search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amarnath yatra"

    • காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது.
    • ஆண்டுதோறும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும்.

    ஜம்மு:

    காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதில், ஆண்டுதோறும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும். அதைக்காண லட்சக்கணக்கானோர் புனித யாத்திரையாக செல்வார்கள்.

    இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அரசாங்கத்தின் அற்புதமான அமைப்பு... நாங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம்.
    • இந்தியர்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியமாகவும், இனிமையாகவும், கனிவாகவும் இருக்கிறார்கள்… என்றார்.

    காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். தரை மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைக் கோவிலில் நீர்வீழ்ச்சி குறிப்பிட்ட காலத்தில் குளிரில் உறைந்து லிங்கம்போல தோற்றமளிப்பதால் இதை 'பனிலிங்கம்' என்கிறார்கள்.

    இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையை பக்தர்கள் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் மகனான ஹீதர் ஹாத்வே -ஹட்சன் அகியோர் பனிலிங்க தரிசனத்துக்கு வந்துள்ளனர்.

    அமெரிக்க பெண்மணி ஹீதர் கூறும்போது, "இங்கே இருப்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அமர்நாத்துக்கு வர வேண்டும் என்று பல வருடங்களாக கனவு கண்டேன். இது இந்திய அரசாங்கத்தின் அற்புதமான அமைப்பு... நாங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம். இந்தியர்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியமாகவும், இனிமையாகவும், கனிவாகவும் இருக்கிறார்கள்…" என்றார்.

    அவர் பேசும் வீடியோ பிரபல செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியாகி வைரலானது.


    • சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை கட்சி முன்னிறுத்தாது என்றும் அக்கட்சியின் தலைமை மாநில தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது.
    • வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான பாஜக தேசிய தலைமை, ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களை சட்டசபை தேர்தலுக்கு தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்போது நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தலைமையில் நேற்றிரவு ஆலோசனை நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு தயாராகுமாறு மாநில தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தி உள்ளதாக இந்தியா டூடே செய்தி வெளியிட்டுள்ளது.

    90 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்றும் மாநிலத்தில் எந்த கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது என்றும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை கட்சி முன்னிறுத்தாது என்றும் அக்கட்சியின் தலைமை மாநில தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 2019-ல் ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக 2018 நவம்பரில் மாநில அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர். மாநிலத்தில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய மிகப்பெரிய அளவிலான நிகழ்ச்சிகளையும் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தனர்.

    இரண்டு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் கட்சியின் எம்.பி.க்கள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜுகல் கிஷோர் சர்மா மற்றும் பிற உயர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காட்சி தரும். இயற்கையாக உருவாகும் இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு 62 நாட்கள் நடைபெற்ற புனித யாத்திரையில் 4.5 லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாதுக்கள் ஜம்முவில் குவிய தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்களின் முதல் குழு இன்று காலை ஜம்முவில் இருந்து புறப்பட்டது. ஜம்முவின் பகவதி நகரில் உள்ள யாத்ரி நிவாஸில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் குழு புறப்பட்டது. முன்னதாக, பூஜை முடிந்ததும் கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியை அசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.



    யாத்ரீகர்கள் அனைவரும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்டால் முகாம்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் புறப்பட்டனர். முதல் குழுவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு நடந்த புனித யாத்திரையில் 4.5 லட்சம் யாத்ரீகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காட்சி தரும். இயற்கையாக உருவாகும் இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை என மொத்தம் 62 நாட்கள் நடைபெற்ற புனித யாத்திரையில் 4.5 லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாதுக்கள் ஜம்முவில் குவிய தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பக்தர்களின் வசதிக்காக திறக்கப்பட்ட பால்டால் முகாமை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    • அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.
    • 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது.

    ஸ்ரீநகர்:

    அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது.

    ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை அமர்நாத் யாத்திரை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.

    • ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை அமர்நாத் யாத்திரை
    • இதுவரை 4.15 லட்சம் பத்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய 4-வது வருட தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று ஜம்முவில் உள்ள முகாமிற்கு சென்றனர். அதிகாரிகள் காரணம் ஏதும் கூறாமல், யாத்திரை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது. அதோடு ஜம்மு-காஷ்மீரை இரண்டு மாநிலமாக பிரித்தது. அசாம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம், ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஜம்முவிற்கு வரும் யாத்ரீகர்கள் என்ணிக்கை கடந்த ஒருவாரமாக குறைந்துள்ளதாகவும், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் யாத்ரீகர்களின் தினசரி பயணத்தை நிறுத்தி, மாற்று நாட்களில் மொத்தமாக அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை வழிபட கடந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து யாத்ரீகர்கள் செல்கின்றனர். அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் வழியாக (48 கி.மீட்டர்), கந்தேர்பால் மாவட்டம் பல்தான் ட்ராக் (14 கி.மீட்டர்) வழியாகவும் இதுவரை 4.15 லட்சம் பேர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    • அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஜூலை 1-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரையில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் சுமார் 3,800 மீட்டர் உயர பனிமலையில் பக்தர்கள் ஏறியபோது 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்றபோது பலியான பக்தர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

    • யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
    • சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    காஷ்மீரின் பாஹல்காமில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இக்கோயிலில் குளிர்காலத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, அமர்நாத் யாத்திரை என்ற புகழ் பெற்ற யாத்திரையின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த யாத்திரை சந்தன்வாரி பகுதியில் ஆரம்பித்து கோயில் வரை நடைபெறும்.

    தற்போது நடைபெற்று வரும் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்க, ஏராளமான சிஆர்பிஎஃப் படையினர் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    "யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உலகில் கிடைக்கக்கூடிய மிக நவீன தொழில்நுட்பத்தை பாதுகாப்பிற்கும் கண்காணிப்பிற்கும் பயன்படுத்துகிறோம். தெற்கு காஷ்மீர் பகுதியில் நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு பருந்து போன்ற விழிப்புணர்வுடன் சிஆர்பிஎஃப் செயல்பட்டு வருகிறது" என சிஆர்பிஎஃப் அமைப்பின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் அவஸ்தி தெரிவித்தார்.

    அமர்நாத் யாத்திரைக்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் உள்ளதா என்று கேட்டதற்கு அவஸ்தி பதிலளித்திருப்பதாவது:

    "குறிப்பிட்டு சொல்லும்படியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. எங்கள் வீரர்கள் ஓய்வெடுக்காமல் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்; 365 நாட்களும் பணியில் இருக்கிறார்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இருக்கிறோம். நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் யாத்திரை குழு சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு உள்ளூர் மக்களின் முழு ஒத்துழைப்பு உள்ளது. அவர்கள் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்குகிறார்கள்.

    இவ்வாறு அவஸ்தி கூறினார்.

    • தமிழக பக்தர்களை மேற்கொண்டு பயணம் செய்ய பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.
    • சி.ஆர்.பி.எப். வீரர்கள் எங்களை காப்பாற்றி முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர்.

    இவர்கள் கடந்த 7-ந் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 14 கி.மீ தூரமுள்ள அமர்நாத் கோவிலுக்கு சென்று மலைச்சாலையில் நடந்து சென்று பனி லிங்கத்தை தரிசித்தனர்.

    அன்று இரவு கோவிலில் தங்கி மீண்டும் மறுநாள் நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து ஸ்ரீ நகருக்கு புறப்பட்டபோது நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டானது.

    இதையடுத்து தமிழக பக்தர்களை மேற்கொண்டு பயணம் செய்ய பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.

    பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் யாரும் இங்கிருந்து செல்ல முடியாது என அவர்களை அங்கேயே தங்க அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மணிக்காம்ப் என்ற முகாம் பகுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக அவர்கள் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த குழுவில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி, தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன் நெய்வேலியைச் சேர்ந்த சரவணன், சண்முகராஜ், நிரஞ்சன், சகுந்தலா, மணி என 21 பேர் சிக்கியுள்ளனர்.

    இதுகுறித்து சின்னமனூரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப். வீரர்கள் எங்களை காப்பாற்றி முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    கடந்த 1-ந் தேதி தேனி மாவட்டத்தில் இருந்து வந்த நாங்கள் 7-ந் தேதியே சாமி தரிசனம் செய்து முடித்து விட்டோம். 9-ந் தேதி நாங்கள் ஊர் திரும்ப வேண்டிய நிலையில் 4 நாட்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.300 செலவாகிறது. சுகாதாரமான தண்ணீர், உணவு கிடைக்கவில்லை. வயதான பலர் இங்கு எங்களுடன் உள்ளதால் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என்ற ஏக்கம் நிலவி வருகிறது.

    தமிழக அரசு எங்களை ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அரசு எந்தவித உத்தரவாதமும் அளிக்காததால் அச்சத்துடனேயே உள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றனர்.

    இதனிடையே தங்கள் உறவினர்களை எப்போது காண்போம் என்ற ஏக்கத்தில் அவர்களது குடும்பத்தினரும், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் இருந்து 20 பேர் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு சென்று 8-ந்தேதி பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
    • பலத்த மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.

    சென்னை:

    ஜம்மு-காஷ்மீரில் இமய மலை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம்.

    அதேபோல் இப்போதும் யாத்திரை தொடங்கிய நிலையில் அங்கு பெய்து வரும் பலத்த மழை, நிலச் சரிவு, வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் இருந்து 20 பேர் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு சென்று 8-ந்தேதி பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    அதன்பிறகு மலையில் இருந்து இறங்கும் சமயத்தில் பலத்த மழை பெய்ததால் அவர்களால் உடனடியாக வரமுடியவில்லை. கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் ராணுவ வீரர்கள் உதவியுடன் ஸ்ரீநகரில் 'பால்டால்' என்ற இடத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    சென்னையை சேர்ந்த ரம்யா உள்பட 20 பேர் அங்கிருந்து தமிழகத்துக்கு வருவதற்கு உதவி கேட்ட நிலையில் ராணுவ வீரர்கள் அந்த சாலையை அதற்குள் சரிப்படுத்தி கொடுத்துவிட்டனர்.

    இதனால் 2 பெண்கள் உள்பட 11 பேர் நாளை ரெயில் மூலம் ஈரோடு வருகிறார்கள். மீதம் உள்ள 9 பேர் விமானத்தில் சென்னை வருகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
    • 700-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை காசிகுண்ட் ராணுவ முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. யாத்திரை தொடங்கிய பக்தர்கள், தங்கள் வழிப்பாதைகளில் முன்னேற முடியாமல் சிக்கித் தவித்தனர். மூன்றாவது நாளாக இன்றும் யாத்திரை தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று மதியம் வானிலை ஓரளவு சீரடைந்ததையடுத்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. பஞ்சதர்னி மற்றும் ஷேஷ்நாக் முகாம்களில் இருந்து யாத்திரை தொடங்கியது. குகைக் கோவிலைச் சுற்றி வானம் தெளிவானவுடன், அதிகாரிகள் வாயில்களை திறந்து, அமர்நாத் குகைக்கோயிலுக்குள் சென்று இயற்கையாக உருவாகியிருக்கும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்குள்ள சூழ்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, கனமழை காரணமாக சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை ராணுவத்தினர் அழைத்துச் சென்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ×