என் மலர்
நீங்கள் தேடியது "உளவுத்துறை எச்சரிக்கை"
- யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள்.
- அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
ஜம்முகாஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ந்தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் செல்வார்கள். மொத்தம் 12 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள்.
இதற்கிடையே லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது. பிர்பஞ்சால் காட்டில் மறைந்து இந்த தாக்குதலை நடத்தலாம் என கருதப்படுகிறது. இதை தொடர்ந்து அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ராணுவ தளபதி பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து இருந்தது.
- தற்போது நிலவும் வறட்சியால் பயிர் செய்வதற்கு நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்ட சில குழுக்கள் திட்டமிட்டனர்
கொழும்பு:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பின்னர் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளா தார மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, "கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நடந்தது போன்ற பொது அமைதியின்மையை உருவாக்க சில குழுக்கள் முயற்சித்ததாக உளவுத்துறை அறிக்கைகள் அளித்துள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறும்போது, "தற்போது நிலவும் வறட்சியால் பயிர் செய்வதற்கு நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் பிரச்சி னைகளை ஏற்படுத்தினர்.
விவசாய அமைச்சர் வீட்டை சுற்றி வளைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. வறட்சியால் ஏற்படும் தண்ணீர் நெருக்கடியை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் சிலர் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்ட சில குழுக்கள் திட்டமிட்டனர்" என்றனர்.
- இலங்கையில் சீன ராணுவப்படை குவிக்கப்பட்டதால் நடவடிக்கை
- மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.
- லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
அக்.18-
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவதை பயன்படுத்தி அங்கு சீன நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன நாட்டின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்தது. இந்த நிலையில் சமீப காலமாக இலங்கையில் சீன ராணுவ படை குவிக்கப்பட்டு சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இலங்கையின் அண்டை நாடான இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இரவு-பகலாக போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மற்றும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் இந்த பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் ரோந்து சென்று சந்தேகப்படும்படியான படகுகள் ஏதாவது வருகிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.
லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.






