்க பிஎஸ்எஃப் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

    அறுவடைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறாதுள்ளது. 530 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக அமிர்தசரஸ், டர்ன் தரன், ஃபெரோஸ்பூர் மற்றும் பைசலாபாத் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடையை முடிக்கும்படி குருத்வாராக்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோதுமை அறுவடையில் 80% க்கும் அதிகமானவை நிறைவடைந்திருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவடை செய்து, பின்னர் தீவனமாகப் பயன்படுத்த வைக்கோலை சேகரிப்பது மிகவும் சவாலானது என்று விவசாயிகள் கூறுகின்றனர். 

    • பஹல்காம் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசடைந்துள்ளது.
    • விசா, சிந்து நதி நீர் நிறுத்தம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பி.எஸ்.எஃப். வீரர் பிடிபட்டுள்ளார்.

    ஓய்வு எடுப்பதற்காக நிழலைத்தேடி சென்றபோது, தவறுதலாக பாகிஸ்தானில் எல்லைக்குள் சென்றதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அவர் விடுவிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182ஆவது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை கைது செய்துள்ளனர்.

    யுனிபாஃர்ம் மற்றும் அவருடைய துப்பாக்கியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றார். பி.கே. சிங்கை பாதுகாப்பாக மீட்க இருநாட்டு வீரர்களிடையே கொடி சந்திப்பு நடைபெற்றது.

    இதுபோன்ற சம்பவங்கள் அசாதாரணமானது அல்ல என்றும், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த காலங்களில் நடந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில், பயங்கரவாதத்தை ஆதரிப்பாக பாகி்ஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ×